சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மத் பின் சல்மானினால் இந்த வருடம் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான அனுசரணை வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் தெரிவித்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் களனிகம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நீதிச் சேவைகள் ஆணைக்குழு புத்தளம் மற்றும் சிலாபம் நீதி நிர்வாகப் பிரிவின் காதிநீதிபதியாக கடமையாற்றியவரை பதவி நீக்கம் செய்திருந்தும் குறிப்பிட்ட காதிநீதிவான் தொடர்ந்தும் தனது பதவியில் அமர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா காதிநீதிவான்களின் சம்மேளனம் நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளருக்கு முறைப்பாடு செய்துள்ளது.
தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. அவர் நாட்டைவிட்டு தப்பிச்சென்றபோது முஸ்லிம் நாடே அவருக்கு தஞ்சம் வழங்கியதை அவர் மறந்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் சட்டவிரோதமாக கடமையினை மேற்கொண்டு வந்த புத்தளம் மாவட்ட முன்னாள் காதிநீதிவான் கடந்த செவ்வாய்க்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முற்று முழுதாக ஓர் அரசியல் சூழ்ச்சியே. இச் சூழ்ச்சியின் முழு விபரங்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். அதற்காகவே நாங்கள் முயற்சித்து வருகிறோம். இதற்காக முஸ்லிம் சமூகம் எமக்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.