முதுமையை சாதகமாக எதிர்கொள்வது எப்படி?

0 160

ஹாபிஸ் இஸ்ஸ­தீன்

அன்று ஒரு நண்­ப­ரோடு பேசிக் கொண்­டி­ருந்தேன். “நான் நீண்ட காலம் வாழ வேண்டும் என எனது பிள்­ளைகள் அனை­வரும் தினமும் பிரார்த்­தித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்” என்றார் நண்பர், சிறிது கவலை தோய்ந்த முகத்­துடன். “அது நல்­லது தானே! இதை ஏன் கவ­லை­யோடு சொல்­கி­றீர்கள்?” என்று நான் அவ­ரிடம் கேட்டேன்.

“எனது நீண்ட ஆயு­ளுக்­காக அவர்கள் பிரார்த்­திப்­பது நல்­ல­துதான். ஆனால் நான் முதுமை அடைந்து நலி­வுற்று விடு­வேனோ என்ற பயமும் அவர்­களை உள்­ளூர வாட்டிக் கொண்­டி­ருக்­கி­றது என்­பது எனக்குத் தெரியும்” என்றார் நண்பர்.

மனித வாழ்க்­கையின் பரி­தாப நிலையே இதுதான். தம் பெற்றோர் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை பிள்­ளை­க­ளுக்கு இருக்­கி­றது. அதே வேளை அவர்கள் முதுமை அடைந்து, பல­வீ­ன­முற்று, எதிர்­கா­லத்தில் தமக்குச் சுமை­யாக மாறி விடு­வார்­களோ என்ற பயமும் சில பிள்­ளை­க­ளிடம் இருக்­கத்தான் செய்­கி­றது. முதுமை அடை­யா­மலே ஆயுளை நீட்­டு­வ­தற்கு ஒரு வழியை யாரும் கண்­டு­பி­டித்­தாலே அன்றி, இந்த ஆசையும் பயமும் பரம்­பரை பரம்­ப­ரை­யாக சங்­கிலித் தொடர் போல் நீடிக்­கத்தான் போகி­றது.

சிறு­வ­யது முதலே வீட்­டிலும் சுற்­ற­ய­லிலும் பல முதி­ய­வர்­க­ளோடு நெருங்கி உற­வாடக் கிடைத்­த­தனால், முதுமைப் பரு­வத்தின் சாதக பாத­கங்­களை உணர்வு பூர்­வ­மாக அறிந்து கொள்­வ­தற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்­தது. அது பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்­வத்தில் சில முதியோர் இல்­லங்­க­ளுக்குச் சென்று அங்­குள்ள முதி­ய­வர்­க­ளுடன் நெருங்கி உரை­யா­டினேன். அவர்­க­ளது உள்­ளங்­களில் புதைந்து கிடந்த ஏக்­கங்­க­ளையும் ஏமாற்­றங்­க­ளையும் வலி­க­ளையும் அறிந்து கொண்ட போது முது­மை­ய­டைய முன்­னரே மரணம் வரு­வ­துதான் பாக்­கி­யமோ என்ற எண்ணம் கூட வந்­தது.

எனவே முது­மையைச் சாத­க­மான முறையில் எதிர்­கொள்­வ­தற்கு எம்மைத் தயார்­ப­டுத்திக் கொள்­வது அவ­சியம். மற்­ற­வர்­க­ளுக்குத் துன்பம் இல்­லாத முறையில் வயோ­தி­பத்தை அனு­ப­விப்­பது எப்­படி என்­பது பற்றிச் சிந்­தித்து அதற்­காக நாம் மான­சீ­க­மாகத் தயா­ராக வேண்டும். எப்­ப­டியோ நானும் தட்டுத் தடு­மாறி இப்­போது வயோ­திபப் பரு­வத்தை அடைந்து விட்டேன். இன்னும் சில வாரங்­களில் 73வது அக­வையில் கால் பதிக்கப் போகின்றேன். இந்த நிலையில், முது­மையைச் சாத­க­மான முறையில் எதிர்­கொள்­வ­தற்குத் தயா­ரா­வது எப்­படி என்­பது தொடர்­பாக என்­னு­டைய ஆலோ­ச­னைகள் சில­வற்றை இங்கு முன்­வைக்­கின்றேன். இந்த விட­யத்தில் அக்­கறை உள்­ள­வர்கள் தொடர்ந்து வாசிக்­கலாம்.

முது­மையில் எமது பிள்­ளை­களும் நெருங்­கிய உற­வி­னர்­க­ளும்தான் எம்மைப் பரா­ம­ரித்து ஆத­ரவு வழங்கப் போகி­றார்கள். எனவே அவர்­க­ளு­டைய சொந்த வாழ்க்­கைக்குப் பங்­கமோ, தொல்­லையோ இடை­யூறோ ஏற்­ப­டாத வகையில், வாழ்ந்­து­விட்டுப் போவதே இங்கு எமது பிர­தான நோக்­க­மாக இருக்க வேண்டும்.

* நடுத்­தர வய­தி­லேயே உயர் ரத்த அழுத்தம், நீரி­ழிவு, சிறு­நீ­ரகச் செய­லி­ழப்பு, மூல நோய் போன்ற நீண்ட காலத்­திற்­கு­ரிய கோளா­று­களால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் உரிய முறையில் சிகிச்சை பெற்றுக் கொள்­வதும் பொருத்­த­மான முறையில் தமது வாழ்க்கைப் பாணியை மாற்றி அமைத்துக் கொள்­வதும் மிக முக்­கியம். உடலில் வீரியம் உள்ள காலத்தில் இந்தக் கோளா­று­களை பொருட்­ப­டுத்­தாது அலட்­சி­ய­மாக நடந்து கொள்­ப­வர்கள் முது­மையில் தமக்கும் பிற­ருக்கும் தொந்­த­ரவு கொடுப்­ப­வர்­க­ளாக மாறி­வி­டுவர்.

* பார்வை, கேள்வி போன்ற புலன்­க­ளிலும் பற்கள், கைகால் மூட்­டுக்கள் போன்­ற­வற்­றிலும் ஏதேனும் கோளா­றுகள் இருப்பின் அவற்­றுக்கு நேர காலத்­து­ட­னேயே பரி­காரம் தேடிக் கொள்ள வேண்டும். இந்த விட­யத்தில், வயோ­தி­பத்தை அடையும் வரை பொடு­போக்­காக இருப்­ப­வர்கள் மனம் வருந்தி கைசே­தப்­பட நேரிடும்.

* சம்­பா­திக்கும் காலத்தில், முதுமைப் பரு­வத்தில் வரு­மானம் வரக்­கூ­டிய வழி ஒன்றை ஏற்­பாடு செய்து கொள்ள முடி­யு­மாயின் நல்­லது. அல்­லது சேமிப்பு ஒன்­றை­யேனும் வைத்­தி­ருக்க வேண்டும். பிறரில் தங்கி இருப்­பதை குறைத்துக் கொள்ள இது உதவும். (ஓய்­வூ­தி­யத்­திற்கு தகு­தி­பெறும் வரை நான் அரச தொழிலில் ஒட்டிக் கொண்­டி­ருந்­த­தற்கு இதுவும் ஒரு காரணம்)

* மற்­ற­வர்­க­ளுக்குத் தொந்­த­ரவு இல்­லாத முறையில் ஈடு­ப­டக்­கூ­டிய சில பொழு­து­போக்­கு­களை பரிச்­சயப்படுத்­திக்­கொள்ள வேண்டும்.

* தத்­த­மது நாவு­க­ளுக்கு ஏற்­ற­வ­கையில் உண­வு­களும் பானங்­களும் சுவை­யாக இருக்க வேண்டும், உரிய நேரத்­திற்கு கிடைக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்­பு­களை எல்லாம் அடி­யோடு துறந்­து­விட வேண்டும். கிடைப்­பதைத் திருப்­தி­யோடு உண்டு சந்­தோ­ஷப்­ப­டு­வ­தற்கு தன் உள்­ளத்தைப் பயிற்­று­வித்துக் கொள்ள வேண்டும். தரப்­படும் உண­வையும், செய்­யப்­படும் பரா­ம­ரிப்­பையும் பற்றி எதிர்­ம­றை­யாக நினைக்­கவோ, விமர்­சிக்­கவோ முற்­ப­டக்­கூ­டாது.

* முதுமை அடையும் போது மனித உடலில் பல­வி­த­மான நோவு­களும் பல­வீ­னங்­களும் கோளா­று­களும் ஏற்­ப­டு­வது இயற்கை என்­பதைப் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். சிறிய சிறிய நோவு­க­ளுக்கும் உடற் பல­வீ­னங்­க­ளுக்கும் நிரந்­தர பரி­காரம் தேட நினைப்­பதும், உடல் ஆரோக்­கியம் முன்­னைய நிலை­மைக்குத் திரும்ப வேண்டும் என எதிர்­பார்ப்­பதும் இயற்­கைக்கு மாறா­னது என்­பதை உணர்ந்து கொள்­வது அவ­சியம். அத்­தோடு தமது உடல் அசௌ­க­ரி­யங்கள் பற்றி வருவோர் போவோ­ரிடம் சொல்லிக் கொண்­டி­ருக்­காமல் மற்­ற­வர்கள் மீது அக்­கறை காட்டிப் பேச பழக வேண்டும்.

* 70 வயது பிந்­திய பின் தனது உடலில் ஏற்­படும் கோளா­று­களைக் குணப்­ப­டுத்­து­வ­தற்­காக மில்­லியன் கணக்கில் செல­வாகும் சிகிச்­சை­களை நாடக் கூடாது. பதி­லாக, palliative treatment எனப்­படும் தற்­கா­லிக வலி நீக்கும் சிகிச்­சை­க­ளுடன் காலத்தைக் கடத்­தக்­கூ­டிய மனத் துணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில வயோ­தி­பர்கள் இப்­ப­டி­யான சிகிச்­சை­க­ளுக்­காக தமது பிள்­ளை­களின் அல்­லது உற­வி­னர்­களின் பெருந்­தொகைப் பணத்தை விரயம் செய்ய வழி வகுத்து விட்டு சொற்ப காலத்தில் இறந்து போய்­வி­டு­கி­றார்கள். இப்­படி மற்­றவர் சிர­மப்­பட்டுச் சம்­பா­தித்த பணத்தை விரயம் செய்­வ­தற்கு நாம் கார­ண­மாக அமைந்து விடக்­கூ­டாது.

* உடல் வலிமை இருந்த காலத்தில் செய்த காரி­யங்­களை எல்லாம் முது­மை­யிலும் செய்ய முடியும் என அடம் பிடிக்கக் கூடாது. நிலை­மைக்கு ஏற்ப விவே­க­மாக நடந்து கொள்ள வேண்டும்.

* குடும்­பத்தில் எமக்­கி­ருந்த ஆட்சி அதி­காரம், முன்­னு­ரிமை, முதன்மை அந்­தஸ்து முத­லி­ய­வற்றைப் பசு­மை­யான நினை­வு­க­ளாக மாற்றிக் கொண்டு அவற்றை நினைத்து சந்­தோ­ஷப்­ப­டு­வதில் தவ­றில்லை. ஆனால் தொடர்ந்தும் அவற்றை எதிர்­பார்க்கக் கூடாது. நாம் விரும்­பி­னாலும் விரும்­பா­விட்­டாலும் காலப்­போக்கில் அவை அடுத்த பரம்­ப­ரைக்கு உரித்­தா­கி­விடும் என்ற புரிந்­து­ணர்வு தேவை.

* நாம் எவ்­வ­ளவு அறி­வுத்­த­ரமும் அனு­ப­வமும் கொண்­ட­வர்­க­ளாக இருந்த போதிலும் எடுத்­த­தற்­கெல்லாம் மற்­ற­வர்­க­ளுக்கு அறிவுரையும் ஆலோசனையும் சொல்லும் முன்னைய பழக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும். குறிப்பாக நமது பேரப் பிள்ளைகளின் வளர்ப்பு விடயத்தில் அனாவசியமாக தலையிடக்கூடாது. காலம் மாறியிருக்கிறது; புதிய தலைமுறையினரின் சிந்தனையும் போக்கும் வித்தியாசமாக இருக்கும் என்பதைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

* இறைவனுடனான நெருக்கமே முதுமையில் நிம்மதியைத் தரும் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். மரணத்தைப் பயமின்றி ஏற்றுக் கொள்வதற்கு உகந்த விதத்தில் தனது ஆன்மீக ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ள வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.