ஹஜ் யாத்திரை செல்ல சவூதி இளவரசரால் அனுசரணை வழங்கப்படுவதாக இணையத்தளத்தில் போலிப் பிரசாரம்

விளக்கமளிக்கிறது கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம்

0 68

(றிப்தி அலி)
சவூதி அரே­பி­யாவின் இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்­மா­னினால் இந்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­கான அனு­ச­ரணை வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக சமூக ஊட­கங்­களில் பரவும் செய்தி முற்­றிலும் தவ­றா­னது என கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூது­வ­ரா­லயம் தெரி­வித்­தது.

சுமார் 7 இலட்­சத்து 50ஆயிரம் முஸ்­லிம்கள் இந்த வருடம் ஹஜ் கட­மை­யினை மேற்­கொள்ள இள­வ­ர­ச­ரினால் அனு­ச­ரணை வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக குறித்த சமூக ஊடகப் பதிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த வாய்ப்­பினை பெற விரும்­பு­ப­வர்கள் குறித்த இணை­யத்­த­ளத்தின் ஊடாக தங்­களை பதி­வு­செய்­யு­மாறும் அப் பதிவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் கொழும்­பி­லுள்ள சவூதி அரே­பிய தூது­வ­ரா­ல­யத்தின் உயர் அதி­கா­ரி­யொ­ரு­வரை தொடர்­பு­கொண்டு வின­விய போது, “சமூக ஊட­கங்­களில் பரப்­பப்­படும் இத்­த­கவல் முற்­றிலும் பொய்­யா­ன­தாகும்” என கூறினார்.

அத்­துடன், இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்­மா­னினால் இந்த வருடம் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக எந்­த­வித விண்­ணப்­பங்­களும் இது­வரை கோரப்­ப­ட­வில்லை என அவர் குறிப்­பிட்டர்.

“குறித்த பதிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள இணை­யத்­தள முக­வரி சவூதி அரே­பி­யாவின் உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­தள முக­வ­ரியும் அல்ல” என தூத­ர­கத்தின் உயர் அதி­காரி மேலும் தெரி­வித்தார்.

பொது­மக்­களின் விப­ரங்­களை சட்­ட­வி­ரோ­த­மாக சேகரிக்கும் நோக்கில் இது போன்று தொடர்ச்சியாக பரப்பப்படும் போலித் தகவல்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.