ஐந்து வரு­டங்­கள் கடந்தும் கிட்­டா­த­ நீ­தி

0 149

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக ஐந்­து வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்படவுமில்லை.

இத்தாக்குதலின் சூத்திரதாரிகளை நீதியின் முன் நிறுத்துமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அழுத்தங்கள் வழங்கப்படுகின்ற போதிலும் இதுவரை சாதகமான பலன் எதுவும் கிட்டவில்லை.

இத் தாக்குதலைப் பயன்படுத்தி பெரும்பான்மை சிங்கள மக்களை உசுப்பேற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டை மேலும் சீரழித்ததைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. மக்களின் எழுச்சிக்கு முகங்கொடுக்க முடியாது ஆட்சியைத் துறந்து, நாட்டை விட்டுத் தப்பியோடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை. எனினும் அவர்கள் இன்று அதே சுகபோகத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்ந்து கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மக்களோ நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இத் தாக்குதலில் கிறிஸ்தவ சமூகமே நேரடியாகப் பாதிக்கப்பட்டது. 270க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தேவாலயங்கள் பாதிக்கப்பட்டன. இனங்களுக்கிடையிலான நல்லுறவு சீர்குலைக்கப்பட்டது. சுற்றுலாத்துறை முற்றாக பின்தள்ளப்பட்டது. மொத்தத்தில் இத் தாக்குதல் நாட்டை மிகப் பாரிய பின்னடைவுக்குள் தள்ளியது. எனினும் இதுவரை இத் தாக்குதலைத் திட்டமிட்டு வழிநடாத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியையும் பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் சிலரையும் இத்தாக்குதல் தொடர்பில் குற்றவாளிகளாகக் கண்டறிந்த நீதிமன்றம், அவர்களை நஷ்டயீடு செலுத்துமாறு மட்டுமே பணித்தது. எனினும் இத் தாக்குதல் நடக்கும் வரை வாளாவிருந்த இவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படவில்லை. அதேபோன்றுதான் சஹ்ரான் குழுவினரை வழிநடாத்திய சக்திகள் யார் என்பதும் வெளிப்படவில்லை. இத் தாக்குதலின் பின்னணியில் மூன்றாம் தரப்பொன்று இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் கூறியிருந்தார்.

அதேபோன்று இதன் சூத்திரதாரிகளை தெளிவாகக் கண்டறியும் வகையில் பலரும் பகிரங்கமாகவே சாட்சியங்களை வழங்கியிருக்கிறார்கள். எனினும் இதுவிடயத்தில் சாதகமான முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை.

துரதிஷ்டவசமாக இத் தாக்குதலை நடாத்தியவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறு தீவிரவாதக் குழுவினர் என்பதால் இதற்காக முஸ்லிம் சமூகம் பாரிய விலை கொடுக்க வேண்டி ஏற்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இவர்களில் கணிசமானோர் விடுவிக்கப்பட்டு விட்ட போதிலும் இன்னும் பலர் 5 வருடங்களுக்கும் மேலாக சிறைகளில் உள்ளனர். விடுவிக்கப்பட்டவர்கள் கூட சமூகத்தில் மீண்டும் முன்னரைப் போன்று சகஜமாக இயங்க முடியாதளவுக்கு சந்தேகக் கண்கொண்டே நோக்கப்படுகின்றனர். புலனாய்வுப் பிரிவினர் இன்றும் அவர்களைக் கண்காணித்தே வருகின்றனர். இறுக்கமான பிணை நிபந்தனைகள் காரணமாக அவர்களால் சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையும் உள்ளது.

அண்­மையில் சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்­பது எனக்குத் தெரியும் என முன்­னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறிக்­கை­விட்­டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் சூடு­பி­டித்­தது. அவரை சிஐ­­டி­யினர் விசா­ரித்­தனர். நீதி­மன்­றுக்கும் அவர்­ அழைக்­கப்­பட்­டார். எனினும் எதிர்­பார்த்­த­ளவு எதுவும் நடக்­க­வில்லை. இதன் மூலம் ஒரு சிறு தக­வ­லேனும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.
இந்த வருடம் தேர்தல் நடக்­க­வி­­ருப்­ப­தால் அர­சி­யல்­வா­திகள் உயிர்த்த ஞாயிறு விவ­கா­ரத்தை மீண்டும் கையி­லெத்­துள்­ளனர் என்­பதே நிதர்­ச­ன­மாகும். இதன் மூலம் பாதிக்­கப்­பட்­ட சமூ­கங்­க­­ளின் வாக்­கு­களைக் கொள்­ளை­ய­டிக்­கலாம் என்­பதே அவர்­க­ளது எண்ணம். மாறாக அப்­பாவி மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக் கொடுப்­ப­தல்­ல.

அந்த வகையில் இந்த ஏமா­ற்று நாட­கங்­க­ளுக்கு முற்றுப் புள்ளி வைத்து உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­களைக் கண்­ட­றிந்து சட்­டத்தின் முன்­நி­றுத்­தும் வகையில் இந்­நாட்டில் வாழும் சகல இனங்­களைச் சேர்ந்த மக்­களும் ஒன்­றி­ணைந்து குரல் கொடுக்க வேண்டும். இன்றேல் எதிர்­வரும் தேர்­தல்­களில் எந்­த­வொரு அர­சி­யல்­வா­தி­க­ளு­க்கும் வாக்­க­ளிக்­க­மாட்­டோம் என்ற நிபந்­த­னையை முன்­னி­று­த்த வேண்டும். இந்த சந்­தர்ப்­­பத்தை பாதிக்­கப்­பட்ட சமூ­கங்கள் ஒரு­போதும் தவ­ற­விடக் கூடாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.