இன்று நாட்டுக்கு தேவை புதிய ஆட்சியும் புதிய அரசியல் கலாசாரமுமே!

0 1,401

நேர்காணல்:
பிரியந்த கொடிப்பிலி
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

தற்­போது இலங்­கைக்குப் புதிய ஆட்­சி­யா­ளர்­களும் புதிய அர­சியல் கலா­சா­ர­முமே தேவை­யா­ன­தாகும்’ என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநுர குமார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.
நிகழ்­கால அர­சியல் தொடர்பில் ‘ஞாயிறு லங்காதீப’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இவ்­வாறு கூறினார். அவ­ரு­ட­னான நேர்­காணல் வருமாறு:

கேள்வி: சஜித் பிரே­ம­தாச வீதிக்கு இறங்கிவிட்டார். அநுர குமார திஸா­நா­யக்க வீதிக்கு இறங்­கு­வது எப்­போது?

கடந்த காலம் முழு­வதும் விவ­சாய மக்­களின் பிரச்­சினை, ஆசி­ரி­யர்­களின் பிரச்­சினை, பொது­வாக மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­காக வீதிக்கு இறங்­கினேன். அதனால் புதி­தாக வீதிக்கு இறங்க வேண்டும் என்று ஒன்று இல்லை. அத்­தோடு இவ்­வாரம் கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்­றி­னையும் ஏற்­பாடு செய்­துள்ளோம்.
இன்று அர­சாங்­கத்தை விரட்­டி­ய­டிப்­ப­தற்­காக முழு நாடும் தயா­ராகி வரு­கி­றது. அர­சாங்­கத்தை விரட்­டி­ய­டிப்­பது போன்று விஷே­ட­மாக நாட்டை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய புதிய ஆட்சி எவ்­வாறு அமைய வேண்டும் என்­பது தொடர்­பிலும் நாம் சிந்­திக்க வேண்டும். இதற்­காக மக்­க­ளுடன் திறந்த கலந்­து­ரை­யாடல் அவ­சியம்.

கேள்வி: அப்­ப­டி­யென்றால் நீங்கள் தற்­போது புதி­யவோர் ஆட்­சி­பற்றி கலந்­து­ரை­யாடி வரு­கி­றீர்­களா?

கடந்த காலம் முழு­வதும் எமது நாட்டில் அர­சாங்­கத்தை மாற்­று­வ­தற்கு முயற்­சிக்­கப்­பட்­டமை அர­சாங்­கத்­துக்­கி­ருந்த எதிர்ப்­பி­னா­லாகும். என்­றாலும் மீண்டும் நிறு­வப்­படும் அர­சாங்கம் முன்­பி­ருந்த அர­சாங்­கத்தை விடவும் மக்­க­ளுக்கு எதி­ரான விட­யங்­களில் இறங்­கி­யுள்­ளன. உதா­ர­ண­மாக 2015இல் ராஜபக்ஷ அர­சாங்கம் வீழ்த்­தப்­பட்­டது. களவு மற்றும் ஊழல்கள் நிறைந்த ஆட்சி என்று ராஜபக்ஷ அர­சாங்கம் தோற்­க­டிக்­கப்­பட்­டது. என்­றாலும் அதற்குப் பிறகு ஆட்­சிக்கு வந்த மைத்­திரி – ரணில் ஒன்­றி­ணைந்த அர­சாங்கம் தோற்­க­டிக்­கப்­பட்ட ராஜபக்ஷ ஆட்சி நல்­லது என்று நினைக்­கு­ம­ள­வுக்கு மிக­வும் ­மோ­ச­மான ஆட்­சியை நடத்­தி­யது. மக்­களில் சிலர் இவ்­வாறே நினைத்­தார்கள். ஏனென்றால் மைத்­திரி – ரணில் ஆட்சி அவ்­வ­ள­வுக்கு மோச­மான முறையில் அமைந்­தி­ருந்­தது.
இந்­நாட்டில் நேர­டி­யாக தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொள்ள முடி­யாத ஒரு தலை­வ­ராக அன்று கரு­தப்­பட்ட ஜனா­தி­பதி மைத்­த­ரி­பால சிறி­சேன தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவை விட சிறந்­தவர் என்று இன்று சிலர் நினைக்­கு­ம­ள­வுக்கு கோத்­தா­பய ராஜ­பக்ஷ வீழ்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் ஆட்சி நல்­லாட்சி அர­சாங்­கத்தை விட அனைத்து வழி­க­ளிலும் தோல்வி கண்­டுள்­ளது என்­பது இதி­லி­ருந்து தெளி­வா­கி­றது. கடந்த 74 வரு­டங்­க­ளாக நாட்டை ஆட்சி செய்­வ­தற்கு அவ­ருக்கு, இவ­ருக்கு என ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் மாறி மாறி மக்கள் சந்­தர்ப்பம் வழங்கி வந்­துள்­ளனர். அதனால் இன்­றைய அர­சாங்­கத்தை விரட்­டி­ய­டிப்­ப­துடன் புதிய முற்­போக்கு ஆட்­சி­யொன்­றினை நிறு­வு­வதே தேவை­யா­க­வுள்­ளது. அதற்­கான கலந்­து­ரை­யா­டல்­களை நாங்கள் மக்­க­ளுடன் மேற்­கொண்டு வரு­கிறோம். அவ­ச­ர­மாக அர­சாங்­கத்தை விரட்­டி­ய­டித்து அதனை விட மோச­மான ஆட்­சி­யொன்­றினை கொண்டு வரு­வதை விட எமக்கு நிகழ்­கால பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்தும் மீட்சி பெறு­வ­தற்­கான சிறந்த ஆட்­சி­யொன்றே தேவை.

கேள்வி: 2015 ஆம் ஆண்டு நீங்கள் ராஜபக்ஷ அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தற்­காக செயற்­பட்­டீர்கள். நீங்கள் காய்­களை பறிப்­ப­தற்கு பொல்லால் அடித்த போது காய்கள் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ரணிலின் மடி மீதே வீழ்ந்தன. இம்­மு­றையும் நீங்கள் பொல்லால் அடிக்­கி­றீர்கள். இப்­போது காய்கள் சஜித்தின் மடி­மீதே வீழ்ந்து விடாதா? இறு­தியில் நீங்கள் எப்­போதும் பொல்லால் அடிப்­பது மாத்­திரம் தான்?

2015 இல் ராஜ­பக்ஷ ஆட்­சியை முடி­வுக்கு கொண்­டு­வர வேண்­டு­மென சமூ­கத்தில் பொது­வான கருத்­தொன்று கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது. இந்த கருத்து கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­ட­தற்குக் காரணம் அப்­போது ஜன­நா­ய­கத்­துக்கு பாரிய சவால்கள் உரு­வாகி ஜன­நா­யகம் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­மையே. அதனால் ஜன­நா­ய­கத்தைப் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக கட்சி பேதங்­க­ளின்றி அநேகர் ஒரே கருத்­தினைக் கொண்­ட­வர்­க­ளாக இருந்­தார்கள். பொது மக்­க­ளுக்கு துப்­பாக்கிச் சூடு நடத்­திய, ஊட­க­வி­ய­லா­ளர்­களை துப்­பாக்­கியால் சுட்டுக் கொலை செய்து சமூ­கத்­தையே பீதிக்­குள்­ளாக்­கிய அர­சாங்­கத்தை விரட்­டி­ய­டிக்க வேண்டும் என்ற பொது­வான கருத்தில் அநேகர் இருந்­தார்கள். இதுதான் அன்று இருந்த பெரும்­பான்­மை­யோரின் பொது­வான கருத்து. என்­றாலும் இன்­றைய நிலைமை அதனை விட வேறு­பட்­டது. இன்று கோத்­தா­ப­யவின் அர­சாங்­கத்­திற்கு எதிர்ப்பு இருப்­பது போல், கோத்­தா­ப­யவை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு எதிர்ப்­பினை கட்­டி­யெ­ழுப்­பிய நல்­லாட்சி அர­சாங்­கத்­துடன் தொடர்­பா­ன­வர்­க­ளுக்கும் அதே போன்ற எதிர்ப்பு உள்­ளது. இது ஓர் விஷேட நிலை­மை­யாகும்.

இன்று நாட்­டுக்கு புதிய ஆட்­சி­யொன்றும், புதிய அர­சியல் கலா­சா­ரமும் தேவை. இதனைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு முடி­யாமற் போனால் நிலைமை மேலும் மோச­ம­டையும். மக்கள் முன்பு போல் பழைய சம்­பி­ர­தாய ஆட்சி மாற்­றங்­க­ளுக்கு இட­ம­ளிக்கமாட்­டார்கள் என்று நாம் நம்­பு­கிறோம்.

கேள்வி: பெற்றோல், டீசல் வரி­சை­களில் காத்­துக்­கி­டக்கும் போது எரி­வாயு வரி­சை­களில் காத்­தி­ருக்கும் போது மக்­க­ளுக்கு ஏற்­படும் ஆவே­ச­மான கொள்­கைகள், செயற்­பா­டுகள், தேர்தல் அண்­மிக்கும் போது இல்­லாமற் போக மாட்­டாதா?

எத்­தனை பிரச்­சி­னைகள், சவால்கள் ஏற்­பட்­டாலும் மக்கள் பொறுமை காக்கும் ஒரு சந்­தர்ப்பம் இருந்­தது. ஆனால் இந்­நாட்டில் இன்று ஏற்­பட்­டி­ருக்கும் நிலைமை இதற்கு முதல் எப்­போதும் ஏற்­பட்­டி­ராத சிக்­க­லான மிகவும் மோச­மா­ன­தாகும். அதனால் மக்கள் இதற்கு முன்பு செயற்­பட்­டது போன்று இப்­போது செயற்­ப­டு­வார்கள் என்று நான் நினைக்­க­வில்லை. முன்­னைய காலங்­களில் போன்று ஆவே­ச­மாக அர­சாங்­கத்­துக்கு ஏசி விட்டு பின்பு மறந்து விடும் நிலைமை இன்று இல்லை. அதனால் இந்த அர­சாங்­கத்­துக்கு மீண்டும் எந்­தவொரு தேர்­த­லிலும் வெற்­றி­ய­டைய முடியும் என நாம் நினைக்­க­வில்லை.

கேள்வி: இந்த பொரு­ளா­தார பிரச்­சி­னைக்கு உங்கள் தீர்வு என்ன என்­பது தொடர்பில் இப்­போது நாம் பேசுவோம். விமர்­ச­னங்கள் போன்று உங்­க­ளிடம் தீர்­வு­களும் இருக்க வேண்­டு­மல்­லவா?

இந்தப் பிரச்­சினை தானா­கவே உரு­வா­ன­தொன்­றல்ல. எமது நாட்டில் நீண்­ட­காலம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட பொரு­ளா­தார கொள்கை, களவு, ஊழல்கள் நிறைந்த அர­சியல் கலா­சா­ரத்தின் பிர­தி­ப­லனே இது. இந்தப் பிரச்­சி­னைக்கு குறு­கிய கால தீர்­வினைப் போன்றே நீண்­ட­கால தீர்­வு­க­ளையும் தேட வேண்டும். இதற்கு ஊழல், களவு அற்ற நேர்­மை­யான ஆட்சி அவ­சி­ய­மாகும். ஊழல், களவு அற்ற ஆட்­சி­யினால் மாத்­திரம் நாட்டை மீட்­டெ­டுக்க முடி­யாது என சிலர் கூறு­கி­றார்கள். ஆனால் நாட்டை மீட்­டெ­டுக்க வேண்­டு­மென்றால் ஊழல், களவு என்­ப­ன­வற்றை முதலில் ஒழிக்க வேண்டும்.

அடுத்து இந்­நாட்டு மக்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட சொத்­துக்கள் மீண்டும் நாட்­டுக்கே திருப்பிக் கைய­ளிக்­கப்­பட வேண்டும். டொலர் பிரச்­சி­னை­யி­லி­ருந்தும் மீள வேண்­டு­மென்றால், வெளி­நாட்டுப் பணி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து கிடைக்கும் வரு­மா­னத்தை அதி­க­ரித்­துக்­கொள்ள வேண்டும். ஏற்­று­மதி வரு­மா­னத்தை அதி­க­ரித்­துக்­கொள்ள வேண்டும்.

74 வருட அழி­வி­லி­ருந்தும் ஓரிரு வரு­டங்­களில் மீள முடி­யாது. அதனால் திட்­ட­மி­டப்­பட்ட பொரு­ளா­தார முறைமை ஒன்றின் மூல­மா­கவே எம்மால் மீட்சி பெற­மு­டியும் என நாம் நினைக்­கிறோம்.

கேள்வி: ஜே.வி.பி. அழ­கான கதை­களைக் கூறு­கி­றது. அவ்­வாறு சொல்லும் கதை­களை இப்­பூ­மியில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இய­லு­மான தகு­தி­யா­ன­வர்கள் ஜே.வி.பி. யில் இருக்­கி­றார்­களா? என்று கூட சிலர் உங்­களை விமர்­சிக்­கி­றார்­களே?

இது­வரை காலம் இந்­நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஆட்­சி­யா­ளர்­களை விடவும் ஒவ்வோர் அமைச்­சர்கள் அதன் விட­யங்கள் தொடர்பில் பூரண அறி­வுள்ள, அனு­ப­வ­முள்ள, வழங்­கப்­படும் பொறுப்­புக்­களை தவ­றின்றி நிறை­வேற்றும் நேர்­மை­யா­ன­வர்கள் ஜே.வி.பி.யிடம் இருக்­கி­றார்கள். இது தொடர்பில் எவ்­வித சந்­தே­கமும் எழ வேண்­டி­ய­தில்லை. இதனை நான் பொறுப்­புடன் கூறு­கிறேன். அதனால் தற்­போது உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்தும் மீள வேண்­டு­மானால் அதற்கு பல வழிகள் இல்லை. ஒரே ஒரு வழியே உள்­ளது. அது நாங்கள் முன்­வைக்கும் வழி மாத்­தி­ரமே.

கேள்வி: ஜே.வி.பி.க்கு உடைகள் அன்­ப­ளிப்புச் செய்யும் இல­வ­ச­மாக முடி வெட்­டித்­தரும் நண்­பர்கள் தான் இருக்­கி­றார்கள். ஆனால் சஜித் கூறு­கிறார் பல வரு­டங்­க­ளுக்கு என்­றாலும் எண்ணெய் அன்­ப­ளிப்புச் செய்யும் சர்­வ­தேச நண்­பர்கள் அவர்­க­ளுக்கு இருக்­கி­றார்கள் என்­கிறார். உங்­க­ளுக்கு இவ்­வா­றான நண்­பர்கள் இல்­லையா?

சஜித் பிரே­ம­தாச கூறும் வகை­யி­லான பொறுப்­பற்ற , பகி­டி­யான கருத்­துகள் தெரி­விக்கும் அள­வுக்கு நாங்கள் அர­சியல் முட்­டாள்கள் அல்ல. இவ்­வா­றான பேச்­சுகள் மூலம் அவர்­க­ளது இரா­ஜ­தந்­தி­ரத்தின் தன்மை புரி­கி­றது. கடந்த ஆட்­சியில் இரா­ஜ­தந்­திர கொடுக்கல் வாங்­கல்­க­ளுக்குப் பதி­லாக ஒவ்­வொரு நாடு­க­ளு­டனும் அந்த நாடு­களின் நிறு­வ­னங்­க­ளுடன் நடை­பெற்ற டீல்­களை நாம் கண்டோம். எம்­மிடம் அதற்கும் அப்பால் கொள்­கை­ய­ள­வி­லான இரா­ஜ­தந்­திர வேலைத்­திட்­ட­மொன்று உள்­ளது. அது எண்ணெய் சிறிது வழங்கும், டொலர் கொஞ்சம் வழங்கும் நண்­பர்கள் இருக்­கி­றார்கள் என பெருமை பேசிக் கொள்­ப­வர்கள் அல்ல நாம்.

கேள்வி: இப்­போது அர­சாங்­கத்­தி­லி­ருந்தும் அர­சாங்­கத்­துக்கு எதிர்­க்க­ருத்­தினைக் கொண்­ட­வர்கள் வெளி­யேறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். உங்­க­ளது முன்­னைய நண்பர் விமல் வீர­வன்ச தான் தற்­போது போராட்­டத்தை நடத்­து­கிறார். அர­சாங்­கத்­துக்கு எதி­ரான போராட்­டத்தில் அவ­ருக்கும் ஒரு பங்கு கிடைக்கும் அல்­லவா?

அவர்கள் இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்­களே அன்றி வேறு நபர்கள் அல்ல. இப்­போது அவர்கள் எத்­த­கைய விமர்­ச­னங்­களை முன்­வைத்­தாலும் பிரச்­சி­னை­களைக் கட்­டி­யெ­ழுப்­பி­ய­வர்கள் அவர்கள். இது அவர்கள் தங்­க­ளது அர­சியல் எதிர்­கா­லத்­துக்­காக சப்­த­மி­டு­வதைத் தவிர வேறெ­துவும் எமக்குத் தெரி­ய­வில்லை.

கேள்வி: தற்­போது அனைத்துப் பக்­கங்­க­ளி­லி­ருந்தும் தாக்­கப்­பட்டு வரு­ப­வரே பசில் ராஜ­பக்ஷ. பசில் பற்றி உங்­க­ளது கருத்து எப்­ப­டி­யுள்­ளது?

இது முழு அர­சாங்­கத்­தையும் காப்­பாற்றி பசிலை குற்­ற­வா­ளி­யாக்­கி­விட்டு தப்­பித்­துக்­கொள்ளும் ஒன்­றல்ல. இது பசில் ராஜ­ப­க்ஷவின் பிரச்­சினை மாத்­தி­ரமே என்றால் கோத்­தா­ப­யக்கள், மஹிந்த என்போர் ஒன்­று­மில்­லையா என்று கேட்கத் தோன்­று­கி­றது. இதற்கு முன்பு இவ்­வா­றான ஒரு­வ­ராக நாங்கள் பி.பீ. ஜய­சுந்­த­ரவைக் கண்டோம். எல்லாப் பிரச்­சி­னை­க­ளுக்கும் காரணம் பி.பீ. ஜய­சுந்­த­ரவே என்று கூறி அவர்கள் கைகளைக் கழுவிக் கொள்­ளவே முயற்­சித்­தார்கள். தற்­போது பி.பீ.யை விலக்கி விட்­டார்கள் என்று பிரச்­சினை தீர்ந்­து­விட்­டதா? பசில் என்­ப­வரும் அவ்­வா­றான ஒரு கதா­பாத்­தி­ரமே. தற்­போ­தைய பிரச்­சி­னை­க­ளுக்கு இந்தக் கூட்­டாட்­சியைச் சேர்ந்த அனை­வ­ருமே பொறுப்புக் கூற வேண்டும். இதில் கோத்­தா­ப­ய­வுக்கும் மஹிந்­த­வுக்கும் பசி­லுக்கும் விம­லுக்கும் ஏனை­ய­வர்­க­ளுக்கும் பொறுப்­பில்லை என கழன்­று­விட முடி­யாது. இவர்கள் அனை­வரும் ஒன்று சேர்ந்து தான் இந்த அழி­வினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். பசில் ராஜ­பக்ஷ தொடர்பில் பாரிய குற்­றச்­சாட்­டுக்கள், விமர்­ச­னங்கள் அநேகம் உள்­ளன. என்­றாலும் இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு பசில் ராஜ­பக்ஷ தனி ஆளாக பொறுப்புக் கூற வேண்டும் என்ற கருத்­தினை உரு­வாக்­கு­வது தவறு. அண்­ணன்மார், தம்­பிமார், மகன்மார், தந்­தைமார், அவர்­களைச் சூழ­வுள்ள ஏனையோர் அனை­வரும் இந்தப் பிரச்­சி­னை­களின் பங்­கு­தா­ரர்கள்.

கேள்வி: தற்­போது மீண்டும் தேசிய அர­சாங்­க­மொன்றை நிறுவுவது பற்றி பேசப்­ப­டு­கி­றது. இது தொடர்­பாக நீங்கள் என்ன கூறு­கி­றீர்கள்?

இவர்கள் என்ன நினைக்­கி­றார்­களோ அதைச் செய்ய முயற்­சிக்­கி­றார்கள். தங்­க­ளது அர­சியல் அதி­கா­ரத்தை காப்­பாற்றிக் கொள்­வ­தற்கு இந்தக் கட்­சி­க­ளுக்கு நினைத்த தீர்­மா­னங்­களை எடுக்க முடியும். நினைத்­த­வற்றைச் செய்ய முடியும். கொள்கை ரீதி­யான தீர்­மா­னங்கள் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்­வ­தில்லை. அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வது, அதி­கா­ரத்தை உறுதி செய்து கொள்­வது, அதி­கா­ரத்­துக்­காக ஒன்­றி­ணை­வது, தமது முகாமின் அதி­காரம் பல­வீ­னப்­படும் போது எதி­ரியின் முகா­முடன் டீல் செய்து கொள்­வது தான் அவர்­க­ளது கொள்கை. அதனால் அவர்கள் எதற்கும் முயற்­சிக்­கலாம். தேசிய அர­சாங்கம் என்ற கதை இவ்­வாறே உரு­வா­கி­யுள்­ளது.

கேள்வி: 11 கட்­சிகள் வேலையை ஆரம்­பித்­துள்­ளன. இது தேசிய மக்கள் சக்­திக்கு சவா­லாக அமை­யுமா?

ஒரு­போதும் இல்லை. அவர்கள் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்க முடியாத குழுவினர். அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் இறைச்சியின் அளவைப் பற்றி சிந்திக்கும், இறைச்சி குறைவான எலும்பொன்று கிடைத்தால் மூக்கினால் அழும் குழுவினர் அவர்கள்.

கேள்வி: அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் இருக்கும் ஜே.வி.பி. அந்த எதிர்ப்பின் ஒரு பகுதி இன்னொரு தரப்பினருக்கு சொந்தமாவதற்கு விரும்பவில்லையா? உங்களுக்கு ஆதரவான சில தரப்பினரின் கருத்துப்படி அரச எதிர்ப்பின் உரிமை உங்களுக்குரியது என கூறப்படுகிறதே.?

அப்படியொன்றும் இல்லை. எங்களிடம் அவ்வாறான ஒரு பிரச்சினை இல்லை. இந்த ஆட்சிக்கு எதிராக எங்கு எதிர்ப்பலைகள் உருவெடுத்தாலும் அந்த எதிர்ப்புகள் அனைத்துக்கும் நாம் ஆதரவு வழங்குகிறோம். என்றாலும் நாம் மக்களை எச்சரிக்கிறோம். பொதுவான எதிர்ப்புகளை முன்னெடுத்து இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு பெற்றுக்கொள்வதற்காக எங்களுடன் இணையுங்கள் என நாம் மக்களை அழைக்கிறோம். அவ்வாறில்லாது இவ்வாறான குழுவினர் மீண்டும் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது. மக்கள் இரவு வீழ்ந்த குழியில் பகலில் வீழ்வதற்கு இடமளித்து எம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அதனால் இந்த ஆட்சியை வீழ்த்தி இது போன்ற ஆட்சியொன்றுக்கு மீண்டும் இடமளிக்க முடியாது.

நன்றி : ஞாயிறு லங்காதீப

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.