முஸ்லிம்களுக்கு பலதார மணம் சட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே முறைப்பாடுகளைச் செய்துள்ளார்கள். சென்ற இடங்களிலெல்லாம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.எம்.முஷாரப் தான் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கட்சியினால் நீக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளார். தான் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டமை இயற்கை நீதிக்கு முரணானது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து முதற் தொகுதி ஹஜ் யாத்திரிகர்கள் 50 பேர் நேற்று முன்தினம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவிற்குப் பயணமாகினர்.