முஸ்லிம் சன்மார்க்க அறிஞர்களின் அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தனது நூற்றாண்டு சேவையின் நிறைவினை கொழும்பு மாநகரில் விமரிசையாகக் கொண்டாடியது. இதுவொரு வரலாற்று நிகழ்வாகும்.
பேராதனை பல்கலைக்கழக கணிதத்துறை செயற்பாட்டு ஆராய்ச்சியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சில்மி ஜுமான் கடந்த சனிக்கிழமை குருநாகல் பொல்பிடிகம என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தில் வபாத்தானார்.
குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் மே 16 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
மாவனெல்லையை சேர்ந்த இரு இளைஞர்களின் படு கொலை தொடர்பில், ரம்புக்கனை பகுதியின் பிரபல ஐஸ் போதைப் பொருள் வர்த்தகர் என கூறப்படும் ஹுரீமலுவ பர்ஹான் என அறியப்படும் மொஹம்மட் பர்ஹான் உள்ளிட்ட அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புலனாய்வு, சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களில் வருந்தத்தக்க வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் உச்ச நீதிமன்றம் தனது ‘அதிர்ச்சி மற்றும் கலக்கத்தை’ வெளியிட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அடிப்படை உரிமை மீறல் வழக்குக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தெரிவித்துள்ளார்.