வூதி அரசாங்கம் இவ்வருடம் இலங்கையிலிருந்து 3,500 யாத்திரிகள் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக ஏற்கனவே திணைக்களத்தில் 25,000 ரூபா பதிவுக் கட்டணத்தை செலுத்தி உறுதி செய்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் தீர்மானித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹஷீம், தாக்குதலுக்கு முன்னர் அம்பாந்தோட்டை சிப்பிக்குளம் பகுதியில் நடாத்திய பயிற்சி முகாமில் பங்கேற்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் கலித் ஹமூத் அல்-கஹ்தானி, புத்தசாசனம் மற்றும் மத கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் இந்த பேரிச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.