நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அந்தவகையிலேயே முஸ்லிம் இளைஞர் ஒருவரின் கைது இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தி முஸ்லிம்களை புறக்கணிக்கவில்லை. நாட்டில் இன மத மொழி பேதமின்றி அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் அரசாங்கமொன்றை நாம் தோற்றுவித்துள்ளோம். ஆனால் தோல்வி அடைந்த அரசியல் கட்சிகள் மீண்டும் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றன என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பலஸ்தீன மக்கள் சார்பாக நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குரல் எழுப்பிய சமயத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அவரை தடுப்புக் காவலில் வைக்கும் பத்திரத்தில் கையொப்பமிடும் அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்கிறது. இந்த அரசாங்கம் தற்போது இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கிழக்கு மாகாணத்தில் அரசியல் கூட்டங்களுக்கு செல்லும் போது சற்று கலவரமடைகின்றார்.
புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து இந்த வருடம் செல்லவுள்ள ஹாஜிகளுக்காக மினாவில் ஒதுக்கப்பட்டுள்ள ‘பீ வலயத்தில்’ ஒரு ஹாஜி தங்குவதற்காக 1,195.45 சவூதி ரியால் செலுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது. இக்கட்டணம் ஹஜ் முகவர் நிறுவனங்களினால் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் இன்றைய இலங்கைப் பெறுமதி 95,650 ரூபாவாகும். புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இலங்கை ஹாஜிகள் சுமார் ஐந்து நாட்கள் மினாவில் தங்குவது வழமையாகும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் நேரடியாக கட்சி அரசியலில் ஈடுபட்டு வேட்பாளர்களாக செயல்படுகின்றமை ஜம்இய்யாவின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் அதன் கூட்டுப் பணிகளுக்கும் பாதகமாக அமையும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டத்தின்போது கலந்துகொண்ட அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.