வக்பு நிதியம் என்று அழைக்கப்படும் முஸ்லிம் தர்ம நிதியத்தில் தற்போது சுமார் 8 கோடி ரூபா இருப்பிலுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக வெளியாகியுள்ளது.
சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ததன் காரணமாக கடந்த வருடம் உயிரிழந்த மூன்று வயது சிறுவன் ஹம்தியின் அகற்றப்பட்ட சிறுநீரகம் கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும் இது மிகவும் பாரதூரமான விடயம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்றுமுன்தினம் பாராளுமன்றில் சுட்டிக்காட்டினார்.
கொவிட் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம் மக்களை கட்டாயத் தகனம் செய்தமைக்கு மன்னிப்புக் கோரி அமைச்சரவை தீர்மானம் எடுத்து தப்பித்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.
அத்துடன், அந்த பலவந்த தகனம் என்கின்ற அரசியல் தீர்மானத்தை எடுத்தவர் யார் என்பதை வெளிப்படுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற திகன கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை அந்த அறிக்கையை வெளியிடவில்லை. அதனால் இது தொடர்பாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.