வெளிநாடுகளிலிருந்து குர்ஆன் மற்றும் இஸ்லாமிய இறக்குமதி நூல்களை அரசு விடுவிப்பதற்கு நீண்ட காலம் செல்கிறது. இதனால் முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்பாடுகளை முன்வைத்ததுடன் இது தொடர்பில் பாராளுமன்ற அமர்வில் பேசுமாறும் வேண்டிக்கொண்டது.
அண்மையில் அரசு வர்த்தமானியில் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை விட மிகக் கொடியதாகும். இந்த சட்ட மூலத்தை வன்மையாக எதிர்ப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் 93வது தேசிய தினத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், எமது கடந்த காலத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல், ஒளிமயமான எதிர்காலத்தையும், அனைத்தையும் உள்ளடக்கிய, நிலையான, புதுமைகள் நிறைந்த மற்றும் வளமான எதிர்காலத்தை சவூதி அரேபிய இராச்சியத்தின் புத்திசாதுர்யமான தலைமைத்துவத்தின் கீழ் கற்பனை செய்கிறோம்.
முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட நலன்புரிச் சங்கமொன்றின் சொத்துக்கள் சம்பந்தமாக திருகோணமலை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்தே முஸ்லிம் சமய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முஸ்லிம் இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை இரத்துச் செய்வதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
உனவட்டுன என்ற அமைதியான கரையோர நகரில் ஆகஸ்ட் 2023 இல் தென் மாகாணத்தைச் சேர்ந்த 23 இளம் பெண் பிள்ளைகள் நிலை மாற்றத்துக்கான பயணம் ஒன்றுக்காக ஒன்று கூடினர். ஊடகம் மற்றும் தகவல்களுக்கான நிலையத்தினால் அவர்கள் மூன்று நாட்கள் கொண்ட ஆட்சிக்கான கையடக்க தொலைபேசி ஊடகவியல் பயிற்சி நிகழச்சித்திட்டத்துக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சமநிலையான சட்டமொன்றைக் கொண்டுவரும் நோக்கில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.