செய்திகள்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக்களில் பணியாற்ற எதிரணி முஸ்லிம் எம்.பி.க்கள் உள்ளீர்ப்பு

அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழுவில் பணி­யாற்­று­வ­தற்கு மேலும் உறுப்­பி­னர்கள் நிய­மனம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக சபா­நா­யகர் அறி­வித்தார். பாரா­ளு­மன்றம் நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை கூடி­ய­போது சபா­நா­ய­கரின் அறி­விப்­பின்­போதே சபா­நா­யகர் இதனை சபைக்கு அறி­வித்தார்.

ஹஜ் மற்றும் உம்ரா கிரியைகளை டிஜிட்டல் மயமாக்கும் சவூதி அரசாங்கம்: இம்முறை ஹஜ்ஜிலும் பல நவீன தொழிநுட்பங்கள் உபயோகம்

விஷன் 2030 திட்டத்திற்கு அமைவாக, சவூதி அரேபியா டிஜட்டல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் தொடர்ந்தும் பல விதமான வியத்தகு முன்னேற்றங்களை கண்டு வருகிறது. இந்த நவீன டிஜிட்டல் நுட்பங்கள் ஆண்டு தோறும் ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களை இலகுபடுத்தி யாத்திரிகர்களுக்கு புதியதொரு அனுபவத்தை வழங்கவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை–பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹினிதும செயலாளராக முஜிபுர் தெரிவு

பத்­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் இலங்கை – பலஸ்­தீன பாரா­ளு­மன்ற நட்­பு­றவு சங்­கத்தின் தலை­வ­ராக புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் கலா­நிதி ஹினி­தும சுனில் செனெ­வியும் செய­லா­ள­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹுமான் ஆகி­யோரும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். இலங்கை – பலஸ்­தீன பாரா­ளு­மன்ற நட்­பு­ற­வுச்­சங்­கத்தை மீள ஸ்தாபிப்­ப­தற்­கான கூட்டம் சபா­நா­யகர் (வைத்­தியர்) ஜகத் விக்­கி­ர­ம­ரத்ன தலை­மையில் கடந்த வாரம் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்­ற­போதே இத்­தெ­ரி­வுகள் இடம்­பெற்­றன.

மீண்டும் பரவும் கொரோனா திரிபு

பல ஆசிய நாடு­களில் கொரோனா- தொற்று பாதித்­த­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கின்­றது. சிங்­கப்­பூரில், 2025 ஏப்ரல் 27 முதல் மே 3 வரை­யி­லான வாரத்தில், 14,200 பேருக்கு கொரோனா தொற்று பாதித்­தி­ருப்­ப­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது. அதே­ச­மயம், அதற்கு முந்­தைய வாரத்தில், 11,100 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். தாய்­லாந்து மற்றும் ஹாங்­காங்கைத் தவிர, கடந்த சில மாதங்­களில் சீனா­விலும் கொரோனா பாதித்­த­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டிய தரப்பினருடனேயே தே.ம.ச. இன்று ஆட்சியமைக்க பேச்சு நடத்துகிறது

தேசிய மக்கள் சக்­தியின் பெயரை 'தேசிய சலவை கட்சி' என்று மாற்றிக் கொண்டால் பொருத்­த­மாக இருக்கும். தேர்­த­லுக்கு முன்னர் ஊழல்­வா­திகள் மற்றும் மாற்றுக் கொள்­கை­யு­டை­ய­வர்­களை இணைத்துக் கொள்ளப் போவ­தில்லை என்­றார்கள். ஆனால் தற்­போது பல குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உள்­ளா­ன­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­கி­றார்கள். ஊழல்­வா­தி­களை சலவை செய்தா கட்­சியில் இணைத்துக் கொள்­கி­றார்கள் என ஐக்­கிய மக்கள் சக்­தியின் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைவது தொடர்பில் முன்னாள் எம்.பி. முஸர்ரப் பேச்சு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுடன் இணைந்து பய­ணிப்­பது குறித்து முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம். முஸர்ரப் அக்­கட்­சியின் தலை­மைத்­து­வத்­துடன் பேச்­சு­வார்­த்தை நடத்­தி­யுள்ளார். இப்­ பேச்­சு­வார்த்தை நேற்­று­முன்­தினம் இரவு கொழும்பில் இடம்­பெற்­றதை முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நிஸாம் காரி­யப்பர் உறு­தி­ப்ப­டுத்­தினார்.
1 of 551