விஷன் 2030 திட்டத்திற்கு அமைவாக, சவூதி அரேபியா டிஜட்டல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் தொடர்ந்தும் பல விதமான வியத்தகு முன்னேற்றங்களை கண்டு வருகிறது. இந்த நவீன டிஜிட்டல் நுட்பங்கள் ஆண்டு தோறும் ஹஜ் மற்றும் உம்ரா பயணங்களை இலகுபடுத்தி யாத்திரிகர்களுக்கு புதியதொரு அனுபவத்தை வழங்கவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பல ஆசிய நாடுகளில் கொரோனா- தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. சிங்கப்பூரில், 2025 ஏப்ரல் 27 முதல் மே 3 வரையிலான வாரத்தில், 14,200 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், அதற்கு முந்தைய வாரத்தில், 11,100 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தாய்லாந்து மற்றும் ஹாங்காங்கைத் தவிர, கடந்த சில மாதங்களில் சீனாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பெயரை 'தேசிய சலவை கட்சி' என்று மாற்றிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும். தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகள் மற்றும் மாற்றுக் கொள்கையுடையவர்களை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்றார்கள். ஆனால் தற்போது பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். ஊழல்வாதிகளை சலவை செய்தா கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து பயணிப்பது குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸர்ரப் அக்கட்சியின் தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இப் பேச்சுவார்த்தை நேற்றுமுன்தினம் இரவு கொழும்பில் இடம்பெற்றதை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர் உறுதிப்படுத்தினார்.