நீர்கொழும்பு அவேந்ரா ஹோட்டல் சூறையாடப்பட்ட சம்பவத்தோடு, குளியாபிட்டிய நகரில் தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக்கை தொடர்புபடுத்தி, கைது செய்து, சித்திரவதை செய்தமை தொடர்பில், அவ்வர்த்தகரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
வேட்பு மனுத்தாக்கலுக்கான இறுதி தினம் நாளை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் பலவும் பிரதான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும் சில மாவட்டங்களில் தனித்து களமிறங்கவுள்ளன.
முஸ்லிம்களின் புனித வேத நூலான அல் குர்ஆனை அவமதித்து கருத்து வெளியிட்டமை, தொடர்பிலான விவகார வழக்கில், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று (9) உத்தரவிட்டது.
சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் என இலங்கை பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்து வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்வதென்பது பெரிய விடயமல்ல. அதனை செய்வதற்கான ஆர்வம் இல்லாமையே இங்குள்ள பிரச்சினையாகும். தாக்குதலின் பின்புலத்தை தேடி கண்டு பிடித்தால் நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகள் சிறையில் இருக்க வேண்டி ஏற்படும்.