செய்திகள்

மர்ஹூம் டாக்டர் லாஹிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

இலங்­கையில் நவீன இரு­தய அறுவை சிகிச்சைத் துறையில் ஆற்­றிய அளப்­ப­ரிய சேவைக்­காக மர்ஹூம் டாக்டர் வை. கே.எம் லாஹி ­வாழ்நாள் சாத­னை­யாளர் விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­டுள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை பத்­த­ர­முல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்­டலில் ஆரம்­ப­மா­கிய இலங்கை இரு­தய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபு­ணர்கள் சங்­கத்தின் புல­மைத்­துவ அமர்வின் போது(Academic session) அதன் தலைவர் டாக்டர் முதித்த சன்­சக்­கா­ர­வினால் இந்த அதி உயர் விருது அவ­ருக்­காக வழங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.

வாழைச்சேனை பள்ளிவாசலில் வழங்கப்பட்ட தண்டனை: அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு; விசாரணைகள் தொடர்கின்றன‌

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பள்­ளி­வாசல் ஒன்றில், சட்­டத்­துக்கு முர­ணாக பெண் ஒரு­வ­ருக்கும், ஆண் ஒரு­வ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் 6 பேரை கைது செய்­த­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். திரு­ம­ணத்­துக்கு புறம்­பான உறவில் இருந்­த­தாக கூறி பெண் ஒரு­வ­ரையும் ஆண் ஒரு­வ­ரையும், வாழைச்சேனை பிர­தே­சத்தில் உள்ள பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு அழைத்து அங்கு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

சுனாமி வீட்டுத் திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கவும்

சவூதி அரே­பி­யாவின் நிதி­யு­த­வியில் அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுனாமி வீட்டுத் திட்­டத்தை கூடிய விரைவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மாறு இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் ஹமூத் அல்­கஹ்­தானி அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

தவுலகலவில் மாணவி கடத்தல் விவகாரம் : பிரதான சந்தேக நபர், சாரதி, நண்பருக்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கண்டி, தவு­ல­கல பொலிஸ் பிரிவில், மேல­திக வகுப்­புக்­காக சென்­று­கொண்­டி­ருந்த போது கடத்­தப்­பட்ட பாட­சாலை மாணவி ஆபத்­தின்றி பொலி­ஸாரால் மீட்­கப்­பட்ட நிலையில், கடத்­தலின் பிர­தான சந்­தேக நப­ரையும் அவ­ரது நண்பர் மற்றும் வேன் சார­தியையும் எதிர்­வரும் 27 ஆம் திக­தி­ வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கம்­பளை நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

நாட்டிற்குள் வரும் இஸ்ரேலியர்களால் தேசிய பாதுகாப்பு, நல்லிணக்கத்துக்கு பாதிப்பு

இலங்­கையில் இஸ்­ரே­லிய பிர­ஜைகளின் பிரசன்னம் அதிகரித்திருப்பது தொடர்பில் ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­க­வுக்­கு ­தே­சிய ஷூரா சபை கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்­துள்­ளது. குறித்த கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, அண்மைக் கால­மாக நாட்­டிற்குள் வரும் இஸ்­ரே­லிய பிர­ஜைகள் குறித்தும் சமூக நல்­லி­ணக்கம், தேசிய நலன் மற்றும் தேசிய பாது­காப்பில் அந்த விவ­காரம் ஏற்­ப­டுத்த முடி­யு­மான தாக்­கங்கள் குறித்தும் எமது கவ­லை­களை தெரி­விக்க விரும்­பு­கி­றோம்.

வெளிவிவகார அமைச்சரை சந்தித்தது உலமா சபை

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வுக்கும் வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­துக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று கடந்த சனிக்­கி­ழமை வெளி­வி­வ­கார அமைச்சில் இடம்­பெற்­றுள்­ளது. வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத், உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உதவிப் பொதுச் செய­லா­ளர்­ அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், ஒத்­து­ழைப்­புக்கும் ஒருங்­கி­ணைப்­புக்­கு­மான குழுவின் செய­லாளர் அஷ்-ஷைக் எம். பாஸில் பாறூக், ஊடகக் குழுவின் செய­லாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், ஆகி­யோ­ருடன் செய­லக நிர்­வாகி அஷ்-ஷைக் டி. நுஃமான்…
1 of 532