செய்திகள்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள் அமைச்சர் பஷீர் தெரிவு

ஐக்­கிய சமா­தான கூட்­ட­மைப்பின் சிரேஷ்ட தலை­வ­ராக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு­தாவூத் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் கட்­சியின் செய­லா­ள­ராக கலீலுர் ரஹ்மான் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார். நேற்று முன்­தினம் கொழும்பில் கூடிய கட்­சியின் செயற்­குழு கூட்­டத்தின் போதே இந்த வரு­டத்­துக்­கான புதிய நிர்­வாக உறுப்­பி­னர்கள் தெரிவு இடம்­பெற்­றுள்­ளது. அதன் பிர­காரம் தெரிவு செய்­யப்­பட்ட புதிய நிர்­வாக உறுப்­பி­னர்­க­ளுக்­கான அங்­கீ­காரம் நேற்று மரு­தா­னையில் உள்ள குப்­பி­யா­வத்தை சன­ச­மூக மண்­ட­பத்தில் இடம்­பெற்ற தேசிய மாநாட்டில்…

சுமங்க வித்தியாலய காணியை மீளவும் ஒப்படைக்காவிடின் பிரச்சினை ஏற்படும்

தெஹி­வளை சுமங்க வித்­தி­யா­லயம் அமைந்­தி­ருக்கும் இடம் இற்­றைக்கு 100 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பரம விஞ்­ஞா­னாதி பெளத்த நிறு­வ­னத்­தினால் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட காணி­யாகும். ஆனால் தற்­போது இதனை முஸ்லிம் பாட­சா­லை­யாக முன்­னெ­டுத்துச் செல்ல கடந்த அர­சாங்கம் அனு­ம­தித்­துள்­ளது. அதனால் இந்த அர­சாங்கம் இதனை தடுத்து பெளத்த நிறு­வ­னத்­துக்கு மீள ஒப்­ப­டைக்க வேண்டும். இல்­லா­விட்டால் இது ஒரு இனப்­பி­ரச்­சி­னைக்கு கார­ண­மாக அமையும் என சிங்­ஹல ராவய அமைப்பின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அக்­மீ­மன தயா­ரத்ன…

முஸ்லிம் பெண்களால் ஏன் காதி நீதிபதியாக முடியாது?

முஸ்லிம் பெண்கள் இன்று அதிகம் சட்­டத்­து­றையில் நாட்டம் காட்­டு­கின்­றனர். எதிர்­கா­லத்தில் அவர்­களால் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளாக பதவி வகிக்க முடியும் என்றால் ஏன் அவர்­களால் காதி நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளாக வர முடி­யாது என கொழும்பு பல்­க­லைக்­க­ழக சட்­ட­பீட சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் பேரா­சி­ரியர் ஏ. சர்­வேஸ்­வரன் கேள்வி எழுப்­பினார்.

இஸ்லாத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சு: ஞானசார தேரரின் மேன் முறையீட்டு மனு குறித்து சட்ட மா அதிபர் ஆட்சேபனை முன்வைக்க தீர்மானம்

பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அதற்கு எதி­ராக அவர் செய்­துள்ள மேன் முறை­யீட்டு மனு தொடர்பில் ஆட்­சே­ப­னை­களை முன் வைக்க சட்ட மா அதிபர் தீர்­மா­னித்­துள்ளார். ஞான­சார தேரர் சார்பில் முன் வைக்­கப்­பட்­டுள்ள திருத்தல் மனு, நேற்று முன் தினம் (11) கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மாபா பண்­டார முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது ஞான­சார தேரர் சார்பில் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி…

சிறுவன் ஹம்தியின் மரணம் கொலையா? 25 இல் தீர்ப்பு

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் கொலையா?, குற்றம் ஒன்றின் பிரதிபலனா அல்லது வேறு காரணங்களால் நிகழ்ந்ததா என்பது தொடர்பிலான மரண விசாரணை தீர்ப்பு எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. நேற்று முன் தினம் (11) இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

அளுத்கம, பேருவளை வன்முறைகள் குறித்த 5 மனுக்கள்: விசாரணைகள் நிறைவு

அளுத்­கம வர்த்­தக நகரை மையப்­ப­டுத்தி அளுத்­கம, பேரு­வளை உள்­ளிட்ட பொலிஸ் பிரி­வு­களில் பதி­வான இன­வாத வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்­யப்­பட்ட ஐந்து அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் குறித்த விசா­ர­ணைகள் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளன. அதன்­படி, மனு தொடர்பில் எழுத்து மூல சமர்ப்­ப­ணங்­க­ளுக்கு நான்கு வாரங்கள் கால அவ­காசம் வழங்­கி­யுள்ள உயர் நீதி­மன்றம், அதன் பின்னர் தீர்ப்பு அறி­விப்­ப­தாக குறிப்­பிட்டு, தீர்ப்­புக்­காக மனுவை திக­தி­யின்றி ஒத்தி வைத்­துள்­ளது.
1 of 536