செய்திகள்

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே முஸ்லிம் இளைஞரை கைது செய்தோம்

நாட்டின் தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நாம் பல நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளோம். அந்­த­வ­கை­யி­லேயே முஸ்லிம் இளைஞர் ஒரு­வரின் கைது இடம்­பெற்­றது. தேசிய மக்கள் சக்தி முஸ்­லிம்­களை புறக்­க­ணிக்­க­வில்லை. நாட்டில் இன மத மொழி பேத­மின்றி அனைத்து மக்­க­ளையும் சம­மாக நடத்தும் அர­சாங்­க­மொன்றை நாம் தோற்­று­வித்­துள்ளோம். ஆனால் தோல்வி அடைந்த அர­சியல் கட்­சிகள் மீண்டும் மக்­களை பிள­வு­ப­டுத்த முயற்­சிக்­கின்­றன என்று ஜனா­தி­பதி அநு­ர ­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

அன்று பலஸ்தீனுக்காக பேசிய ஜனாதிபதி அநுர இன்று முஸ்லிம் இளைஞரை கைது செய்துள்ளார்

பலஸ்­தீன மக்கள் சார்­பாக நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குரல் எழுப்­பிய சம­யத்தில் தற்­போ­தைய ஜனா­தி­பதி அநுர குமார திஸா­நா­யக்க, அவ­ரை தடுப்புக் காவலில் வைக்கும் பத்­தி­ரத்தில் கையொப்­ப­மிடும் அள­வுக்கு கீழ்த்­த­ர­மாக நடந்­துள்ளார் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

10 காதி பிரிவுகளுக்கு விண்ணப்பம் கோரல்

நீதிச்­சேவை ஆணைக்­குழு வெற்­றி­ட­மா­க­வுள்ள 10 காதி பிர­தேச பிரி­வு­க­ளுக்குத் தகு­தி­யுள்ள புதிய காதி நீத­வான்­களை நிய­மிப்­ப­தற்­கான விண்­ணப்­பங்­களைக் கோரி­யுள்­ளது. இதன்­படி, பதுளை, மாத்­தளை, உடத்தலவின்ன (உட, மெத, பாத்த தும்­பறை),பேரு­வளை, மாவ­னல்ல, யாழ்ப்­பாணம், கொழும்பு தெற்கு, புத்­தளம், காத்­தான்­குடி, சம்­மாந்­துறை ஆகிய காதி­ நீ­தி­வான்கள் பிரி­வு­க­ளுக்கு விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது.

இஸ்ரேலின் முகவராக அரசாங்கம்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்கிறது. இந்த அரசாங்கம் தற்போது இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்­பி­லுள்ள ஐக்­கிய மக்கள் சக்தி அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் இதனைத் தெரி­வித்த அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திஸா­நா­யக்க கிழக்கு மாகா­ணத்தில் அர­சியல் கூட்­டங்­க­ளுக்கு செல்லும் போது சற்று கல­வ­ர­ம­டை­கின்றார்.

மினா ‘பீ வலயத்தில்’ தங்க ஹாஜி ஒருவருக்கு 1195.45 சவூதி ரியால் செலுத்தப்பட்டுள்ளது

புனித ஹஜ் கட­மை­யினை மேற்­கொள்வதற்காக இலங்­கை­யி­லி­ருந்து இந்த வருடம் செல்லவுள்ள ஹாஜி­க­ளுக்­காக மினாவில் ஒதுக்­கப்­பட்­டுள்ள ‘பீ வல­யத்தில்’ ஒரு ஹாஜி தங்குவதற்காக 1,195.45 சவூதி ரியால் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­தது. இக்­கட்­டணம் ஹஜ் முகவர் நிறு­வ­னங்­க­ளினால் திணைக்­க­ளத்தின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதன் இன்­றைய இலங்கைப் பெறு­மதி 95,650 ரூபா­வாகும். புனித ஹஜ் யாத்­தி­ரை மேற்­கொள்ளும் இலங்கை ஹாஜிகள் சுமார் ஐந்து நாட்கள் மினாவில் தங்­கு­வது வழ­மை­யாகும்.

கட்சி அரசியலில் ஈடுபடுவது உலமா சபைக்கு பாதகமானது

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் மாவட்ட அல்­லது பிர­தேசக் கிளை­களின் பத­வி­தாங்­கு­னர்கள் நேர­டி­யாக கட்சி அர­சி­யலில் ஈடு­பட்டு வேட்­பா­ளர்­க­ளாக செயல்­ப­டு­கின்­றமை ஜம்­இய்­யாவின் இலக்­கு­களை அடைந்து கொள்­வ­தற்கும் அதன் கூட்டுப் பணி­க­ளுக்கும் பாத­க­மாக அமையும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நிறை­வேற்றுக் குழுவின் அவ­சரக் கூட்­டத்­தின்­போது கலந்­து­கொண்ட அனை­வ­ராலும் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
1 of 546