மெளலவி ஒருவரினால் பரதநாட்டியம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்து இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இந்த விடயம் மிகுந்த கவலையளிக்கிறது. மதங்கள் மற்றும் கலாசார விடயங்கள் நிந்திக்கபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் அவர்களது அங்கீகரிக்க முடியாத அத்துமீறல்களை எதிர்கொள்ளும் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக அவர்களுக்குப் பக்கபலமாக இருப்பதே பாலஸ்தீனப் பிரச்சினையில் சவூதி அரேபியாவின் நிலைப்பாடாக சவூதி அரேபிய இராச்சியத்தின் நிறுவனர் மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துர்ரஹ்மான் ஆல் ஸஊத் காலத்திலிருந்து இன்றுவரை மாறாது நிலையாக இருந்து வருகிறது.
காஸா மீதான இஸ்ரேலின் அராஜகமான தாக்குதல்களை உடன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து, 159 இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று ஐ.நாவின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.