கொழும்பு மாநகர சபை மேயராக ஐக்கிய மக்கள் சக்தியினால் பெயரிடப்பட்டிருக்கும் ரிஸா சரூக் தொடர்பில் எதிர்க்கட்சியில் இருக்கும் கட்சிகளுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவர் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முறைப்பாட்டிலும் உண்மை இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மீரிகமவில் உள்ள கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில் யூத மத சம்பிரதாயமான கோஷர் முறையை மேற்கொண்ட ஐந்து யூத மதகுருமார்கள், பயண விசா நிபந்தனைகளை மீறியதற்காக கடந்த திங்களன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் (DIE) கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும் செயலாகும். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத போக்காகும். இது இந்நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.