ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவராக முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கட்சியின் செயலாளராக கலீலுர் ரஹ்மான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் கூடிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போதே இந்த வருடத்துக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றுள்ளது.
அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான அங்கீகாரம் நேற்று மருதானையில் உள்ள குப்பியாவத்தை சனசமூக மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய மாநாட்டில்…
தெஹிவளை சுமங்க வித்தியாலயம் அமைந்திருக்கும் இடம் இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் பரம விஞ்ஞானாதி பெளத்த நிறுவனத்தினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட காணியாகும். ஆனால் தற்போது இதனை முஸ்லிம் பாடசாலையாக முன்னெடுத்துச் செல்ல கடந்த அரசாங்கம் அனுமதித்துள்ளது. அதனால் இந்த அரசாங்கம் இதனை தடுத்து பெளத்த நிறுவனத்துக்கு மீள ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் இது ஒரு இனப்பிரச்சினைக்கு காரணமாக அமையும் என சிங்ஹல ராவய அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன…
முஸ்லிம் பெண்கள் இன்று அதிகம் சட்டத்துறையில் நாட்டம் காட்டுகின்றனர். எதிர்காலத்தில் அவர்களால் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக பதவி வகிக்க முடியும் என்றால் ஏன் அவர்களால் காதி நீதிமன்ற நீதிபதிகளாக வர முடியாது என கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஏ. சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அவர் செய்துள்ள மேன் முறையீட்டு மனு தொடர்பில் ஆட்சேபனைகளை முன் வைக்க சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
ஞானசார தேரர் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள திருத்தல் மனு, நேற்று முன் தினம் (11) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது ஞானசார தேரர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி…
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் கொலையா?, குற்றம் ஒன்றின் பிரதிபலனா அல்லது வேறு காரணங்களால் நிகழ்ந்ததா என்பது தொடர்பிலான மரண விசாரணை தீர்ப்பு எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
நேற்று முன் தினம் (11) இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் குறித்த விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மனு தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணங்களுக்கு நான்கு வாரங்கள் கால அவகாசம் வழங்கியுள்ள உயர் நீதிமன்றம், அதன் பின்னர் தீர்ப்பு அறிவிப்பதாக குறிப்பிட்டு, தீர்ப்புக்காக மனுவை திகதியின்றி ஒத்தி வைத்துள்ளது.