காஸா யுத்த நிறுத்தத்திற்கு 'எமக்கு கால அவகாசம் தேவை' என கட்டார் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் யுத்த நிறுத்தம் தொடர்பில் சாத்தியமான முன்னேற்றம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான காஸா யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளுக்கு கால அவகாசம் தேவை என கடந்த செவ்வாய்க்கிழமை (08) கட்டார் தெரிவித்தது,
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மேற்கொள்ளவுள்ள புனித ஹஜ் கடமைக்கான பணிகளை அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஆரம்பித்துள்ளதாக ஹஜ் குழுவின் உறுப்பினரொருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது அரசியல் கட்சி ஒன்றின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் கடந்த புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்குடா மஜ்லிஸ் சூரா சபையின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போராட்டம் இரண்டாம் நாளாகவும் நேற்று இடம்பெற்றதுடன் இன்றைய தினமும் தொடராக இதனை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தோண்டி எடுத்து இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன் வரவேண்டும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.