செய்திகள்

ஐ.ம.ச. கொழும்பு மேயர் வேட்பாளருக்கு எதிரான முறைப்பாட்டில் உண்மையில்லை

கொழும்பு மாந­கர சபை மேய­ராக ஐக்­கிய மக்கள் சக்­தி­யினால் பெய­ரி­டப்­பட்­டி­ருக்கும் ரிஸா சரூக் தொடர்பில் எதிர்க்­கட்­சியில் இருக்கும் கட்­சி­க­ளுக்­கி­டையில் கருத்து முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் செய்­தி­களில் எந்த உண்­மையும் இல்லை. அவர் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழுவில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கும் முறைப்­பாட்­டிலும் உண்மை இல்லை என்று ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

மனிதாபிமான உதவிக்கப்பல் காஸாவை நோக்கிப் பயணிப்பதற்கு இடமளியுங்கள்

பலஸ்­தீ­னத்தில் பதி­வா­கி­வரும் சம்­ப­வங்கள் இலங்­கையில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொ­லையை ஒத்­தி­ருப்­ப­தா­கவும், இப்­பே­ர­ழிவைத் தடுப்­ப­தற்கு பலஸ்­தீ­னத்­துக்கு எதி­ரான தமது ஒடுக்­கு­மு­றை­களை இஸ்ரேல் முடி­வுக்கு கொண்­டு­வ­ர­வேண்டும் எனவும் கொழும்பில் ஒன்­று­கூடி வலி­யு­றுத்­தி­யுள்ள செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் பொது­மக்கள், இஸ்­ரே­லி­யப்­ப­டை­யி­னரால் நிறுத்­தப்­பட்­டி­ருக்கும் 'மட்லீன் சுதந்­திரக் கப்பல்' காஸாவை நோக்­கிய அதன் பய­ணத்தை வெற்­றி­க­ர­மாகப் பூர்த்­தி­செய்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வேண்டும் எனக் கோரி­யுள்­ளனர்.

அசாத் மௌலானா தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்த முடியாது

அஸாத் மௌலானா என்­ப­வரை இலங்­கைக்கு அழைத்து வரு­வ­தற்கு இரா­ஜ­தந்­திர மட்­டத்தில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வதால் அந்த செயற்­பா­டு­க­ளுக்கு தடை­யேற்­படும் என்ற கார­ணத்தால் குறித்த விட­யங்கள் தொடர்­பான தக­வல்­களை வெளிப்­ப­டுத்த முடி­யாது என்று பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சு, ஐக்­கிய மக்கள் சக்­தியின் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்த ஜய­வர்­த­ன­வுக்கு பதி­ல­ளித்­துள்­ளது.

வீசா நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்து யூத மத சடங்கை பூர்த்தி செய்ய முற்பட்ட இஸ்ரேலியர்கள் கைது

மீரிகமவில் உள்ள கோழி பதப்­ப­டுத்தும் தொழிற்­சா­லையில் யூத மத சம்­பி­ர­தா­ய­மான கோஷர் முறையை மேற்­கொண்ட ஐந்து யூத மத­கு­ரு­மார்கள், பயண விசா நிபந்­த­னை­களை மீறி­ய­தற்­காக கடந்த திங்­க­ளன்று குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­தி­னரால் (DIE) கைது செய்­யப்­பட்­டனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ரணில் ஒன்றரை மணிநேர வாக்குமூலம்

முன்னாள் சுகா­தார அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெ­ல­வினால் அளிக்­கப்­பட்ட முறைப்­பாட்டை அடுத்து, முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க நேற்­றைய தினம் குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவில் முன்­னி­லை­யாகி வாக்­கு­மூலம் வழங்­கினார்.

மின் கட்டண அதிகரிப்பு: மக்கள் ஆணையை மீறும் செயலாகும்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு மக்கள் ஆணையை மீறும் செயலாகும். மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத போக்காகும். இது இந்நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
1 of 556