மீண்டும் இனவாத பிரசாரங்களுக்கு அரசாங்கம் இடமளிக்க கூடாது
நாட்டில் மீண்டும் இனவாதக் கருத்துக்கள் தலைதூக்கி வருவதை அவதானிக்க முடிகிறது. பொருளாதார நெருக்கடியின் பின்னரும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடும் இனவாத சூழல் நீர்த்துப் போயிருந்த நிலையில் தற்போது மீண்டும் இனவாதக் கருத்துக்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பொது பல சேனாவின் ஞானசார தேரர் ஆகியோர் இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர்.