வெடிபொருட்கள் அடங்கிய வாகனத்தை சோதனையிட வேண்டாம் என தேசபந்து தென்னகோன் குறிப்பிட்டதன் பின்னணி என்ன ?

பொறுப்பு கூறவேண்டியோர் அதிகாரத்திலுள்ள வரை விசாரணைகள் இடம்பெறாது என்கிறார் காவிந்த ஜயவர்தன

0 68

(எம்.ஆர்.எம்.வசீம்,இரா­. ஹஷான்)
உயிர்த்த ஞாயிறு தாக்­குதலுக்கு முன்னர் களனிகம பகு­தியில் வெடி­பொ­ருட்கள் அடங்­கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்­ப­டு­கையில் பொலிஸ்மா அதிபர் தேச­பந்து தென்­னகோன் அதற்கு தடை விதித்து வாக­னத்தை விடு­விக்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யுள்ளார். பல கேள்­வி­க­ளுக்கு இது­வரை பதில் கிடைக்­க­வில்லை. பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­வர்கள் அதி­கா­ரத்தில் இருக்கும் வரை முறை­யான விசா­ர­ணைகள் இடம்­பெ­றாது. நீதி கிடைக்கும் வரை போரா­டுவோம் என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்த ஜய­வர்­தன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு விவா­தத்தில் உரை­யாற்­று­கையில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் உரை­யாற்­றி­ய­தா­வது, உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­பட்டு ஐந்­தாண்­டுகள் நிறை­வ­டைந்­துள்ள போதும் இதுரை நீதி கிடைக்­க­வில்லை. 277 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், 500 பேர் படு­கா­ய­ம­டைந்­தார்கள். குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்து விட்­ட­தாக அர­சாங்கம் குறிப்­பி­டு­கி­றது. ஆனால் எவ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­ப­ட­வில்லை.

அரச மற்றும் இரா­ணுவ புல­னாய்வு பிரிவு அறிந்­தி­ருந்த நிலையில் தான் குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­களின் முற்­போக்­கான சிந்­த­னையால் தவ­றான தீர்­மா­னத்தை எடுத்து தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளாக தங்­களை மாய்த்துக் கொண்­டார்கள்.இதனை சாத­க­மாக கொண்டு கோட்­ட­பய ராஜ­பக்ஷ ஆட்­சிக்கு வந்தார்.

குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட போது மைத்­தி­ரி­பால சிறி­சேன பாது­காப்பு அமைச்­ச­ராக பதவி வகித்தார்.நிலந்த ஜய­வர்­தன, பூஜித ஜய­சுந்­தர, ஹேம­சிறி பெர்­னான்டோ ஆகியோர் நேர­டி­யாக தொடர்­பு­பட்­டி­ருந்­தார்கள்.குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­கூட்­டி­ய­தா­கவே இவர்கள் அறிந்­துள்­ளார்கள். ஆனால் மைத்­தி­ரி­பால சிறி­சேன தான் அறி­ய­வில்லை என்று குறிப்­பி­டு­கிறார்.

குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட அமெ­ரிக்­காவின் எப்.பி.ஐ. பிரிவு பல விட­யங்­களை குறிப்­பிட்­டுள்­ளது.பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் இரா­ணுவ புல­னாய்வு பிரிவின் அப்­போ­தைய பணிப்­பாளர் சூலா கொடித்­து­வக்கு பல­முறை தொடர்பு கொண்­டுள்ளார். ஆகவே சஹ்­ரா­னுக்கும், இவ­ருக்கும் இடை­யி­லான தொடர்பு என்ன?

மாத்­தளை பகு­தியில் பொடி சஹ்ரான் என்று குறிப்­பி­டப்­படும் நப­ருடன் பொலிஸ் பரி­சோ­தகர் பண்­டார என்­பவர் நேர­டி­யாக தொடர்பு கொண்­டுள்ளார். தாக்­குதல் இடம்­பெற்­ற­வுடன், தாக்­கு­தலை ஐ.எஸ்,ஐ.எஸ் அமைப்பு பொறுப்­பேற்­கு­மாறு இவர் அழுத்தம் பிர­யோ­கித்­துள்ளார்.

வெடி­பொ­ருட்கள் அடங்­கிய லொறி 2019.04.05 ஆம் திகதி அதி­காலை 03 மணிக்கு களனி கம பகு­தியில் செல்லும் போது அப்­ப­கு­தியில் வீதி பாது­காப்பில் இருந்த ரத்­நா­யக்க என்­பவர் வாக­னத்தை சோதனை செய்ய முற்­ப­டு­கையில் தற்­போ­தைய பொலிஸ்மா அதிபர் தேச­பந்து தென்­னகோன் தொலை­பேசி அழைப்பை எடுத்து அந்த வாக­னத்தை விடு­விக்­கு­மாறு குறிப்­பிட்­டுள்ளார். இவ்­வி­டயம் தொடர்பில் அந்த பொலிஸ் அதி­காரி 2019.04.05 ஆம் திகதி அதி­காலை 03.10 மணிக்கு பதிவு புத்­த­கத்தில் 333 பக்­கத்தில் 92 ஆவது பந்­தியில் பதி­விட்­டுள்ளார்.

சந்­தே­கத்­துக்­கி­ட­மான வாக­னத்தை பரி­சோ­தனை செய்ய வேண்டாம் என பொலிஸ்மா அதிபர் தேச­பந்து தென்­னக்கோன் ஏன் குறிப்­பிட வேண்டும். அந்த வாக­னத்தை விடு­விக்­கு­மாறு அவருக்கு யார் ஆலோசனை வழங்கியது.பல கேள்விகளுக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அதிகாரத்தில் இருக்கும் போது முறையான விசாரணைகள் இடம்பெறாது.எமது அரசாங்கத்தில் ஆரம்பத்தில் இருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்.அதுவரை போராடுவோம் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.