உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் சூழ்ச்சி முழு விபரமும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்

முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப்பு தேவை என்கிறார் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

0 47

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முற்று முழு­தாக ஓர் அர­சியல் சூழ்ச்­சியே. இச் சூழ்ச்­சியின் முழு விப­ரங்­களும் விரைவில் வெளிச்­சத்­துக்கு வரும். அதற்­கா­கவே நாங்கள் முயற்­சித்து வரு­கிறோம். இதற்­காக முஸ்லிம் சமூகம் எமக்கு முழு ஒத்­து­ழைப்­பினை வழங்க வேண்டும் என பேராயர் கர்­தி­னால் மெல்கம் ரஞ்சித் தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­குதல் 5 வரு­டங்­கள் நிறை­வ­டைந்த நிலையில் அது தொடர்பாக கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆல­யத்தில் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சர்­வ­மத தலை­வர்கள் அமைப்பின் பிர­தி­நி­திகள் மத்­தியில் கருத்து தெரி­விக்­கை­யிலே இவ்­வாறு கூறினார்.

நிகழ்வில் முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் நீர்­கொ­ழும்பு காதி­நீ­திவான் மெள­லவி எம்.எம்.முஹா­ஜிரீன் மற்றும் அப்துல் ரஹ்மான் முது குடாவும், பெளத்த மதத்தின் சார்பில் ஒமல்பே சோபித தேரரும், இந்து சம­யத்தின் சார்பில் சிவ சுரேஸ் குருக்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

மேலும் மேலைத்­தேய நாடு­களின் இலங்­கைக்­கான தூத­வர்கள், ஐ.நாவின் இலங்­கைக்­கான வதி­விடப் பிர­தி­நிதி, பாப்­ப­ர­சரின் பிர­தி­நிதி பிரைன் உரு­குவே ஆகி­யோரும் நிகழ்வில் பங்கு கொண்­டி­ருந்­தனர். தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­க­ளுக்­காக 2 நிமிட மெளன அஞ்­ச­லியும் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

இஸ்லாம் மதத்தின் சார்பில் சர்­வ­மத அமைப்பின் பிர­தி­நி­தி­க­ளாக கலந்து கொண்ட மெள­லவி எம்.எம்.முஹா­ஜிரீன் மற்றும் அப்துல் ரஹ்மான் முது குடா என்போர் இலங்­கையில் முஸ்­லிம்­களின் நிலைமை குறித்து எடுத்து விளக்­கினர்.

‘முஸ்­லிம்­களின் அடிப்­படை கோட்­பாடு படைப்­பி­னங்­க­ளுக்கு இரக்கம் காட்­டு­வ­தாகும். முஸ்­லிம்கள் நாட்டில் ஏனைய இனத்­த­வ­ருடன் சமா­தா­ன­மா­கவே வாழ விரும்­பு­ப­வர்கள். என்­றாலும் வர­லாறு நெடு­கிலும் முஸ்­லிம்கள் இலக்­கு­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளார்கள். 30 வருட உள்­நாட்டு யுத்த காலத்­திலும் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­பட்­டார்கள்.

1990 ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த முஸ்­லிம்கள் 300 பேர் சுட்டுக் கொலை செய்­யப்­பட்­டனர். அதே வருடம் அக்­டோபர் மாதம் 20 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் வடக்­கி­லி­ருந்தும் பல­வந்­த­மாக விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டார்கள். சமீப காலத்தில் திகன, அளுத்­கம, மாவ­னெல்லை கல­வ­ரங்­களில் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டார்கள். சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு நாட்டில் இரத்தக் களறி ஏற்­படா வண்ணம் பேராயர் விவே­க­மாக செயற்­பட்டு தடுத்தார். அதற்கு முஸ்லிம் சமூ­கத்­தினர் சார்பில் நன்­றி­களைத் தெரி­விக்­கிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளும், உண்மையான குற்றவாளிகளும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக முஸ்லிம் சமூகம் என்றும் முன் நிற்கும்’ என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.