தாக்­குதல் நடாத்­திய குழு முஸ்­லி­மாக இருந்­தாலும் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­பதே இப்­போ­துள்ள பிரச்­சினை

சிறில் காமினி ஆண்­டகை.

0 1,679

நேர்காணல்
சிங்களத்தில் : பிரியன்த கொடிப்பிலி
தமிழில் : ஏ.ஆர்.ஏ.பரீல்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடாத்­திய குழு முஸ்­லி­மாக இருந்­தாலும் இதன் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார்? என்­பதே இப்­போ­துள்ள பிரச்­சினை. தாக்­கு­த­லுக்கு முன்பு கத்­தோ­லிக்க மற்றும் முஸ்லிம் மக்கள் மத்­தியில் கொலை செய்யும் அள­வுக்கு பிரச்­சி­னைகள் எதுவும் இருக்­க­வில்லை. இது அர­சியல் சூழ்ச்சி எனும் சந்­தேகம் நில­வு­கி­றது’ என்­கிறார் ‘ஞானாந்த பிர­தீப’ எனும் சஞ்­சி­கையின் பிர­தம ஆசி­ரியர் சிறில் காமினி ஆண்­டகை.

அவ­ரு­ட­னான முழு­மை­யான நேர்­கா­ணலின் விபரம்;

கேள்வி: உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­குதல் தொடர்­பான விசா­ரணை நீடித்துச் செல்­கி­றது. முன்னாள் பாது­காப்பு செய­லாளர், முன்னாள் பொலிஸ் மாஅ­திபர் ஆகியோர் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்தும் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இவ்­வாறு சென்றால் யார் குற்­ற­வா­ளி­யா­கு­வார்கள்?

நாங்­களும் அதையே பார்த்­துக்­கொண்­டி­ருக்­கிறோம். தற்­போ­தைய நிலை­மையில் இந்த விசா­ர­ணை­களின் இறுதி தீர்ப்பு, தீர்­மா­னங்கள் தொடர்பில் எதுவும் தெளி­வாக இல்லை. என்ன நடக்கப் போகி­றது என்­பதை பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் நிலை­மையே எமக்கும் ஏற்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடை­பெற்று மூன்று வரு­டங்­களை அண்­மித்­துள்­ளது.

இரண்டு ஆணைக்­குழு அறிக்­கைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இப்­போது ஹேம­சிறி பர்­ணாந்­துவும், பூஜித் ஜய­சுந்­த­ரவும் குற்­றச்சாட்டுகளிலி­ருந்தும் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். மேலும் சுமார் 20 பேருக்கு எதி­ராக வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது. அவர்கள் இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என இனங்­கா­ணப்­பட்­ட­வர்­க­ளாவர். இந்த வழக்­குகள் நீதி­மன்றில் விசா­ர­ணையின் கீழ் உள்­ளன. என்­றாலும் அதற்குப் பின்பு உரு­வான புதிய விட­யங்கள் தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­ப­டு­கின்­ற­னவா? இல்­லையா? என்­பது பற்றி எமக்குத் தெரி­யாது. இத்­தாக்­கு­தலின் உண்மைத் தன்­மையை வெளிப்­ப­டுத்­துங்கள் என்­பதே எமது கோரிக்­கை­யாகும். ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கை­களை ஆராய்ந்து பார்க்­கும்­போது இத்­தாக்­குதல் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத குழு­வொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தாலும் இதன் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்ற சந்­தே­கத்­துக்கு இது­வரை விடை பெற்­றுக்­கொள்ள முடி­யா­ம­லி­ருக்­கி­றது.

இது தொடர்­பாக இது­வரை நடை­பெற்­று­வரும் விசா­ர­ணை­களின் முறை­மை­களை நோக்­கும்­போது உண்மை வெளிப்­ப­டுத்­தப்­ப­டுமா? அல்­லது நீதி வழங்­கப்­ப­டுமா என்­பதில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை.

கேள்வி: முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு இவ்­வி­வ­காரம் தொடர்பில் என்ன நடக்கும் என எல்­லோரும் எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். நீங்கள் என்ன கூறு­கி­றீர்கள்?

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­கவும், பாது­காப்பு அமைச்­ச­ரா­கவும் அது போன்று சேனாதி தலை­வ­ரா­கவும் நாட்டின் பாது­காப்பு தொடர்பில் பூரண பொறுப்­பினை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இந்தப் பொறுப்­பி­லி­ருந்தும் விடு­பட அவ­ரினால் முடி­யாது. ஏப்ரல் மாதம் 4ஆம் திக­தி­யி­லி­ருந்து இந்த தாக்­குதல் தொடர்­பான தக­வல்கள் நிலந்த ஜய­வர்­த­ன­வுக்குக் கிடைத்­துள்­ளன. 4 தட­வைகள் இந்தத் தக­வல்கள் கிடைக்கப் பெற்­றுள்­ளதாம். இவை உண்­மை­யான தக­வல்கள். ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் இது தொடர்பில் சாட்­சியம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் மைத்­தி­ரி­பால சிறி­சேன தக­வல்கள் எத­னையும் தான் அறிந்­தி­ருக்­க­வில்லையென்றும், எவரும் தனக்கு தக­வல்­களை வழங்­க­வில்லை என்றும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார். என்­றாலும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு இவ­ரது சாட்­சி­யத்தை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பொறுப்­பினை துஷ்­பி­ர­யோகம் செய்­துள்­ள­தாகவும் அதனால் அவ­ருக்கு எதி­ராக வழக்கு தொடர்­வ­து­பற்றி கவனம் செலுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சியம் என்றும் சட்­டமா அதி­பரின் சிபா­ரிசு உள்­ளது.

கத்­தோ­லிக்க மற்றும் முஸ்லிம் மக்கள்
மத்­தியில் கொலை செய்யும் அள­வுக்கு பிரச்­சி­னைகள் எதுவும் இருக்­க­வில்­லை­யல்­லவா? அதனால் இது அர­சியல் சூழ்ச்சி எனும் சந்­தேகம் நில­வு­கி­றது. அதா­வது அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வது மற்றும்
அதி­கா­ரத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் தேவைப்­பாடு இதன் பின்னால் இருந்துள்ளது எனும் சந்­தே­கங்கள் அதி­க­ரிக்­கின்­றன.

முன்னாள் ஜனா­தி­பதி இத்­தாக்­குதல் தொடர்பில் தான் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­பதை ஆணைக்­குழு ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்­பது எமக்கு இதி­லி­ருந்து தெளி­வா­கி­றது. அவர் இத்­தாக்­குதல் பற்றி அறிந்­தி­ருந்­தாரா அல்­லது இல்லையா? இதற்குப் பொறுப்புக் கூற வேண்­டுமா? இல்­லையா? என்­பது சட்­டத்தின் மூலமே தெளிவுபடுத்­தப்­பட வேண்டும். நிலந்த ஜய­வர்­த­ன­வுக்கு எதி­ரா­கவும் இது போன்ற சிபா­ரிசு ஒன்று உள்­ளது. அதனால் இவர்­களை பொறுப்­புக்­க­ளி­லி­ருந்தும் வெளியே­று­வ­தற்கு இட­ம­ளிக்க வேண்டாம் என்றே நாங்கள் கூறு­கிறோம். மேலும் பலர் இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள். அவர்கள் அனை­வ­ருக்கும் எதி­ராக சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஒரு­வரை இலக்கு வைக்­கு­மாறு நாம் கூற­வில்லை. பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் யாராக இருந்­தாலும் சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு சட்­டமா அதிபர் கட­மைப்­பட்­டுள்ளார். ஆனால் இது நடை­பெ­றா­மையே பிரச்­சி­னை­யாகும்.

கேள்வி : இந்த தாக்­குதல் பற்றி மூன்று வருட கால­மாக கர்­தினால் அடிக்­கடி அறிக்­கைகள் விடு­கிறார். ஆனால் அர­சாங்கம் இது பற்றி கவ­னத்தில் கொள்­வ­தில்லை. அர­சாங்கம் கர்­தி­னாலைக் கூட கணக்­கெ­டுப்­ப­தில்லை அல்­லவா?

அதுதான் எங்­க­ளுக்கும் உள்ள பிரச்­சினை. இது தொடர்­பான எத­னையும் அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­வ­தில்லை. அர­சாங்கம் என்று ஒன்று இருப்­பது மக்­க­ளுக்­கா­க­வல்­லவா? அர­சாங்கம் மக்­க­ளுக்குப் பொறுப்புக் கூற வேண்டும். இது போன்ற பாரிய தாக்­குதல் ஒன்று இடம்­பெற்ற பிறகு அது பற்றி முறை­யான விசா­ர­ணை­களை நடாத்தி உண்­மையை நாட்­டுக்கு வெளிப்­ப­டுத்த வேண்­டி­யது, குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை வழங்க வேண்­டி­யது சட்­டமா அதிபர் திணைக்­களம், பொலிஸ், இர­க­சிய பொலிஸ் பிரிவு என்­ப­வற்றின் பொறுப்­பாகும். இந்தப் பொறுப்பு சரி­யாக நிறை­வேற்­றப்­படும் நிலைமை இங்கு இல்லை. இது பற்றி தெரி­விக்­கப்­ப­டு­பவை தொடர்பில் கவனம் செலுத்­தப்­ப­டு­வ­தில்லை.

கர்­தினால் அவர்­களும் இது பற்றி பல தட­வைகள் கூறி­யி­ருக்­கிறார். அர­சாங்கம் என்ன செய்யப் போகி­றது என்று நாம் பார்த்துக் கொண்­டி­ருக்­கிறோம். அர­சாங்கம் மற்றும் சட்­டமா அதிபர் திணைக்­களம் இந்த தாக்­குதல் சம்­ப­வத்தை மூடி மறைப்­பது ஏன் என்ற சந்­தே­கமே எம்­மத்­தியில் நில­வு­கி­றது. பொறுப்புக் கூற­வேண்­டி­ய­வர்கள் உண்­மையை வெளிப்­ப­டுத்தத் தயங்­கு­வது ஏன் என்று பல்­வேறு சந்­தே­கங்கள் எழு­கின்­றன. கர்­தினால் உட்­பட ஏனை­ய­வர்கள் கூறு­ப­வை­களை கேட்­ப­தற்கும் அதில் கவனம் செலுத்­து­வ­தற்கும் அர­சாங்கம் செவி­சாய்க்­காமை சிக்­கலை உரு­வாக்­கி­யுள்­ளது.

கேள்வி : இந்த சம்­பவம் குறித்து கர்­தினால் வத்திக்கான் சென்று போப் ஆண்­ட­கையை சந்­தித்தார். அந்த சந்­திப்பின் பிர­தி­பலன் என்ன?

சில தினங்­க­ளுக்கு முன்பே இந்த சந்­திப்பு நடந்­தது. சந்­திப்பின் விப­ரங்கள் முடி­வுகளை விரைவில் வெளி­யிட முடியும். ஒவ்­வொரு வரு­டமும் கர்­தி­னால்கள் போப் ஆண்­ட­கையை சந்­திப்­பது வழ­மை­யாகும். இந்த வருட சந்­திப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசே­ட­மாக பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றுள்­ளது. இந்த பிரச்­சி­னையை உள்­நாட்டில் தீர்த்துக் கொள்ள முடி­யாத நிலைமை உரு­வா­கி­யுள்­ள­மை­யி­னா­லேயே அது பற்றி வத்­திக்­கானில் பேசப்­பட்­டுள்­ளது. இப்­பி­ரச்­சி­னைக்கு சர்­வ­தேச உதவி பெற்றுக் கொள்ள வேண்­டிய நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. இதற்­காக நாம் திட்­டங்­களை வகுத்­துள்ளோம்.

கேள்வி : இத்­தாக்­குதல் பற்றி ஜெனீவா மனித உரிமை பேர­வையின் கவ­னத்­திற்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தல்­லவா?

இது மனித உரிமை மீற­லாகும். இது ஒரு தாக்­குதல். இந்தத் தாக்­கு­தலின் குற்­ற­வா­ளிகள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். இந்த தாக்­குதல் மூலம் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் அடிப்­படை உரிமை அதாவது வாழும் உரிமை பறிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் இது பற்றி கவ­னத்தில் கொள்­ளப்­ப­டா­விட்டால், நாட்­டினால் முடி­யாது விட்டால் நாங்கள் சர்­வ­தே­சத்தை நாட­வேண்­டி­யேற்­படும். கடந்த வருடம் ஜெனீவா அறிக்­கையில் இவ்­வி­டயம் குறிப்­பி­டப்­பட்­டது. கடந்த வரு­டத்­தினை விட இவ்­வ­ருடம் இவ்­வி­டயம் கவ­னத்திற் கொள்­ளப்­படும்.

கேள்வி : அர­சாங்கமும் எதிர்க்­கட்சியும் இந்த பிரச்­சி­னையை விவா­தங்­க­ளுக்குள் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­து­கி­ன்றன என்று நினைக்கத் தோன்­ற­வில்­லையா?

எங்­க­ளுக்கும் அப்­ப­டித்தான் தெரி­கி­றது, என்­றாலும் நாம் எமது முயற்­சியைக் கைவி­ட­வில்லை. தொடர்ந்தும் நாம் அர­சாங்­கத்­துக்கு இது தொடர்பில் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­கின்றோம். பாரா­ளு­மன்றில் இது பற்றி விவா­தித்தோம். அந்த விவா­தத்தில் இரு தரப்­பி­னரும் குற்­றங்­களை சுமத்திக் கொண்டு சண்­டை­யிட்டுக் கொண்­டமை மாத்­தி­ரமே நடை­பெற்­றது.

இந்தப் பிரச்­சி­னையை அர­சியல் மூலம் தீர்த்துக் கொள்ள முடி­யா­தென்­பது எமக்கு இப்­போது தெளி­வா­கி­யுள்­ளது. அர­சியல் தலை­வர்கள் இதன் உண்­மையை வெளிப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு முயற்­சிப்­பதை விட இதனை தாம­தித்து பிரச்­சி­னையை மூடி மறைப்­ப­தற்கு முனை­வ­தா­கவே எமக்குத் தெரி­கி­றது. அர­சியல் கட்­சிகள் இந்தப் பிரச்­சி­னையை அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான ஓர் அணி­க­ல­னா­கவே கையாள்­கின்­றன. இந்தப் பிரச்­சி­னைக்கு மாத்­தி­ர­மல்ல இன்று நாட்டின் எந்­த­வொரு பிரச்­சி­னைக்கும் பாரா­ளு­மன்­றத்தில் சரி­யான தீர்­வொன்று கிடைக்கப் பெற்­ற­தில்லை.

கேள்வி : இந்தத் தாக்­குதல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட சூழ்ச்சி என்ற சந்­தேகம் உங்­க­ளுக்குள் நில­வு­வ­தாக கடந்த காலங்­களில் அடிக்­கடி கூறி வந்­தீர்கள். அந்த சந்­தேகம் தொடர்ந்தும் அப்­ப­டியே இருக்­கி­றதா?

ஆம். அந்த சந்­தேகம் தொடர்ந்தும் இருக்­கி­றது. காரணம் முன்னாள் சட்­டமா அதி­பரும் இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் சூழ்ச்­சி­யொன்று இருந்­துள்­ள­தாக தெரி­வித்­தி­ருக்­கிறார் அல்­லவா? அவ­ரி­ட­மல்­லவா தக­வல்கள் இருந்­துள்­ளன? சட்டம் தொடர்பில் பொறுப்­புள்ள உயர் அதி­கா­ரியே இப்­படிக் கூறிய பிறகு வேறு கதை எதற்கு? இதன் பின்­ன­ணியில் சூழ்ச்­சி­யொன்று இருந்­துள்­ளது என சட்டம் தொடர்­பி­லான உயர் அதி­காரி கூறிய கருத்­தினை நாம் நம்­பு­கிறோம். இந்த சூழ்ச்சி பற்றி தேடிப்­பா­ருங்கள் என்றே நாங்கள் கூறு­கின்றோம். இதனை தேடிப்­பார்க்க முடி­யு­மல்­லவா?

எம்­மிடம் மிகவும் பொறுப்பு வாய்ந்த சிறந்த இர­க­சிய பொலிஸ் அதி­கா­ரிகள், உளவுப் பிரிவு அதி­கா­ரிகள் இருக்­கி­றார்கள். இது ஒரு அர­சியல் ரீதி­யான சூழ்ச்­சி­யாக இருக்­கலாம். வேறு கார­ணங்கள் இருக்க முடி­யாது. இதற்கு கத்­தோ­லிக்க மற்றும் முஸ்லிம் மக்கள் மத்­தியில் கொலை செய்யும் அள­வுக்கு பிரச்­சி­னைகள் எதுவும் இருக்­க­வில்­லை­யல்­லவா? அதனால் இது அர­சியல் சூழ்ச்சி எனும் சந்­தேகம் நில­வு­கி­றது. அதா­வது அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வது மற்றும் அதி­கா­ரத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் தேவைப்­பாடு இதன் பின்னால் இருந்துள்ளது எனும் சந்­தே­கங்கள் அதி­க­ரிக்­கின்­றன. அர­சாங்­கத்­தினால் மாத்­தி­ரமே இந்தச் சந்­தே­கத்தை இல்­லாமற் செய்ய முடியும். அர­சாங்கம் இதற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­ளாத வரை இந்த சந்­தேகம் மேலும் அதி­க­ரிக்கும்.

கேள்வி : நாட்டின் தேசிய பாது­காப்பு என்­பதை பிர­தான தேர்தல் சுலோ­க­மாகக் கொண்டே இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­தது. என்­றாலும் அண்­மையில் ஆல­ய­மொன்­றி­லி­ருந்தும் குண்­டொன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அது தொடர்­பான விசா­ர­ணைகள் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் எழுந்­தன. ஆல­யத்தில் இருந்­த­வர்கள் மீதும் குற்றம் சுமத்­தப்­பட்­டது. இது என்ன நிலைமை?

இது தான் எமக்­கு­முள்ள பிரச்­சினை. இந்த ஆலய குண்டு சம்­ப­வத்தில் பொலி­ஸுக்குப் பொறுப்­பான அமைச்­சரும், பொலி­ஸாரும் நடந்து கொண்ட முறை பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்­குள்­ளா­னது. ஆல­யத்தில் பல வரு­டங்­க­ளாக பணி­யாற்­றிய சிலரை கைது செய்து விட்டு சம்­பந்­தப்­பட்ட அமைச்சர் ஊடக மாநாடு ஒன்­றினை நடாத்­தினார். அங்கு அவர் பிர­தான சந்­தேக நபரை கைது செய்­துள்­ள­தாக கூறினார். பின்பு கர்­தினால் காலையில் சிசிரிவி கமரா பதி­வு­களை சமர்ப்­பித்த போது ‘அவர் இல்லை, வேறொ­ருவர்’ எனக் கூறு­கிறார். மேலும் ஒருவர் கைது செய்­யப்­ப­டு­கிறார். இதி­லி­ருந்து விசா­ர­ணை­களின் இய­லாமை மற்றும் ஒரு நாட­கத்­தன்மை தெளி­வா­கி­றது. சில சம்­ப­வங்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் விரை­வாக நடை­பெறும் முறை எமக்கு தெரியும். திற­மை­யான அதி­கா­ரிகள் இருக்­கி­றார்கள். தவ­று­களை திருத்திக் கொள்­ளலாம். அவர்கள் சுதந்­தி­ர­மாக தமது கட­மை­களைச் செய்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­டு­கி­றதா? என்­பது தான் இங்­குள்ள பிரச்­சினை. அர­சி­யல்­வா­திகள் இவ்­வா­றான சம்­ப­வங்­களில் தலை­யி­டு­கி­றார்கள் இல்லை என்று எம்மால் எப்­படிக் கூற முடியும். எப்­படி நம்­பலாம். சுயா­தீன நிறு­வ­னங்­க­ளுக்கு உள்ள அர­சியல் அழுத்­தங்கள் தான் இறு­தியில் மோச­மான நிலைமை உரு­வா­வ­தற்கு கார­ண­மா­கின்­றன.

இந்த ஆல­யத்தில் குண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் நடை­பெ­று­கின்­றன. ஆனால் அந்த விசா­ர­ணை­க­ளுக்கும் என்ன நடக்கும் என்று தெரி­ய­வில்லை. இந்த விசா­ர­ணைகள் தொடர்பில் எமக்கு நம்­பிக்கை இல்லை. அனைத்­தையும் நாம் சந்­தே­கத்­து­டனே நோக்க வேண்­டி­யுள்­ளது.

கேள்வி : இச்­சம்­ப­வங்கள் தொடர்பில் கருத்து தெரி­விப்­ப­வர்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­வ­தாக முறை­யி­டப்­ப­டு­கி­றது. எதிர்­கா­லத்தில் இது தொடர்­பாக பேசு­வ­தற்கு எவரும் இல்­லாமற் போவார்­களா?

அது தான் நடக்கப் போகி­றது. என்­னையும் மூன்று நாட்கள் சி.ஐ.டி க்கு அழைத்துச் சென்­றார்கள். செஹான் மால­கவை பல நாட்கள் சி.ஐ.டி க்கு கொண்டு சென்­றார்கள். பின்பு கைது செய்­தார்கள். என் உரை­யொன்று தொடர்­பாக சமூக ஊட­கத்தில் பதி­வொன்­றினை வெளி­யிட்­ட­மைக்­காக ஒரு­வரை விசா­ரிக்க சி.ஐ.டி க்கு அழைத்­தார்கள். இதன் மூலம் என்ன முயற்­சிக்­கி­றார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­களை கைது செய்­வ­தாகக் கூறிக் கொண்டு தாக்­குதல் தொடர்பில் குரல் கொடுப்­ப­வர்­களின் வாயை மூடு­வ­தற்கு முயற்­சிக்­கி­றார்கள். பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் பேசு­ப­வர்­க­ளுக்கு செவி­சாய்க்­காமல் நாட்டு மக்கள் இலக்கு வைக்­கப்­ப­டு­வதே இங்கு நடக்­கி­றது.

தாக்­கு­தலின் குற்­ற­வா­ளி­களை தேடு­வ­தற்குப் பதி­லாக அவர்­களை மூடி மறைப்­பதே இங்கு தேவை­யா­க­வுள்­ளது.

எங்­க­ளது வாயை மூட முடி­யாது. நாங்கள் இவற்­றுக்குப் பயப்­படப் போவ­தில்லை. சாட்­சி­யங்­களின் சுதந்­தி­ரத்­திற்கு தடை ஏற்­ப­டுத்த முடி­யாது. இது உலகில் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்ள மனித உரிமை. இதற்கு எல்­லை­யி­டு­வ­தாயின் அதனால் பிரச்­சி­னை­க­ளுக்­குள்­ளாகப் போவது அர­சாங்­கமே.

கேள்வி : இந்த ஜனா­தி­பதி மற்றும் அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்கு கர்­தினால் அவர்­களின் செயற்­பா­டு­களும் கார­ணமாய் அமைந்­தன என்று சமூ­கத்தில் கருத்­தொன்று நில­வி­யது. கர்­தினால் அவர்­களின் செயற்­பா­டுகள் சமூக ஊட­கங்­களில் பெரிதும் விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­னவே?

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்­தி­லேயே இடம்­பெற்­றது. இந்தத் தாக்­கு­தலின் உண்­மையை வெளிப்­ப­டுத்திக் கொள்­வதும், குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­துமே எங்­க­ளது இலக்­காக இருந்­தது. மக்­களின் தேவையும் இது­வா­கவே இருந்­தது. கோத்­தா­பய ராஜ­பக்ஷ தனது மேடை­களில் இத்­தாக்­குதல் தொடர்பில் பல உறு­தி­களை வழங்­கினார். பிர­தான பேசு பொரு­ளா­கவும் இதுவே இருந்­தது. கோத்­த­பாய ராஜ­பக்ஷ இது பற்றி அடிக்­கடி கூறினார். அதனால் கர்­தினால் அவர்களுக்கு மாத்­தி­ர­மல்ல மக்­க­ளுக்கும் கோத்தாபய மீது நம்­பிக்­கை­யொன்று ஏற்­பட்­டது. எதிர்­பார்ப்­புகள் ஏற்­பட்­டன. 69 இலட்சம் மக்­களும் கோத்தாபயவின் உறுதிமொழிகளை நம்பினார்கள். கோத்தாபய அதிகாரத்துக்கு வந்தால் நீதி நிலைநாட்டப்படும் என்று நம்பினார்கள்.
அதி­கா­ரத்­துக்கு வரு­வ­தற்கு முன் கூறி­ய­வைகள் பற்றி நம்­பிக்கை வைத்தோம் என்­ப­தற்­காக அந்த உறு­தி­மொ­ழிகள் நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் அது பற்றி விமர்­சிக்­காமல் இருக்க வேண்டும் என்­றில்­லையே. அவ­ருக்­காக ஆத­ரவு வழங்­கி­னோமே என்று அவர்கள் தவ­றி­ழைத்தால் வாயை மூடிக்­கொண்டு மௌனமாக இருக்க முடியாது.

கேள்வி : கர்தினால் முதல் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் அல்லவா?

இது தான் இப்­போது நடந்­தி­ருக்­கி­றது. 69 இலட்சம் மக்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்கள் அல்­லவா? கியூ வரி­சை­களில் நிற்கும் மக்கள் இதைக் கூறு­கி­றார்கள். சமூக ஊட­கங்கள் பல்­வேறு கருத்­து­களை வெளியிடுகின்றன.

ஒரு பதிவு இவ்வாறு கூறுகிறது. “குற்றச்செயல்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டு வருவதை நோக்கினால் அனைவரும் விடுதலையாகி இறுதியில் கர்தினால் அவர்கள் சிறைக்குச் செல்லும் நிலைமைதான் உள்ளது” உண்மையில் இது தான் மக்களின் நிலைப்பாடு. இறுதியில் இத்தாக்குதல் தொடர்பில் பேசுபவர்களே குற்றவாளியாவார்கள்.

நன்றி : ஞாயிறு லங்காதீப

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.