இளைஞர்களே துப்பாக்கி குண்டுகளுக்கு பயப்படாதீர்
“இளைஞர்களே துப்பாக்கி குண்டுகளுக்குப் பயப்படாதீர்கள். மதத்தலைவர்கள் என்ற வகையில் நாம் அஹிம்சைப் போராட்டத்தில் 24 மணி நேரமும் உங்களுடனே இருப்போம். ஒன்றிணைந்து தாய் நாட்டை மீட்டெடுப்போம். ஜனாதிபதியையும் ஊழல் வாதிகளையும் விரட்டியடித்த பின்பே இவ்விடத்திலிருந்தும் வெளியேறுவோம்” என ஸம்ஸம் பவுண்டேசனின் கல்விப் பிரிவின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அம்ஹர் ஹக்கம்தீன் தெரிவித்தார்.