கண்டி- திகன சம்பவங்கள்: 210 மில்லியன் ரூபா நஷ்டஈடு சொத்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக கண்டி– திகன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களினால் சேதமடைந்த சொத்துகளுக்கும் பள்ளிவாசல்களுக்கும் இதுவரை 210 மில்லியன் ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டுப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம். பதூர்தீன் தெரிவித்தார்.