2024 ஹஜ்: மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை யாத்­தி­ரை­யை பாதிக்குமா?

0 65

எப்.அய்னா

2024ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டு­களின் ஒரு அங்­க­மான, பதிவு செய்­யப்­பட்ட முக­வர்­க­ளி­டையே கோட்­டாக்­களை ஒதுக்­கீடு செய்த நட­வ­டிக்கை தொடர்பில் மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால தடை உத்­த­ர­வொன்­றினை பிறப்­பித்­துள்­ளது.

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முகவர் நிய­மனம் மற்றும் பதிவில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் உயர் நீதி­மன்­றத்தின் ஹஜ் வழி­காட்­டல்கள் அரச ஹஜ் குழு­வி­னாலும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­னாலும் மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து கட்­டளை நீதிப் பேராணை ( ரிட் ஒப் மன்­டாமுஸ்) மனு­வொன்று யுனைடட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் பிரைவட் லிமிடட் எனும் ஹஜ் முகவர் நிறு­வ­னத்தால் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டது. அந்த மனு பரி­சீ­லனை செய்­யப்­பட்ட நிலை­யி­லேயே மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் 4 இடைக்­கால கட்­ட­ளை­களை பிறப்­பித்­துள்­ளது.

அதில் 2024 ஆம் ஆண்­டுக்­காக‌ தற்­போதும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளாக கரு­தப்­படும் ஹஜ் முக­வர்­க­ளி­டையே, ஹஜ் கோட்­டாக்­களை பகிர்­வ­தற்கு வழக்கின் இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­ப‌டும் வரை இடைக்­காலத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் 2024 ஆம் ஆண்­டுக்­கான பதிவு செய்­யப்­பட்ட ஹஜ் முக­வ­ராக மனு­தா­ர­ரான யுனைடட் ட்ரவல்ஸை உள்­ளீர்க்க வேண்டும் எனவும் மற்­றொரு இடைக்­கால‌ உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­விரு இடைக்­கால கட்­ட­ளை­க­ளையும் பரி­சீ­லிக்கும் போது, புதி­தாக யுனைடட் ட்ரவல்ஸ் நிறு­வ­னத்தை பதிவு செய்­யப்­பட்ட முக­வ­ராக உள்­ளீர்த்து, ஹஜ் கோட்­டாக்­களை மீள் ஒதுக்­கீடு செய்­வதை மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் விதித்­துள்ள இடைக்­கால தடை வலி­யு­றுத்­து­வ­தா­கவும் இந்த இடைக்­கால தடை ஹஜ் பய­ணங்­க­ளுக்கு எந்த வகை­யிலும் தடை­யாக இல்லை எனவும் சட்ட வல்­லு­நர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இவ்­வ­ருடம் 3500 ஹஜ் கோட்டா சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்­சினால் இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த 3500 ஹஜ் கோட்டா 93 ஹஜ் முக­வர்­க­ளுக்­கி­டையில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட 93 ஹஜ் முக­வர்­களும் நேர்­முகப் பரீட்­சை­யொன்றின் மூலம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த பகிர்ந்­த­ளிப்­புக்கே இடைக்­கால தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அதனை மீள் ஒதுக்­கீடு செய்ய நீதி­மன்றின் இடைக்­கால கட்­ட­ளைகள் வலி­யு­றுத்­து­வ­தாக அமைந்­துள்­ளன‌.

இவ்­வ­ரு­டத்­துக்­கான பதிவு செய்­யப்­பட்ட ஹஜ் முக­வர்­களை தெரிவு செய்­வதில் தமக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறி சி.ஏ./ ரிட்/ 173/2024 எனும் ரிட் மனு மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்­யப்­பட்­டது.
மனு­தாரர்: யுனைடட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் பிரைவட் லிமிடட் (United Travels & Holidays (PVT) LTD)

மனுவின் பிர­தி­வா­திகள்:
முஸ்லிம் சமய, கலா­சார திணைக்­க­ளத்தின் தலைவர் ஸைனுல் ஆப்தீன் மொஹம்மட் பைசல், அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­ராஹீம் அன்ஸார், அக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளான இபாஸ் நபுஹான், நிப்ராஸ் நஸீர், எச்.எம். மில்பர் கபூர், அஹ்கம் உவைஸ், 2023 ஆம் ஆண்டின் ஹஜ் முறைப்­பா­டுகள் குறித்து விசா­ரித்த சுயா­தீன விசா­ரணைக் குழுவின் செய­லாளர், புத்த சாசன, மத மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்க‌ ஆகியோர்.
இந் நிலையில், இந்த கட்­டளை நீதிப் பேராணை மனு­வா­னது ( ரிட் ஒப் மன்­டாமுஸ்) மேன் முறை­யீட்டு நீதி­மன்ற நீதி­பதி டி.என். சம­ரகோன் முன்­னி­லையில் கடந்த மார்ச் 27 ஆம் திகதி பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.
இதன்­போது மனு­தாரர் சார்பில் சட்­டத்­த­ரணி சஞ்­ஜீவ களு­ஆ­ரச்­சியின் ஆலோ­ச­னைக்கு அமைய சட்­டத்­த­ரணி ஹபீல் பாரிஸ் ஆஜ­ரானார்.

அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்­ராஹீம் அன்ஸார், அக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளான இபாஸ் நபுஹான், நிப்ராஸ் நஸீர், எச்.எம். மில்பர் கபூர், அஹ்கம் உவைஸ், 2023 ஆம் ஆண்டின் ஹஜ் முறைப்­பா­டுகள் குறித்து விசா­ரித்த சுயா­தீன விசா­ரணைக் குழுவின் செய­லாளர் ஆகி­யோ­ருக்­காக விதான பத்­தி­ரன சட்ட நிறு­வ­னத்தின் ஆலோ­ச­னைக்கு அமைய சட்­டத்­த­ர­ணி­க­ளான‌ எம்.ஐ.எப். சுரைய்யா, சிபான் மஹ்ரூப் ஆகி­யோ­ருடன் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் ஆஜ­ரானார்.

முஸ்லிம் சமய, கலா­சார திணைக்­க­ளத்தின் தலைவர் ஸைனுல் ஆப்தீன் மொஹம்மட் பைசல், புத்த சாசன, மத மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்க ஆகி­யோ­ருக்­காக சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி மிஹிரி டி அல்விஸ் ஆஜ­ரானார்.

மனு தொடர்­பி­லான மனுதாரரின் எழுத்து மூல சமர்ப்­ப­ணங்கள் கடந்த மார்ச் 25 ஆம் திக­தியும் பிர­தி­வா­தி­களின் எழுத்து மூல சமர்ப்­ப­ணங்கள் கடந்த மார்ச் 28 ஆம் திக­தியும் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

அதன்­ப­டியே, கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இம்­ம­னுவில் பிர­தி­வா­தி­க­ளுக்கு அறி­வித்தல் பிறப்­பித்து, மனு­தாரர் கோரிய இடைக்­கால நிவா­ர­ணங்­களில் 4 இடைக்­கால கட்­ட­ளை­க­ளையும் பிறப்­பித்­தி­ருந்­தது.
இடைக்­கால தடை உத்­த­ர­வுகள் :

1. யுனைடட் நிறு­வ­னத்­துக்கு விதிக்­கப்­பட்ட தடை தொடர்பில் 2024 ஜன­வரி 17ஆம் திகதி ஹஜ் குழு அனுப்­பி­யுள்ள கடி­தத்­துக்கு இடைக்­கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.
2. இவ்­வ­ருடம் ஹஜ் முக­வ­ராக யுனைடட் ட்ரவல்ஸ் நிறு­வனம் நிய­மிக்­கப்­ப­டாமை தொடர்பில் அந்த நிறு­வ­னத்தின் மேன்­மு­றை­யீட்டை கவ­னத்திற் கொள்ள முடி­யாது என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் 2024 பெப்­ர­வரி 29 ஆம் திகதி அனுப்­பிய கடி­தத்­துக்கு இடைக்­கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.
3. 2024 ஆம் ஆண்­டுக்­கான பதிவு செய்­யப்­பட்ட ஹஜ் முக­வர்­க­ளி­டையே, ஹஜ் கோட்­டாக்­களை பகிர்­வ­தற்கு வழக்கின் இறுதித் தீர்­மானம் எடுக்­கப்­ப‌டும் வரை இடைக்­காலத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.
4. 2024 ஆம் ஆண்­டுக்­கான பதிவு செய்­யப்­பட்ட ஹஜ் முக­வ­ராக மனு­தா­ரரை உள்­ளீர்க்க இடைக்­கால‌ உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

வழக்கின் பின்­னணி :
கடந்த வருடம் (2023) ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை ஹஜ் கட­மைக்கு அழைத்துச் சென்ற ஹஜ் முகவர் நிலை­யங்­களில் ஒன்­றான யுனைடட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் பிரைவட் லிமிடட் மூலம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட ஒருவர் முறைப்­பாடு ஒன்­றினை செய்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. முன்­வைக்­கப்­பட்ட முறைப்­பாட்­டினை அடுத்து அந்­நி­று­வ­னத்­துக்கு ஹஜ் முறைப்­பாட்டு விசா­ரணைக் குழு 2 வரு­டங்கள் தற்­கா­லிக தடை விதித்­தது. ஹஜ் முறைப்­பாட்டு விசா­ரணை குழு­வினால் விதிக்­கப்­பட்ட இத் தண்­ட­னைக்­கெ­தி­ராக குறிப்­பிட்ட முகவர் நிலையம் மேன்­மு­றை­யீடு செய்­துள்­ளது.

எவ்­வா­றா­யினும் 2024 ஆம் ஆண்­டுக்­கான‌ ஹஜ் முகவர் நிய­ம­னத்­துக்­கான நேர்­முகப் பரீட்சை நடத்­தப்­பட்­ட­போது யுனைடட் ட்ரவல்ஸ் நிறு­வ­னமும் அதில் கலந்­து­கொண்­டுள்­ளது. முக­வ­ராக‌ நிய­மனம் பெறு­வ­தாயின் நேர்­முகப் பரீட்­சையில் 50க்கு மேற்­பட்ட புள்­ளிகள் பெற வேண்­டு­மெனக் கூறப்­படும் நிலையில் குறித்த‌ நேர்­முகப் பரீட்­சையில் யுனைடட் ஹஜ் முகவர் நிறு­வனம் 68 புள்­ளி­களைப் பெற்­றுள்­ளமை தொடர்­பிலும் வழக்கின் இடையே சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

2023ஆம் ஆண்டு ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் யுனைடட் முகவர் நிலை­யத்­துக்கு எதி­ராக 2 முறைப்­பா­டுகள் ஹஜ் முறைப்­பாடு விசா­ரணைக் குழு­வுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. உயர் நீதி­மன்றின் ஹஜ் வழி­காட்­டல்­களின் படி ஹஜ் முகவர் நிய­மன நேர்­முகப் பரீட்­சைக்கு முன்பே முறைப்­பாடு தொடர்­பான விசா­ரணை நடாத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் நேர்­மு­கப்­ப­ரீட்சை நடாத்­தப்­பட்­டதன் பின்பே முறைப்­பாடு தொடர்­பான விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­கவும் முறைப்­பா­டுகள் ஹஜ் யாத்­திரை நிறை­வுற்று 3 மாத காலத்­துக்குள் நடத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டிய பின்­ன­ணியில் 5 மாதங்­களின் பின்பே விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­ட­தா­கவும் மனு­தாரர் குற்றம் சுமத்­து­கின்றார்.

அத்­துடன் கடந்த வருடம் 2023இல் மனு­தா­ர­ரான யுனைடட் ஹஜ் நிறு­வ­னத்­துக்கு 25 ஹஜ் கோட்டா ஒதுக்­கப்­பட்­ட­தா­கவும் அதில் 10 கோட்­டாவை ஹஜ் குழுவின் தலைவர் தனது நிறு­வ­னத்­துக்கு அறி­விக்­கா­ம­லேயே வேறு இரு ஹஜ் முக­வர்­க­ளுக்கு தலா 5 கோட்­டாக்காள் வீதம் வழங்­கி­யுள்­ள­தா­கவும் ஹஜ் குழுவின் தலை­வ­ருக்கு எதி­ராக குறித்த முகவர் நிறு­வ­னத்­தினால் ஹஜ் முறைப்­பாடு விசா­ரணைக் குழு­வுக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தா­கவும் மனு மீதான பரி­சீ­ல­னை­களின் போது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே பழி­வாங்கும் நோக்­குடன் தன் மீது தடை விதிக்­கப்­பட்­ட­தாக மனு­தா­ர­ரான யுனைடட் ட்ரவல்ஸ் நிறு­வனம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள ரிட் மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
எனினும் பிர­தி­வா­தி­க­ளான ரிசீலனைகளின் போது வெளிப்படுத்தப்பட்டது.
இவ்வாறான பின்னணியிலேயே பழிவாங்கும் நோக்குடன் தன் மீது தடை விதிக்கப்பட்டதாக மனுதாரரான யுனைடட் ட்ரவல்ஸ் நிறுவனம் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் பிரதிவாதிகளான ஹஜ் குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அக்குற்றச்சாட்டை மறுத்து நீதிமன்றில் விடயங்களை முன் வைத்துள்ளதுடன், ஓய்வு பெற்ற‌ நீதிபதி ஒருவரின் கீழ் நடந்த சுயாதீன விசாரணையின் பரிந்த்துரைக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விடயங்களை முன் வைத்துள்ளனர்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே அனைத்து விட­யங்­க­ளையும் ஆராய்ந்­துள்ள மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் மனுவை விசா­ர­ணைக்கு ஏற்று அறி­வித்தல் அனுப்­பி­யுள்­ள­துடன், மேற்­கு­றிப்­பிட்ட 4 இடைக்­கால தடை உத்­த­ர­வு­க­ளையும் பிறப்­பித்­துள்­ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.