சாகிர் நாயிக், பீ.ஜே. இலங்கை வரவில்லை
பிரபலமான இந்திய இஸ்லாமிய பிரசாரகர்களான டாக்டர் சாகிர் நாயிக் மற்றும் பி.ஜெய்னுலாப்தீன் இருவரும் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்பு இலங்கை வந்து பிரசாரங்களை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு அறிக்கை விட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றும் பொய்யானவையாகும். குறிப்பிட்ட இரு பிரசாரகர்களும் இலங்கையில் பிரசாரங்களை மேற்கொள்ளவுமில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.