மஹர சிறைச்சாலை வளாக பள்ளியை மீள ஒப்படைக்குக
மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல், சிறைச்சாலை அதிகாரிகளால் ஓய்வு அறையாக மாற்றப்பட்டு புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் குறிப்பிட்ட ஜும்ஆ பள்ளிவாசலை தொழுகைக்காக கையளிக்கும் படி நீதி சட்ட மறுசீரமைப்பு, மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிவாசல் 100 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றினைக் கொண்டதாகும்.…