‘சவூதி நூர்’ திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்

தூதுவர் நேரில் சென்று பார்வையிட்டார்

0 400

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மன்னர் சல்மான் நிவா­ரணம் மற்றும் மனி­தா­பி­மான உத­வி­க­ளுக்­கான மையம், காத்­தான்­கு­டியில் கண் பார்­வை­யோடு தொடர்­பான நோய்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் சவூதி நூர் தன்­னார்வத் திட்டம் ஒன்றை ஏற்­பாடு செய்­துள்ள­து.

இதற்­க­மைய சவூதி அரே­பியா தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்­தானி நேற்­று புதன்­கி­ழமை காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு விஜயம் செய்து சவூ­தியின் ஒளி இல­வச கண்­புரை சத்­திர சிகிச்சை முகாமை பார்­வை­யிட்டார்.

இதனை பார்­வை­யி­டு­வ­தற்கு வரு­கை­தந்த சவூதி அரே­பியா தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்­தா­னியை காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சாலை வைத்­திய அத்­தி­யட்­சகர் டாக்டர் எம் எஸ்.எஸ்.எம்.ஜாபீர் மற்றும் வைத்­தி­ய­சாலை ஊழி­யர்கள் அபி­வி­ருத்தி குழு உறுப்­பி­னர்கள் வர­வேற்­றனர்.

இதன்போது வடமேல் மாகாண ஆளுநர் ஹாபீஸ் நஸீர் அஹமத் திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசால் காசீம் சவூதி அரே­பிய மன்னர் சல்மான் அவர்­களின் ‘நிவா­ரணம் மற்றும் மனி­தா­பி­மானப் பணி­க­ளுக்­கான மன்னர் மையம் நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் கண் சத்­திர சிகிச்சை நிபுணர் அப்துல் கரீம் கிழக்கு மாகாண ஆளு­நரின் செய­லாளர் உட்­பட அதி­கா­ரிகள் பலரும் வருகை தந்­தனர்.

சவூதி அரே­பிய தூது­வ­ருக்கு காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சாலை அத்­தி­யட்­சகர் டாக்டர் ஜாபீர் நினைவுச் சின்னம் வழங்கி கெள­ர­வித்தார்

கண்­புரை சத்­திர சிகிச்சை மேற் கொள்­வதை தூதுவர் பார்­வை­யிட்­ட­துடன் சத்­திர சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்டு வைத்­தியசாலையில் தங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளையும் தூதுவர்‌ சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

சவூ­தியின் ஒளி இல­வச கண்­புரை சத்­திர சிகிச்சை முகாம் கடந்த (06) திங்­கட்­கி­ழமை காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் ஆரம்­ப­மா­னது.

சவூதி அரே­பிய மன்னர் சல்மான் அவர்­களின் ‘நிவா­ரணம் மற்றும் மனி­தா­பி­மானப் பணி­க­ளுக்­கான மன்னர் மையம்’ (King Salman Humanitarian Aid and Relief Centre) இதற்­கான நிதி அனு­ச­ரணையை வழங்­கு­கின்­றது.

அத்­துடன், ‘சவூ­தியின் ஒளி’ பார்வைக் குறை­பாடு மற்றும் அதற்­கான கார­ணி­க­ளுக்கு எதி­ராக போராடும் தன்­னார்வ நிகழ்ச்சித் திட்டம் என்ற உல­க­ளா­விய திட்­டத்தின் கீழ் இலங்­கையில் கண் புரை நோயினால் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் மக்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்கும் வகையில் இந்த சத்­தி­ரசிகிச்சை இடம் பெறு­கி­றது

எதிர்­வரும் 17ம் திகதி வரை இடம் பெறு­வ­துடன் இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கண் வைத்­தி­யர்கள் இங்கு சத்­திர சிகிச்­சையை மேற் கொள்­கின்­றனர்.
இத்­திட்­டத்­திற்­காக நாட­ளா­விய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பரிசோதனை முகாம்கள் மூலம் சகல இனங்களையும் சேர்ந்த வசதி குறைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்­டத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான நோயா­ளி­க­ளுக்கு அறுவை சிகிச்சை செய்தல், அவர்­க­ளுக்கு மருத்­துவ சேவைகள் வழங்­குதல், மருந்து மற்றும் மூக்குக் கண்­ணாடி வழங்­குதல் மற்றும் அவர்­க­ளுக்கு சுகா­தார விழிப்­பு­ணர்வு வழங்­குதல் ஆகி­யன அடங்கும்.

இத்­திட்­ட­மா­னது, கடந்த காலங்­களில் இலங்கை உட்­பட அனைத்து நாடு­க­ளிலும் மன்னர் சல்மான் நிவா­ரணம் மற்றும் மனி­தா­பி­மான உத­வி­க­ளுக்­கான மையத்தால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட திட்­டங்­களின் தொட­ராகும்.

கடந்த ஆண்டு செப்­டம்பர் 06ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தியில், தென்­னி­லங்­கையில் வலஸ்­முல்ல மற்றும் கிழக்கு மாகா­ணத்தில் காத்­தான்­குடி ஆகிய பகு­தி­களில் இவ்­வா­றான தன்­னார்வத் திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மன்னர் சல்மான் நிவா­ரணம் மற்றும் மனி­தா­பி­மான உத­வி­க­ளுக்­கான மைய­மா­னது, உல­கெங்­கிலும் தேவை­யு­டைய மக்­க­ளுக்கு உத­விக்­கரம் நீட்­டு­வதில் முன்­ன­ணியில் உள்­ளது.

டிசம்பர் 31, 2023 வரை­யான காலப்­ப­கு­தியில், மன்னர் சல்மான் நிவா­ரணம் மற்றும் மனி­தா­பி­மான உத­வி­க­ளுக்­கான மையத்­தினால் உலகின் 98 நாடு­களில் மொத்­த­மாக 6,532,536,783 அமெ­ரிக்க டொலர் செலவில் 2,673 திட்­டங்கள் செயல்படுத்த ப்பட்டுள்ளது. இதில் இலங்கையில் 14,311,611 அமெரிக்க டொலர்கள் செலவில் 17 திட்டங்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.