வில்பத்து வன அழிப்பு விவகாரம் : ரிசாத் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நாளை
வில்பத்து தேசிய வன பிரதேசத்தில் அதிபாதுகாப்புக்குட்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியை துப்புரவு செய்து மீள்குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் செய்துள்ளதாகத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் உட்பட சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள வழக்கின் மேலதிக விசாரணை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.