முப்படையினருக்கான பாதுகாப்பு அதிகாரங்கள் தொடர்ந்தும் நீடிப்பு

0 670

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து நாட்டில் அமு­லுக்கு வந்த அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்ட பின்பு நாட்டு மக்­களின் பாது­காப்பு கருதி ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவினால் முப்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்டு வந்த பாது­காப்பு தொடர்­பான அதி­கா­ரங்கள் மேலும் ஒரு மாத காலத்­திற்கு நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் நாட்டின் அனைத்து மாவட்­டங்கள் மற்றும் அவற்­றுடன் தொடர்­பு­டைய கடற்­ப­ரப்பு என்­ப­வற்றின் பாது­காப்பு அதி­கா­ரங்கள் முப்­ப­டை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. அதற்­கான விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் அடிப்­ப­டையில் இரா­ணுவம், கடற்­படை மற்றும் விமா­னப்­ப­டை­யி­ன­ருக்கு அனைத்து மாவட்­டங்­க­ளிலும் சமா­தா­னத்தை நிறுவும் பணி எதிர்­வரும் ஒரு மாத காலத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு தின குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அமு­லுக்கு வந்த அவ­ச­ர­கா­ல­சட்டம் நீக்­கப்­பட்­டதன் பின்பு ஒவ்வோர் மாதமும் 21 ஆம் திகதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.