சட்டக் கல்வியும் குற்றச் செயல்களும்
நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதி வாய்ந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டமையும், போதைப் பொருளுடன் தொடர்புபட்ட பாதாள உலக கோஷ்டி குழுக்களுக்கிடையிலான கொலைச் சம்பவங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.
சட்ட விரோத ஆயுதங்கள் இந்தக் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாடளாவிய ரீதியில் கடந்த வருடம் 1064 சட்ட விரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவற்றுடன்…