பெய்ரூட் உச்­சி­மா­நாட்டில் பொரு­ளா­தார நிகழ்ச்சி நிரல்­க­ளுக்கு அரபுத் தலை­வர்கள் இணக்கம்

0 657

பெய்­ரூட்டில் நடை­பெற்ற அர­பு­லக பொரு­ளா­தார மற்றும் சமூக அபி­வி­ருத்தி உச்­சி­மா­நாட்டின் இறு­தியில் சிரிய அக­தி­களை அவர்­க­ளது தாய்­நாட்­டிற்கு பாது­காப்­பாக அனுப்பி வைப்­பதை ஊக்­கப்­ப­டுத்தல் என்ற தீர்­மா­னத்­திற்கு மேல­தி­க­மாக 29 அம்ச பொரு­ளா­தார நிகழ்ச்சி நிர­லுக்கு அரபுத் தலை­வர்கள் இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.

20 நாடுகள் பங்­கு­பற்­றிய இந்த உச்­சி­மா­நாடு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பெய்ரூட் பிர­க­டனம் என்ற பெயரில் கூட்­ட­றிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டது. அந்தக் கூட்­ட­றிக்­கையில் அர­பு­லக சுதந்­திர வர்த்­தக வல­ய­மொன்றை உரு­வாக்க வேண்டும் எனவும், அக­திகள் மற்றும் இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு அடைக்­கலம் வழங்கும் நாடு­க­ளுக்கு சர்­வ­தேச சமூகம் ஆத­ர­வ­ளிக்க வேண்­டு­மெ­னவும் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

தீர்­மா­னத்தை வாசித்த அரபு லீக்கின் உதவிச் செய­லாளர் நாயகம் ஹொஸ்ஸாம் ஸாகி, அக­திகள் மற்றும் இடம்­பெ­யர்ந்த மக்­களின் துயர் துடைக்க உதவும் அதே­வேளை அவர்­க­ளுக்கு அடைக்­கலம் வழங்­கி­யுள்ள நாடு­க­ளுக்­கான அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்கு உத­வி­க­ளையும் வழங்­கவும் வேண்டும் என சர்­வ­தேச மற்றும் அர­பு­லக உதவி வழங்கும் சமூ­கத்­திற்கு ஞாப­க­மூட்­டினார்.

நிகழ்வில் ஆரம்ப உரை­யினை நிகழ்த்­திய லெபனான் ஜனா­தி­பதி மெக்கெய் ஒவுன், இடம்­பெ­யர்ந்­துள்ள சிரிய மக்கள் பாது­காப்­பாக மீளத் திரும்­பு­வதை ஊக்­கப்­ப­டுத்த வேண்­டு­மெனத் தெரி­வித்­த­தோடு, அந்த முன்­னெ­டுப்பு யுத்­தத்­தினால் சிதை­வ­டைந்­துள்ள நாட்டில் அர­சியல் தீர்வு என்ற விட­யத்­துடன்  தொடர்­பு­ப­டுத்திப் பார்க்­கப்­ப­ட­லா­காது எனவும் தெரி­வித்தார்.

ஆயி­ரக்­க­ணக்­கான சிரிய அக­தி­க­ளுக்கு அடைக்­கலம் வழங்­கி­யுள்ள லெபனான், சிரிய ஜனா­தி­பதி பஷர் அல்-­அஸாத் நாட்டின் பெரும்­பா­லான பகு­தி­களை மீட்டு தனது கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வந்­துள்­ளதைத் தொடர்ந்து அவர்கள் மீளத் திரும்­பு­வது தொடர்பில் கோரிக்­கை­யினை முன்­வைத்­தது. இது தொடர்­பான கலந்­து­ரை­யாடல் அர­சியல் தீர்­வுடன் தொடர்­பு­பட்­ட­தாக இருக்க வேண்­டு­மென ஏனைய நாடுகள் வலி­யு­றுத்­தின.

எதிர்­வரும் மார்ச் மாதம் துனி­சி­யாவில் இடம்­பெ­ற­வுள்ள அரபு லீக் உச்­சி­மா­நாட்­டிற்கு முன்னோட்டமாக இடம்பெறும் இந்தப் பொருளாதாரம் சம்பந்தமான கூட்டம் அரசியல் பிளவுகள் மற்றும் அரபுத் தலைவர்களின் குறைந்த வருகை காரணமாக சோபையிழந்து காணப்பட்டது. பல தலைவர்கள் இறுதி நேரத்தில் தமது வருகையினை இரத்துச் செய்தனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.