சவூதியின் கல்வித் திட்டத்தில் சீனமொழி

சவூதி அரே­பி­யா­வி­லுள்ள பாட­சா­லைகள் மற்றும் பல்­க­லைக்­க­ழ­கங்­களின் அனைத்து மட்­டங்­க­ளிலும் பாட­வி­தா­னத்தில் சீன மொழி­யினை இணைத்­துக்கொள்வ­தற்கு கடந்த வெள்­ளிக்­கி­ழமை சீனாவும் சவூதி அரே­பி­யாவும் இணக்கம் கண்­டுள்­ளன. இரு நாடு­க­ளுக்­கு­மி­டையே அனைத்து மட்­டங்­க­ளி­லு­மான தந்­தி­ரோ­பாய ஒத்­து­ழைப்­பினை மேலும் ஆழப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு மற்றும் நட்­பு­ற­வினை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் சீனத் தலை­நகர் பீஜிங்கில் சவூதி பட்­டத்து இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் மற்றும் சீனாவின் உயர்­மட்ட…

ஓமான் விபத்தில் 4 இலங்­கையர் மரணம்

ஓமான் நாட்டில் கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற கோர விபத்­தொன்­றின்­போது அம்­பாறை மாவட்­டத்தின் அக்­க­ரைப்­பற்றைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஒரே குடும்­பத்­தினைச் சேர்ந்த மூவரும், பொத்­துவில் பிர­தே­சத்­தினைச் சேர்ந்த சிறுவர் ஒரு­வரும் மர­ணித்­துள்­ளனர். மேலும் இருவர் பலத்த காயங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர். ஓமான் நாட்டின் அல்-­ஜபல் அல்-­அஹ்தார் என்னும் மலைப் பகு­தி­யினை அண்­டிய பிர­தே­சத்தில் இடம்­பெற்ற விபத்­தி­லேயே இவர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். உயி­ரி­ழந்­த­வர்­களில் மூவர் சிறு­வர்­க­ளாவர்.…

294.5 கிலோகிராம் ஹெரோயின் சிக்கியது

இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட அதிக தொகை ஹெரோயின், நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைவாக அப்பிரிவினரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படை­யி­னரும் இணைந்து கொள்­ளுப்­பிட்டி நவீன சந்தை கட்­டிடத் தொகு­தியின் வாகனத் தரிப்­பி­ட­மொன்றில் முன்­னெ­டுத்த விசேட சுற்றி வளைப்­பி­லேயே இப்­போதைப் பொருள் சிக்­கி­யது. இதன்­போது சுமார் 353.388 கோடி ரூபா பெறு­ம­தி­யான 294 கிலோ 490 கிராம்  ஹெரோயின்  கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. அத்­துடன் குறித்த போதைப்­பொ­ருளை வர்த்­தக…

முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணியும் உரிமையை உறுதிப்படுத்தியது மனித உரிமைகள் ஆணைக்குழு

திரு­கோண­மலை ஷண்­முகா இந்­துக்­கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த அபாயா அணிந்து கட­மையில் ஈடு­ப­டு­வ­தற்­கான தடை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. திரு­கோ­ண­மலை ஷண்­முகா இந்துக் கல்­லூ­ரியில் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கட­மை­யாற்­று­வது அவர்­க­ளது அடிப்­படை உரிமை என்றும் அதற்குத் தடை விதித்­ததன் மூலம் பாட­சா­லையின் அதிபர், குறித்த ஆசி­ரி­யை­களின் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மையை மீறி­யுள்­ள­தா­கவும் இலங்கை மனித உரி­மைகள்…