இஸ்ரேலிய மாணவி அவுஸ்திரேலியாவில் கொலை சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு
இஸ்ரேலிய மாணவியொருவரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபரின் விளக்கமறியலை எதிர்வரும் ஜூன் மாதம் வரை அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்று கடந்த திங்கட்கிழமையன்று நீடித்துள்ளது. மேலும் சந்தேக நபரினால் பிணை தொடர்பில் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லையென நீதிமன்ற பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்பேர்னில் நண்பர்களுடன் இரவைக் கழித்துவிட்டு வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்த போது 21 வயதான ஐயியா மாசர்வே கொல்லப்பட்டார்.…