தற்போதைய ஆட்சியாளர்கள் பௌத்த மத தலைவர்களின் கருத்துக்களை கேட்பதில்லை

திவி­யா­கஹ யசஸ்ஸி தேரர்

0 536

முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­த­னவின் ஒரு சில நட­வ­டிக்­கைகள் மிகவும் மோச­மா­ன­தாகக் காணப்­பட்­டாலும் அவர் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் போது மகா­நா­யக்க தேரர்கள் உட்­பட பௌத்த மதத்­த­லை­வர்­களின் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து அதன்­ப­டியே செயற்­பட்டார் என கொழும்பு புதிய கோறளை பிர­தம சங்க நாயக்க தேரர் திவி­யா­கஹ யசஸ்ஸி தேரர் தெரி­வித்தார்.

என்­றாலும் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இவ்­வா­றான ஒரு செயற்­பாட்டைக் காண­மு­டி­ய­வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று தேவை­யாக இருந்தால் அது தொடர்பில் மகா­நா­யக்க தேரர்கள் உட்­பட அனைத்து தரப்­பி­ன­ரதும் கருத்­துகள் கேட்­ட­றி­யப்­ப­ட­வேண்டும் எனவும் கூறினார்.

கொழும்பில் அகில இலங்கை பௌத்த சம்­மே­ள­னத்தின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற கருத்­த­ரங்­கொன்றில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில் தெரி­வித்­த­தா­வது,

கடந்த 11 ஆம் திகதி பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவின் அறிக்­கையின் ஆரம்­பத்தில் இலங்கை மக்­க­ளான எம்மால் இது சமர்ப்­பிக்­கப்­ப­டு­கி­றது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது மக்­களால் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கையா? இது போன்ற அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­மாறு மக்கள் வேண்­டிக்­கொண்­டார்­களா?

இந்த புதிய அர­சியல் அமைப்பை நாம் முழு­மை­யாக நிரா­க­ரித்­தி­ருக்­கிறோம். ஜே.ஆர். ஜய­வர்­தன அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கி­ய­போது மகா­நா­யக்க தேரர்கள் உட்­பட பௌத்த மதத்­த­லை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினார். பல்­வேறு அர­சியல் கட்­சிகள், அமைப்­பு­க­ளுக்கு கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு சந்­தர்ப்பம் வழங்­கினார்.

அனைத்து மதங்­களைச் சேர்ந்த பிர­தி­நி­திகள் தங்­க­ளது கருத்­து­களை வழங்­கி­னார்கள்.

ஆனால் இன்று ஒரு சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை ஒன்று சேர்த்துக் கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்­சி­களில் ஆட்­சி­யா­ளர்கள் ஈடு­பட்­டுள்­ளார்கள்.

பௌத்த மதம் பாது­காக்­கப்­பட்டு, அது வளர்க்­கப்­பட வேண்­டு­மென அர­சி­ய­ல­மைப்பின் 9 ஆவது பிரிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மாகாண சபை­க­ளுக்கு முழு­மை­யாக அனைத்து அதி­கா­ரங்­க­ளையும் வழங்கப் போகி­றார்கள். 2013 இல் வடக்கு மாகாண சபை பத­விக்கு வந்­ததும் வடக்­கி­லுள்ள அனைத்து இரா­ணுவ முகாம்­களும் அகற்­றப்­ப­ட­வேண்­டு­மென அவர்கள் சட்­ட­மொன்­றினை நிறை­வேற்றிக் கொண்­டார்கள். வடக்கில் அனைத்து பன்­ச­லை­க­ளையும் அகற்­றுதல், ஜனா­தி­பதி நிய­மிக்கும் ஆளு­ந­ரல்­லாது வடக்கு முத­ல­மைச்சர் ஆளு­நரை நிய­மிப்­பது போன்ற பிரே­ர­ணை­களை நிறை­வேற்றிக் கொண்­டார்கள்.

புதிய அரசியல மைப்பின் மூலம் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரங்களை இல்லாமற் செய்து அவரை ஒரு பொம்மையாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். புதிய அரசியலமைப்பு மகாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்த மதத்தலைவர்களை உள்ளடக்கிய குழுவொன்றினாலே உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.