முஸ்லிம்கள் போதைப்பொருள் கடத்துவதாக நான் கூறவில்லை

முஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும்  சமூ­க­வ­லைத்­தளம் ஒன்று எனது பேச்சை திரி­பு­ப­டுத்தி செய்தி வெளி­யிட்­டுள்­ள­தென ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் கோப்­குழு அறிக்கை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், தனியார் ஊட­க­மொன்றில் கலந்­து­கொண்டு அண்­மையில் போதைப்­பொருள்…

பலஸ்தீனர்களின் பிறப்பிடமாக காஸாவை நெதர்லாந்து அரசாங்கம் அங்கீகரிக்கவுள்ளது

இஸ்­ரேலின் உரு­வாக்­கத்­திற்குப் பின்னர் பிறந்த பலஸ்­தீ­னர்­களின் உத்­தி­யோ­க­பூர்வ பிறப்­பி­ட­மாக காஸா பள்­ளத்­தாக்­கி­னையும் கிழக்கு ஜெரூ­சலம் உள்­ளிட்ட ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்குக் கரை­யையும் அங்­கீ­க­ரிக்­க­வுள்­ள­தாக நெதர்­லாந்து அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. பலஸ்­தீன தேசத்தை இது­வரை அங்­கீ­க­ரிக்­காத நெதர்­லாந்து, பிரித்­தா­னியப் பிர­க­டனம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக முடி­வ­டைந்த பலஸ்­தீன ஆள்­புலப் பிர­தே­சங்­களை பலஸ்­தீ­னர்­க­ளது உண்­மை­யான பிறப்­பி­ட­மாக அங்­கீ­க­ரிக்­க­வுள்­ளது. இந்த அறி­வித்தல் ஹேக்கில் வைத்து…

புத்தளத்தில் மூன்று நாட்கள் கறுப்பு தினங்களாக பிரகடனம்

புத்­தளம் அறு­வக்­காட்டில் குப்பை கொட்டும் திட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் இந்த வாரம் மூன்று நாட்­களை புத்­த­ளத்தின் கறுப்பு நாட்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தாக புத்­தளம் மாவட்ட சர்­வ­மத செயற்­குழு அறி­வித்­துள்­ளது. புத்­தளம் பெளத்த மத்­திய நிலையம், இந்து மகா சபை, கிறிஸ்­தவ சபை,  ஜம்­இய்­யத்துல்  உலமா, புத்­தளம் பெரிய பள்­ளி­வாசல் ஆகி­யன இணைந்தே எதிர்­வரும் புதன்­கி­ழமை (13), வியா­ழக்­கி­ழமை (14) மற்றும் வெள்­ளிக்­கி­ழமை (15) ஆகிய நாட்­களை கறுப்பு நாட்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன்…

அம்பாறை, கண்டி, திகன இன வன்முறைகள்: நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை தேக்கம்

புதி­தாக அர­சாங்கம் நிறு­வப்­பட்­டதன் பின்பு இது­வ­ரை­காலம் புனர்­வாழ்வு அதி­கார சபைக்கு தலை­வரும், பணிப்­பாளர் சபையும் நிய­மிக்­கப்­ப­டா­ததால் இன வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டாது தேங்கிக் கிடப்­ப­தாக புனர்­வாழ்வு அதி­கார சபையின் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் ‘விடி­வெள்ளி'க்குத் தெரி­வித்தார். அம்­பாறை மற்றும் கண்டி, திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கும், பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் வழங்­கப்­பட வேண்­டிய நஷ்ட…