முஸ்லிம்கள் போதைப்பொருள் கடத்துவதாக நான் கூறவில்லை
முஸ்லிம்கள்தான் போதைப்பொருட்களை கொண்டுவருவதாக நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. கம்பஹா மாவட்டத்தில் இயங்கும் சமூகவலைத்தளம் ஒன்று எனது பேச்சை திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளதென ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கோப்குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தனியார் ஊடகமொன்றில் கலந்துகொண்டு அண்மையில் போதைப்பொருள்…