மாரவிலவில் பாரிய விபத்து
சிலாபம், மாரவில - மஹவெவ பகுதியில் நேற்று அதிகாலை தனியார் பயணிகள் பஸ் வண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சக்திவாய்ந்த மின் மாற்றியொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 ஆண்கள், மூன்று பெண்கள் உள்ளடங்கலாக 19 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிலாபம், கொழும்பு, ராகம மற்றும் இராணுவ வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்தின்போது காயமடைந்து மாரவில…