திசை திருப்பப்படும் அரசியலமைப்பு முயற்சிகள்

நாட்டில் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெறுகின்ற போதிலும் அதனைச் சாத்தியமாக்க முடியாத துரதிஷ்ட நிலையே தொடர்கிறது. இதற்கிடையில் இந்த முயற்சிகள் தொடர்பில் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் மூலம் திசை திருப்புவதற்கான வேலைத்திட்டங்களும் தற்போது தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. எமது நாட்­டுக்கு காலத்­துக்­கேற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற யோச­னை­யொன்று பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்டு அது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம்…

மட்டக்களப்பில் சமாதானத்தை சீர்குலைக்கும் சக்திகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்

அண்மைய நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதான சகவாழ்வை சீர்குலைக்கும் விதத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றன.இவர்கள் தொடர்பில் அனைத்து மக்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன சமாதான பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சமாதான பேரவையின் தலைவர் யூ.எல்.எம்.என். முபீன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, அண்மையில் களுவங்கேணி பாடசாலை மாணவி ஒருவர் பலவந்தமாக இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டார்…

ஐ.நாவின் ஜி 77 இன் தலைமைப் பதவி பலஸ்தீனத்திற்கு கிடைத்தது

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் மிகப்பெரும் கூட்டமைப்பான ஜி 77 மற்றும் சீனாவின் தலைமைப் பதவி பலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டமையைக் குறிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையில் நிகழ்வொன்று இடம்பெற்றது அந்நிகழ்வில் உரையாற்றிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் ஆக்கிரமிக்கப்பட்ட ஆள்புலப் பிரதேசங்களின் அபிவிருத்தியை இஸ்ரேல் தடை செய்வதாகத் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், இஸ்ரேல் எமது அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் இணைப்புக்கான ஆற்றல்களைப் புறந்தள்ளி பலஸ்தீன தேசத்தில் காலனித்துவ…

விடுவிக்கப்பட்ட காணியை வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு வழங்க முடியாது

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படவிருந்த நிலையில், அதனை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இடைநிறுத்தியுள்ளார். மேலும், குறித்த காணியின் பூர்வீக உரிமையாளர்களுடன் தான் கலந்துரையாடிய பின்னரே இது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க வேண்டும் என மாகாண காணி ஆணையாளருக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பணிப்புரை வழங்கியுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அஸ்ரப் நகர் கிராம சேவகர் பிரிவின்…