இன ரீதியான முரண்பாடுகளை உருவாக்கி அதனூடாக எமது செயற்பாடுகளை முடக்குவதற்கு முனைகின்றனர்

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

0 596

சிலர் இன ரீதி­யான முரண்­பா­டு­களை உரு­வாக்கி அத­னூடாக எமது செயற்­பா­டு­களை முடக்­கு­வ­தற்கு முனை­கின்­றனர். எனினும் நான் கிழக்கு மாகாண ஆளுநர் என்ற பத­வியை அர­சி­ய­லுக்கு பயன்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் கலா­நிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

காத்­தான்­குடி மீரா பாலிகா  மகா வித்­தி­யா­லய தேசிய பாட­சா­லையின் வரு­டாந்த இல்ல விளை­யாட்­டுப்­போட்டி கல்­லூ­ரியின் அதிபர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தலை­மையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.அவர் தெடர்ந்து உரை­யாற்­று­கையில்,  நான் பாரா­ளு­மன்­றத்தில் ஒரு வெறும் எதிர்க்­கட்சி உறுப்­பி­ன­ராக இருந்து கொண்டு காலத்தை ஓட்­டு­வதை விடுத்து கிழக்கு மாகா­ணத்­திற்கு தலைமை தாங்கி  மாகா­ணத்தின் வறு­மையை நீக்கி பொரு­ளா­தா­ரத்தை  கட்­டி­யெ­ழுப்பி  ஒரு வளர்ச்­சி­ய­டைந்த மாகா­ண­மாக மாற்­ற­வேண்டும் என்­ப­தற்­கா­கவே  இப்­ப­த­வியை  பொறுப்­பேற்­றி­ருக்­கின்றேன். எனது பத­வியை எதிர்­வரும் ஜன­வரி 10ஆம் திகதி இரா­ஜி­னாமாச் செய்­து­வி­டுவேன். ஆதலால் பத­வி­யி­லி­ருக்கும் எனக்கு ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு நிமி­டமும்   முக்­கி­ய­மா­னது. என்­னு­டைய ஒரு நாளும் வீணாகப் போய்­வி­டக்­கூ­டாது என மிக அவ­தா­ன­மாக செயற்­ப­டு­கின்றேன்.

சிலர் இன ரீதி­யான முரண்­பா­டு­களை உரு­வாக்கி அத­னூடாக எமது செயற்­பா­டு­களை முடக்­கு­வ­தற்கு முனை­கின்­றனர். தவ­றான செய்­தி­களை வெளி­யி­டு­கின்­றனர். கடந்த வாரம் காத்­தான்­குடி மத்­திய கல்­லூ­ரி­யி­னு­டைய விளை­யாட்டு விழா­வுக்கு நான் வருகை தந்­த­போது மாணவர் படை­ய­ணி­யி­னரின் கடேட் பிரி­வினர் எமக்கு இரா­ணுவ மரி­யாதை செலுத்­தினர். அதனை பிர­பல தமிழ் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் நான் உரு­வாக்­கிய ஜிஹாத் படைப்­பி­ரிவே ஆயு­தம்­தாங்கி எனக்கு இரா­ணுவ மரி­யாதை தந்­த­தாக பெரி­து­ப­டுத்தி  வெளி­யி­டு­கின்­றனர். எமது விட­யங்­களை  விமர்­சிக்­கின்ற பூரண  உரிமை  உங்­க­ளுக்கு இருக்­கின்­றது. நான் ஏதா­வது தவ­றுகள் செய்தால்  இன­ரீ­தி­யான  முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும்  தீர்­மா­னங்­களை நான்  எடுத்தால்  எனது ஆளுநர் என்ற செயற்­பாட்டில்  குறைகள் இருந்தால்  எந்த சந்­தர்ப்­பத்­திலும்  என்னைப் பற்றி எழு­த­மு­டியும்.  என்னை சந்­திக்­க­மு­டியும். அவற்­றுக்கு தீர்வு வழங்க  நான் ஆயத்­த­மாக இருக்­கின்றேன். ஏன் அந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது என்­பதை சொல்­வ­தற்கு நான் ஆயத்­த­மாக இருக்­கின்றேன். இதை­வி­டுத்து உண்­மைக்கு மாறாக பொய்­யாக ஜிஹாத் படை பரிவு என்று இனங்­க­ளுக்­கி­டையில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வதில் இருந்து விடு­பட வேண்டும் என கேட்டுக் கொள்­கின்றேன்.இவ்­வாறு  இன ரீதி­யாக  முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம்  என்ன இலா­பத்தை  அடையப் போகின்­றீர்கள் என நான் கேட்கின்றேன். கிழக்கு மாகாணம்  பல பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. நான் ஆளுநர் பதவியை பொறுப்பேற்கும்போது இங்கு பிரச்சினை இருக்கின்றது, அதற்கு நான் முகம்கொடுக்கவேண்டும்  என்பதையெல்லாம் அறிந்துதான் நான் ஜனாதிபதியுடன் பேசி  இப்பதவியை  பொறுப்பேற்றேன் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.