தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற அனீக் அஹமட்
தேசிய பரா ஒலிம்பிக் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வருடத்துக்கான தேசிய பரா மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த செப்டெம்பர் மாதம் 5 ஆம், 6 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றன.
இலங்கையிலுள்ள ஊனமுற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீரர்களுக்காக நடத்தப்படுகின்ற ஒரேயொரு போட்டித் தொடராக விளங்குகின்ற தேசிய பரா மெய்வல்லுநர் தொடரில் இம்முறை 45 கழகங்களைச் சேர்ந்த சுமார் 800 மாற்றுத் திறனாளி வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பார்வை குறைபாடுடையவர்கள், உடல்…