சந்தேகங்களை நீக்கவே நூலை எழுதினேன்

உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர்

0 1,540

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 07.09.2019 அன்று இடம்­பெற்ற மஜ்லிஸ் அஷ்­ஷூரா கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சியில் “அல்­குர்ஆன் வன்­மு­றையை தூண்­டு­கி­றதா?” எனும் தலைப்பில் அண்­மையில் வெளி­யிட்ட நூல் தொடர்­பாக எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு நூலா­சி­ரியர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் அளித்த பதில்­களில் தொகுப்பு வரு­மாறு:

நேர்­கா­ணலும் தொகுப்பும்: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல்

Q நீங்கள் இந்த புத்­த­கத்தை எழு­து­வ­தற்குப் பின்­பு­ல­மாக அமைந்த கார­ணிகள் யாவை?

பிர­தா­ன­மாக மூன்று கார­ணிகள் உள்­ளன.

1. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்கள், தமது செயலை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கு அல்­குர்­ஆ­னையே ஆதா­ர­மாகக் காட்­டி­னார்கள்.

2. முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த இஸ்லாம் பற்­றிய தெளிவு இல்­லா­த­வர்கள், இத்­த­கைய பிர­சா­ரங்­களால் குழம்­பிப்­போ­யி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு ஒரு தெளிவை வழங்­க­வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

3. இந்த நிகழ்­வுக்குப் பின்னர் முஸ்லிம் அல்­லா­த­வர்கள் மிகத் தவ­றான புரி­தலின் கார­ண­மாக இஸ்­லாத்தை விமர்­சித்­தார்கள். ஆயுதப் போராட்டம் தொடர்­பாக குர்­ஆனில் வந்­தி­ருக்­கின்ற வச­னங்­களை எடுத்துக் காட்டி, குர்ஆன் ஆயுதப் போராட்­டத்தை தூண்­டு­கி­றது என்று அவர்கள் கூற ஆரம்­பித்­தார்கள். எனவே, அவர்­க­ளுக்கும் தெளிவு தேவைப்­ப­டு­கி­றது. இவர்­க­ளது இந்த சந்­தே­கத்தை நீக்க வேண்­டிய தேவை உள்­ளது. இந்த மூன்று கார­ணி­களும் தான் இந்த நூலை எழு­து­வ­தற்கு தூண்­டு­த­லாக அமைந்­தன.

Qஇந்தப் புத்­த­கத்தின் உள்­ள­டக்கம் தொடர்­பாக என்ன கூற விரும்­பு­கி­றீர்கள்?

இந்தப் புத்­தகம் 5 தலைப்­பு­களைக் கொண்­ட­தாக அமைந்­தி­ருக்­கி­றது. அவற்றைச் சுருக்­க­மாக விளக்­கலாம் என நினைக்­கிறேன்.

1. அல்­குர்­ஆனை ஆய்வு செய்யும் சரி­யான முறை:

அல்­குர்­ஆனை நாம் ஆய்வு செய்­வ­தற்கு எத்­த­கைய ஆய்வு முறை அல்­லது வழி­மு­றையை பின்­பற்ற வேண்டும் என்­பது பற்றி ஆரம்­பத்தில் அங்கு ஆரா­யப்­ப­டு­கின்­றது. அல்­குர்ஆன் உல­கி­லுள்ள நூல்­களைப் போன்ற ஒரு நூலல்ல. அது விட­ய­தா­னங்­களைக் கையாளும் விதம் வித்­தி­யா­ச­மா­னது. ஸூராக்­க­ளுக்கு இடப்­பட்­டுள்ள தலைப்­புக்­களை வைத்து உள்­ள­டக்­கத்தை அறிய முடி­யாது. உதா­ர­ண­மாக, பகரா (மாடு) என்று ஸூரா­வுக்கு தலைப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும், அங்கு ஒரு சம்­பவம் மாத்­தி­ரமே மாடு பற்­றி­ய­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

எனவே, ஒரு குறிப்­பிட்ட தலைப்பு பற்­றிய அல்­லது விட­ய­தானம் பற்­றிய அல்­குர்­ஆனின் நிலைப்­பாட்டை, சிந்­த­னையை நாம் புரிந்­து­கொள்ள வேண்­டு­மாக இருந்தால், உதா­ர­ண­மாக யுத்தம் பற்­றிய அல்­குர்­ஆனின் நிலைப்­பாட்டைப் புரிந்­து­கொள்ள வேண்­டு­மாக இருந்தால், ஓர் ஆயத்தை அல்­லது ஒரு ஸூராவை மாத்­திரம் வைத்து புரிந்­து­கொள்ள முடி­யாது. ஒரு குறிப்­பிட்ட தலைப்பு பற்­றிய தெளிவைப் பெற பல ஸூராக்­களை வாசித்து விட்டே முடி­வுக்கு வர­வேண்டும். யுத்தம் பற்றி படிக்க யுத்தம் சம்­பந்­த­மாக வந்­தி­ருக்­கின்ற எல்லா வச­னங்­க­ளையும் திரட்டிப் படித்துப் பார்த்துத் தான் புரிந்­து­கொள்ள வேண்டும். இதற்கு தற்­கா­லத்தில் ‘தப்ஸீர் மவ்­ழுஈ’ என்று நவீன கால அறி­ஞர்கள் கூறு­வார்கள்.

2. அல்­குர்ஆன் இறங்­கிய சூழ­மைவு:

அல்­குர்ஆன் எல்லாக் காலத்­துக்­கு­மு­ரி­யது என்­பது உண்­மைதான். இருந்­தாலும், அல்­குர்­ஆனின் சில வச­னங்கள் சூழலைப் பொறுத்து இறங்­கி­யி­ருக்­கின்­றன. சூழ­மை­வு­க­ளுக்­கேற்ப, மனி­தர்­க­ளுக்கு ஏற்ப குர்­ஆ­னிய வச­னங்கள் இறங்­கின. உதா­ர­ண­மாக மதீ­னாவில் வாழ்ந்த யூதர்கள், மக்­காவில் வாழ்ந்த நிரா­க­ரிப்­பா­ளர்­க­ளான குறை­ஷிகள் ஆகி­யோ­ரது நிலைப்­பா­டு­களைக் கவ­னத்­திற்­கொண்டு வச­னங்கள் இறக்­கப்­பட்­டன. எனவே, இறங்­கிய சூழ­லையும் மனி­தர்­க­ளையும் புரிந்­து­கொள்­வது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.

இந்த இரண்டு முறை­க­ளையும் கவ­னிக்­காமல் குர்­ஆனை விளங்க முயற்­சிப்­பது தவ­று­களை ஏற்­ப­டுத்தும். இது பொது­வாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு உண்­மை­யாக இருக்­கி­றது. அல்­குர்­ஆனின் ஒரு­சில வச­னங்­களை மாத்­திரம் வாசித்­து­விட்டு, முடி­வு­க­ளுக்கு வரு­வது பலர் விடு­கின்ற தவ­றாகும்.

3. போர் பற்­றிய குர்­ஆ­னியப் பார்வை:

நூலின் அடுத்த தலைப்பு போர் சம்­பந்­த­மான குர்­ஆ­னு­டைய பார்வை பற்­றி­ய­தாகும். போர் பற்­றிய அல்­குர்­ஆனின் சிந்­த­னையைப் புரிந்­து­கொள்­வ­தற்கு முன்னர் வேறு சில விவ­கா­ரங்­களில் குர்ஆன் என்ன நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதை நாம் புரிந்­து­கொள்­வது அவ­சி­ய­மாகும். அந்த விவ­கா­ரங்கள் பற்­றிய அல்­குர்­ஆனின் கண்­ணோட்­டத்தின் பின்­ன­ணியில் தான் யுத்தம் பற்­றிய அதன் சரி­யான நிலைப்­பாட்டை நாம் புரிந்­து­கொள்ள வேண்டும்.

உதா­ர­ண­மாக, மனி­தனைப் பற்­றியும், மனித சுதந்­திரம் பற்­றியும் குர்ஆன் என்ன சொல்­கி­றது என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும். மனி­த­னுக்கு செயல் சுதந்­திரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்று குர்ஆன் கூறி­யி­ருந்தால் கண்­டிப்­பாக யுத்தம் பற்­றிய கோட்­பாடு அத­னு­டைய வெளிச்­சத்­தில்தான் அமைய வேண்டும். குர்ஆன் தனது கருத்­துக்­களை பகுத்­த­றிவு ரீதி­யாக பேசி­யி­ருப்­பதால் ஆயு­தத்தைக் காட்டி பேசி­யி­ருக்கும் எனக் கூற­மு­டி­யாது. நீ ஏற்­றுக்­கொள்­ளா­விட்டால் உன்னை கொலை செய்வேன் என்று குர்ஆன் பேச­வில்லை. அப்­படிப் பேசி­யி­ருந்தால் பகுத்­த­றிவு ரீதி­யா­கவும் விஞ்­ஞான ரீதி­யா­கவும் அது கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருக்க முடி­யாது. எனவே, தர்க்க ரீதி­யாக இதனை புரிந்­து­கொள்ள வேண்டும். யுத்தம் சம்­பந்­த­மாக ஆரம்­பத்தில் இறக்­கப்­பட்ட ஆயத்­துக்­களை மாத்­திரம் நாம் ஆய்­வு­செய்து பார்த்தால் கூட, தற்­காப்பு யுத்­தத்­தைத்தான் அல்­குர்ஆன் குறிப்­பிட்­டி­ருக்­கி­றது என்­பதை புரிந்­து­கொள்ள முடியும்.

4. பிழை­யாக புரி­யப்­பட்ட வச­னங்­க­ளுக்­கான சரி­யான விளக்கம்:

அடுத்­த­தாக, பிழை­யாகப் புரிந்­து­கொள்­ளப்­பட்ட வச­னங்கள் என்ற தலைப்பில், 23 வச­னங்கள் எடுக்­கப்­பட்டு, அவை இப்­புத்­த­கத்தில் விளக்­கப்­பட்­டுள்­ளன. பலர் சரி­யாக விளங்கிக் கொள்ளத் தவ­றிய அல்­லது மயக்கம் ஏற்­பட்­டுள்ள வச­னங்கள், பொது­மைப்­ப­டுத்­தப்­பட முடி­யா­தவை என்­பதை அங்கு விளக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. ஒவ்­வொரு வச­னத்­தையும் எடுத்து அந்த அந்த வசனம் இறங்­கிய சூழலைத் தொடர்­பு­ப­டுத்தி விளக்கம் தரப்­பட்­டுள்­ளது. இஸ்லாம் தற்­காப்பு யுத்­தத்­தைத்தான் அனு­ம­திக்­கி­றது என்­பதும் சமா­தான சக­வாழ்வை அடை­வ­துதான் குர்­ஆ­னு­டைய நோக்கம் என்­பதும் விளக்­கப்­பட்­டுள்­ளது. யுத்தம் சம்­பந்­த­மான வச­னங்­களில் கூட சமா­தானம் பற்றிப் பேசப்­பட்­டுள்­ளது.

5. அல்­குர்­ஆனில் ஏன் போராட்ட வச­னங்கள்:

நூலின் அடுத்த பகு­தியில் குர்­ஆனில் ஏன் போராட்டம் சம்­பந்­தப்­பட்ட வச­னங்கள் வந்­தி­ருக்­கின்­றன என்ற கேள்­விக்­கான பதில் உள்­ளது. இறை பாதையில் நீங்கள் மர­ணித்தால் உங்­க­ளுக்கு சுவர்க்கம் கிடைக்கும்; உங்­க­ளுக்கு நன்மை இருக்­கி­றது என்­றெல்லாம் சொல்­லக்­கூ­டிய வச­னங்கள் ஏன் வந்­தி­ருக்­கின்­றன என்ற கேள்­வியும் எழு­கி­றது. அதற்­கான நியா­யங்­களை கடைசி அத்­தி­யா­யத்தில் விளக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டது.

அரபு சமூ­கத்­தினர் இஸ்லாம் வரு­வ­தற்கு முன்னர் யுத்தப் பிரி­யர்­க­ளாக இருந்­தார்கள். இரத்தம் ஓட்­டு­வது அவர்­க­ளு­டைய வாழ்வில் சாதா­ர­ண­மான ஒன்­றாக இருந்­தது. கொள்­ளை­ய­டிப்­பது, அடி­மை­க­ளாக பிடித்­துக்­கொள்­வது, செல்­வங்­களை அப­க­ரிப்­பது, கோத்­திரப் பெரு­மையைக் காப்­பாற்­று­வது போன்ற கார­ணங்­க­ளுக்­கா­கத்தான் போரா­டி­னார்கள். மாறாக ஒரு சிந்­த­னைக்­காகப் போரா­டி­யதைக் காண முடி­யாது.

எனவே, நீங்கள் ஒரு கொள்­கைக்­காக போராட வேண்­டு­மென்ற கருத்தை அல்­குர்ஆன் அங்கு வலி­யு­றுத்­தி­யது. உங்­க­ளு­டைய போராட்டம், நோக்கம் இப்­ப­டித்தான் அமைய வேண்டும் என்­பதை அதி­க­மாகச் சொல்ல வேண்­டி­யேற்­பட்­டது. முஸ்­லிம்கள் போரா­டிய சந்­தர்ப்­பங்­களில் சிறு­பான்­மை­யி­ன­ரா­கத்தான் இருந்­தார்கள். சொற்ப தொகை­யினர் இருந்­தார்கள். யுத்­தத்­திற்கு போவ­தற்கு அவர்­க­ளுக்கு ஒரு தயக்கம் இருந்­தது. எனவே, சின்னத் தொகை­யாக இருந்­தாலும் நீங்கள் போரா­டுங்கள் என்று தூண்­டு­கின்ற வச­னங்கள் அங்கு இடம்­பெற வேண்­டிய தேவை ஏற்­பட்­டது.

இந்த நூலில் கூறப்­பட்­டுள்ள கருத்­துக்கள் அல்­லது சிந்­த­னைகள் நவீ­ன­கால அறி­ஞர்­களால் முன்­வைக்­கப்­பட்­டன என்று நினைத்து விடக்­கூ­டாது. இமாம் சுப்யான் அத்­தௌரி அவர்கள் யுத்­தங்கள் தற்­காப்­புக்­கா­கத்தான் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றன என்ற கருத்தைக் கொண்­டி­ருந்­தார்கள். இமாம் இப்னுல் முபாரக் அவர்கள் யுத்தம் ஸஹா­பாக்கள் மீது தான் கட­மை­யாக்­கப்­பட்­டி­ருந்­தது; பின்னால் வந்­த­வர்கள் மீது கட­மை­யா­ன­தல்ல என்று கூறி­யி­ருக்­கி­றார்கள்.

Qஇலங்கை முஸ்லிம் சமூ­கத்­துக்குள் தீவி­ர­வாத, கடும்­போக்கு சிந்­த­னைகள் உரு­வா­கு­வ­தற்கு ஏது­வான எத்­த­கைய கார­ணிகள் இருக்­கின்­றன என்று நீங்கள் கரு­து­கி­றீர்கள்?

சொற்கள், மொழி­பெ­யர்ப்­புக்­களை வைத்து முடி­வுக்கு வருதல் 21.04.2019 இல் நடந்த இந்த மிலேச்­சத்­த­ன­மான நிகழ்வு அதிர்ச்­சியைத் தந்­தது. இப்­ப­டி­யான ஒரு நிலை முஸ்லிம் சமூ­கத்தில் இருக்­கி­றதா என்­பதை அறிந்­த­போ­து­ஆச்­ச­ரி­ய­மாகத் தான் இருந்­தது. குர்­ஆனை விளங்­கு­வ­தற்கும், ஸுன்­னாவை விளங்­கு­வ­தற்கும் பிரத்­தி­யே­க­மான முறை­மைகள் இருக்­கின்­றன. சொல்லை மையப்­ப­டுத்தி, ஆயத்தை மையப்­ப­டுத்தி விளங்க முயற்­சிப்­பது தவ­றுகள் இடம்­பெ­று­வ­தற்­கான கார­ண­மாக அமைந்து விடு­கின்­றது. சிலர் இஸ்­லா­மி­யர்­க­ளாக வாழ வேண்டும் என்ற உணர்வு இருக்­கின்­ற­போது, குர்ஆன், ஹதீஸ் மொழி­பெ­யர்ப்­பு­களை எடுத்து வாசிக்­கி­றார்கள். மொழி­பெ­யர்ப்­பு­களை வைத்து மட்டும் முடி­வு­க­ளுக்கு இவர்கள் வரு­கி­றார்கள். தாமாகப் புரிந்­து­கொள்ள முடி­யு­மென்று நினைத்து வாசிக்க ஆரம்­பித்­த­வுடன் பல பிழை­யான முடி­வு­க­ளுக்கு அவர்கள் வரு­கி­றார்கள். உரிய முறை­மையைப் பின்­பற்­றும்­போது இந்தப் பிழை­களைத் தவிர்க்­கலாம்.

இமாம் ஷாபிஈ அவர்கள் இஸ்­லா­மிய சட்­டத்­துறை எவ்­வாறு பார்க்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­காக ‘அர்­ரி­ஸாலா’ என்ற தனது புத்­த­கத்தை எழு­தி­னார்கள். அது சட்ட ஆய்­வுக்­கான முறைமை (Methodology)யைக் கூறு­கி­றது. முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் இஸ்­லாத்தை பின்­பற்ற வேண்­டு­மென்ற உணர்வு இருக்கும் பொழுது, சிலர் சொற்­களை மையப்­ப­டுத்தி விளங்க முயற்­சித்தால், மொழி­பெ­யர்ப்­பு­களில் தங்­கி­யி­ருந்தால் அத்­த­கை­ய­வர்கள் பிழை­யான முடி­வு­க­ளுக்கு வரு­வார்கள்.

வெளி­நாட்டுத் தாக்கம்:

போகோ ஹராம், அல்­கைதா, ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற குழுக்கள் பல்­வே­று­பட்ட அர­சியல், பொரு­ளா­தார, சூழல் பாதிப்­பு­களால் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. அவர்கள் தமது போக்கை நியா­யப்­ப­டுத்த குர்­ஆனை ஆதா­ர­மாகக் கொள்­கி­றார்கள். எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் அப்­ப­டி­யான தேவை கிடை­யாது. அத்­த­கைய ஒரு சூழலும் இல்லை. இஸ்­லாத்தை பின்­பற்ற வேண்­டு­மென்ற தீவிர உணர்வு கொண்ட முஸ்­லிம்கள் சொல்லை மையப்­ப­டுத்தி விளங்க முற்­பட்­ட­போது, அந்த ஆயுதக் குழுக்­க­ளு­டைய சிந்­தனைத் தாக்­கமும் இவர்­களில் ஏற்­பட்­டது. முகநூல் மற்றும் இணை­யத்­த­ளங்கள் அல்­லது உரைகள் வாயி­லாக இவர்­க­ளுக்கு அவர்­க­ளோடும், அவர்­க­ளது சிந்­த­னை­க­ளோடும் தொடர்பு ஏற்­பட்­டது. இந்தப் பின்­ன­ணி­யில்தான் அவர்கள் இந்த சிந்­த­னைக்குப் போகத் துவங்­கி­னார்கள்.

‘குப்ர்’ பற்றி சிந்­தனை:

‘குப்ர்’ பற்­றிய சிந்­தனைக் கட்­ட­மைப்பு சீர்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதா­வது, முஸ்லிம் அல்­லா­த­வர்­களைப் பற்­றிய முஸ்­லிம்­களின் சிந்­தனை கட்­ட­மைப்பு, அதா­வது முஸ்லிம் அல்­லா­த­வர்­களை முஸ்­லிம்கள் எப்­படி பார்க்­கி­றார்கள் என்­பது மிக முக்­கி­ய­மான விட­ய­மாகும். முஸ்­லி­மல்­லா­த­வர்­களை எப்­படிப் பார்க்க வேண்­டு­மென்ற விட­யத்தில் பல­ருக்கு நல்ல புரிதல் கிடை­யாது.

எனவே, இந்த தீவி­ர­வாத பிரி­வினர் ஏதா­வது முஸ்லிம் அல்­லா­த­வர்­களை பற்றி கூறி­விட்டால், அவற்றை அப்­ப­டியே உள்­வாங்கிக் கொள்­கின்ற நிலை­யில்தான் பொது­மக்கள் இருக்­கி­றார்கள்.

உதா­ர­ண­மாக, ‘காஃபிர்கள்’ என்ற குர்­ஆ­னிய வார்த்­தையை ‘நிரா­க­ரிப்­ப­வர்கள்’ என்று மொழி­பெ­யர்க்­கி­றார்கள். யுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்­கின்ற பொழுது காஃபிர் என்ற சொற்­பி­ர­யோகம் இருக்­கி­றது. ஸூரா பக­ராவில் வரு­கின்ற வசனம் இதற்கு நல்ல உதா­ரணம். அதா­வது,

“நிச்­ச­ய­மாக காஃபிர்­களை நீர் அச்­ச­மூட்டி எச்­ச­ரித்­தாலும் (சரி) அல்­லது எச்­ச­ரிக்­கா­விட்­டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்­பிக்கை) கொள்ள மாட்­டார்கள். அல்லாஹ் அவர்­களின் இத­யங்­க­ளிலும், அவர்கள் செவிப்­பு­லன்­க­ளிலும் முத்­திரை வைத்­து­விட்டான். இன்னும் அவர்­களின் பார்­வை­மீது ஒரு திரை கிடக்­கி­றது; மேலும் அவர்­க­ளுக்கு கடு­மை­யான வேத­னை­யு­முண்டு.”
இந்த வச­னத்தில், வந்­துள்ள ‘கஃபரூ’ என்ற சொல்லை ‘நிரா­க­ரிப்­பா­ளர்கள்’ என்று பொது­மைப்­ப­டுத்தி மொழி­பெ­யர்த்தால், இஸ்­லாத்­துக்கு வெளியே இருக்கும் எவரும் இஸ்­லாத்­திற்குள் வர­மாட்­டார்கள்; வரு­வ­தற்­கான வாய்ப்பே கிடை­யாது. காரணம் அல்லாஹ் அவர்­க­ளு­டைய உள்­ளங்­களில் முத்­தி­ரையை போட்டு விட்டான் என்ற முடி­வுக்கு வர­வேண்டி வரும்.

நிரா­க­ரிப்­பா­ளர்கள் என்று அந்த வச­னத்தை மொழி­பெ­யர்த்­தது பெரிய தவ­றாகும். யுத்­தத்­தோடு சம்­பந்­தப்­பட்ட வச­னங்­களை இப்­படி மொழி­பெ­யர்ப்­பது பிழை­யாகும். ஆங்­கில மொழி­பெ­யர்ப்­புக்­க­ளிலும் இந்த தவறு விடப்­பட்­டி­ருக்­கி­றது. அபுல் கலாம் ஆசாத், முஹம்­மது அஸத் போன்ற சில மொழி­பெ­யர்ப்­பா­ளர்கள் மாத்­திரம் மிக நுணுக்­க­மாக இத்­த­கைய சொற்­களை மொழி­பெ­யர்த்­தி­ருக்­கி­றார்கள்.

இந்த வச­னங்­களை ஓதிக்­காட்டி யாரா­வது ஒருவர் உபன்­னி­யாசம் செய்தால் அவ­ருக்குப் பின்னால் மக்கள் போவார்கள். அவர் இறுக்­க­மான சிந்­தனை கொண்­ட­வ­ராக இருந்தால் நிலை மோச­மா­கி­விடும். எட்டு, பத்து வரு­டங்­க­ளாக இத்­த­கைய சிந்­த­னைப்­போக்கு முஸ்லிம் சமூ­கத்­துக்குள் இருந்­துதான், கடை­சியில் ஆயுதப் போராட்­டத்­துக்குள் சிலரைத் தள்ளி இருக்­கி­றது என்று சொல்ல முடியும். தனி­யாக ஒரு கார­ணத்தை வைத்து மட்டும் நாங்கள் பார்க்க முடி­யாது.

Qஇந்த நாட்டில் சமா­தான சக­வாழ்வை கட்­டி­யெ­ழுப்ப என்ன முயற்­சி­களில் நாம் இறங்க வேண்டும்?

பரஸ்­பர புரிந்­து­ணர்வு வேண்டும்:

இந்த வினா­வுக்கு விளக்­க­மாக பதில் முன்­வைக்­கப்­பட வேண்டும். ஆனால், சுருக்­க­மாக சொல்­கிறேன். சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் நல்ல புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத்­திட்­டத்தை நாம் உரு­வாக்க வேண்டும். மத ரீதி­யான பிரி­வு­களும் இன ரீதி­யான பிரி­வு­களும் இந்த நாட்டில் இருக்­கின்­றன.

இந்த ஒவ்­வொரு சாரார் பற்­றியும் ஏனையோர் புரிந்­தி­ருக்க வேண்டும். இந்தப் புரிந்­து­ணர்வு ஏற்­பட்டு விட்டால் இந்த சர்ச்­சை­களை நாங்கள் தவிர்க்க முடியும். ‘ நீங்கள் பரஸ்­பரம் புரிந்து கொள்­வ­தற்­கா­கவே இனங்­க­ளா­கவும் கோத்­தி­ரங்­க­ளா­கவும் உங்­களை நாங்கள் அமைத்தோம்’ என்று அல்லாஹ் குர்­ஆனில் கூறு­கிறான்.

மத்­ர­ஸாக்கள், பள்ளிவாசல்கள் என்றால் என்ன என்ற தெளிவு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இல்லை. இவை போன்ற சந்தேகங்களும் கேள்விகளும் அவர்களுக்கு மத்தியில் இருக்கின்றன. அந்த சந்தேகங்களை நாங்கள் நீக்கவேண்டும். கௌதம புத்தர் எத்தகைய கருத்துக்களைக் கூறியிருக்கிறார் என்பதை நாங்களும் பெற்றிருக்க வேண்டும். இவை தெளிவு பெறுவதற்கு வழிவகுக்கும்.

கூட்டு வேலைத்திட்டம்:

அடுத்ததாக கூட்டு வேலைத்திட்டத்திற்கு நாம் வருவது நல்லது. இங்கு நாம் ஒன்று சேர்ந்து வேலை செய்யலாம் எனப்படும் விவகாரங்களைக் கண்டறிந்து, அவற்றில் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும். முஸ்லிம் சமூகம் மூடுண்ட நிலையில் இருந்து வெளியே வரவேண்டும். மத்ரஸா, ஸக்காத் என இப்படியாக பல நிறுவனங்கள் எமக்கு மத்தியில் இருக்கின்றன. அவை மூடுண்ட நிலையில்தான் இருக்கின்றன. மைய நீரோட்டத்தில் கலப்பதற்கான வேலைத் திட்டங்கள் வேண்டும். தற்போது அனைத்தும் எமது சமூகத்தையும் மதத்தையும் மையப்படுத்தியதாகவே இருக்கின்றன.

உதாரணமாக வறுமை ஒழிப்புத்திட்டம். பொதுவாக இந்த நாட்டுக்கான வேலைத்திட்டமாக அது விரிவாக்கப்படவில்லை. நமது வறுமை ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் வெளிப்படையானதாக மாற்றப்பட வேண்டும். அதற்கு ஒரு நிறுவனம் இல்லை. எனவே, முஸ்லிம் சமூகம் தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள் இருந்தும்கூட, நாம் அவர்களோடு இருப்பது குறைவாக இருக்கிறது. எனவே, மூடிய நிலையில் இருந்து வெளிவந்து மைய நீரோட்டத்தில் கலப்பதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். சகவாழ்வு புரிந்துணர்வு என்பவற்றைக் கொண்டு செல்வதற்கு இத்தகைய நடவடிக்கைகள் எமக்கு உந்து சக்திகளாக அமையலாம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.