ஈராக்கில் கடும் மழை: இரண்டு நாட்களில் 21 பேர் உயிரிழப்பு
கடந்த இரண்டு நாட்களாக ஈராக்கில் பெய்துவரும் அடைமழை காரணமாக குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுள் பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்குவதாக கடந்த ஞாயிறன்று ஈராக் சுகாதார அமைச்சின் பேச்சாளர் சயிப் அல்-பத்ர் தெரிவித்தார்.
வெள்ளத்தில் மூழ்கியதில் சிலர் உயிரிழந்ததாகவும், ஏனையோர் கார் விபத்துக்கள், மின்சாரத் தாக்கம்…