பாராளுமன்றுக்கு கற்காதவர்களை அனுப்பியதன் விளைவை அனுபவிக்கிறோம்

சமூக விழுமியங்களை சரியாகக் கற்றுக் கொள்ளதாவர்களை பாராளுமன்றம் அனுப்பியதன் விளைவை இன்று நாம் அனுபவிக்கிறோம். இதனால், நாட்டில் ஒரு அரசு இல்லாத நிலையும், மரியாதைக்குரிய பாராளுமன்றில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் நிலையும்  ஏற்பட்டுள்ளதாக கண்டி முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.சி.எம்.யாகூப் தெரிவித்தார். கண்டி முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் வருடந்தோறும் வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களை வழங்கி வருகிறது. அவ்வாறான ஒரு நிகழ்வு வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள பின்தங்கிய…

போதையில் வாகனம் செலுத்தி விபத்தில் மூன்று பேரை பலியெடுத்த நபர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய சந்தேக நபரொருவரால் ஏற்பட்ட விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் சந்தேக நபரான வாகன சாரதியும் காயமடைந்துள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கல்கிஸை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில் கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதியில் கல்கிஸை நீதிமன்றத்திற்கு…

தீர்ப்புக்கு அமைய அரசியல் தீர்மானம்

அரசியலில் இன்று இடம்பெறும் போராட்டம்  எனக்கும் ரணிலுக்கும் இடையிலான தனிப்பட்ட போராட்டமல்ல. தேசியத்துக்கும் சர்வதேசத்திற்கும் இடையிலான போராட்டமே இடம்பெற்று வருகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியல் நெருக்கடியை தீர்க்க அனைவரும் நீதிமன்றத் தீர்ப்பொன்றை எதிர்பார்த்துள்ளோம். இதில் நீதிமன்ற தீர்மானம் என்னவாக அமைகின்றதோ  அதனை மதித்து அடுத்த கட்ட அரசியல் தீர்மானம் எடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று காலை பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும்…

 ஜனாதிபதி முறையை ஒழிக்க இன்னும் தீவிரம் வேண்டும்

அரசியல் ஜனநாயக மரபுகளையும் மீறி, ஜனாதிபதி அகங்காரமாக, ஆணவமாகப்  பேசுகின்ற நிலைவரத்தை வைத்துப் பார்க்கின்றபோது இந்த ஜனாதிபதி முறை இவ்வாறான அரசியல்வாதிகளை கொண்டுவந்து விடுமென்ற அச்சத்தினால் இந்த முறைமையினை இல்லாதொழிக்க வேண்டும் என்பதிலே இன்னும் தீவிரமாக செயற்படவேண்டும் எனும் நிலை ஏற்பட்டுள்தென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  செயற்குழுக் கூட்டம் செயற்குழுவின் செயலாளர் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷாவின் ஏற்பாட்டில்  கட்சியின்…