காலிமுகத்திடலில் பொலிஸாரின் அடாவடித்தனம் கவலையளிக்கிறது
காலி முகத்திடலில் கடந்த 9 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வமத இப்தார் நிகழ்வில் பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்திற்கு கவலை வெளியிட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் இந்நிகழ்வுக்கு பாதகம் விளைவித்த பொலிஸ் அதிகாரிகளை விசாரணை செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரை கோரியுள்ளது.