ஜனாஸா எரிப்பில் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனரா ஆட்சியாளர்கள்?

0 169

ஏ.ஆர்.ஏ.பரீல்

‘உடலில் ஏற்­படும் காயங்­களைச் சுகப்­ப­டுத்­து­வ­தற்கு மருந்­துகள் இருந்­தாலும், மனதில் ஏற்­படும் காயங்­களை சுகப்­ப­டுத்­து­வது மிகவும் இல­கு­வா­ன­தல்ல’ என்று கூறப்­ப­டு­வதை நாங்கள் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம்.

இலங்­கையில் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவி அதனால் மர­ணங்கள் அதி­க­ரித்­தி­ருந்த நிலையில் அப்­போது பத­வியில் இருந்த முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய தலை­மை­யி­லான அர­சாங்கம் கொவிட் 19 தொற்று ஜனா­ஸாக்கள் கட்­டா­ய­மாக தகனம் செய்­யப்­பட வேண்­டு­மென தீர்­மானம் மேற்­கொண்­டி­ருந்­தது. இதனால் பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் சமூ­கத்­திடம் முறை­யாக மன்­னிப்பு கோரு­வ­தற்­காக அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினைத் தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக அமைச்சர் ஜீவன் தொண்­டமான் ஹட்டன் நகரில் அண்­மையில் நடை­பெற்ற இப்தார் நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு தெரி­வித்தார்.

இந்­நி­லையில் அமைச்சர் மனுஷ நாண­யக்­கார காலியில் நடை­பெற்ற ஊடக மாநா­டொன்றில் கலந்­து­கொண்டு பின்­வ­ரு­மாறு கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.
‘எதிர்­கா­லத்தில் முஸ்­லிம்­களின் மர­ணங்கள் அடக்கம் செய்­யப்­ப­டும்­போது இவ்­வா­றான நிலைமை ஏற்­படா வண்ணம், எவ்­வித பிரச்­சி­னை­களும் உரு­வா­கா­ம­லி­ருப்­ப­தற்­காக சட்ட முறை­மையை உரு­வாக்க ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தீர்­மா­னித்­துள்ளார்’ எனக் குறிப்­பிட்டார்.

மேலும், இந்­நாட்டு முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களின் அடக்­கத்­துக்கு ஒவ்­வொரு சூழ்­நி­லை­க­ளுக்கு அமைய தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. முஸ்­லிம்­களின் கலா­சா­ரத்­துக்கு அமை­வாக ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­படும் வகையில் சட்டம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது. இது அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துக்கு அமைய இச்­சட்டம் இயற்­றப்­படும். இதற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் விரைவில் சமர்ப்­பிக்­கப்­படும் எனவும் அவர் கூறினார்.

முஸ்­லிம்­களின் கொவிட் மரணம்
இலங்­கையில் இரண்­டா­வது கொவிட் மரணம் நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை போரு­தொட்டை பகு­தியில் நிகழ்ந்­தது. போரு­தொட்­டையைச் சேர்ந்த 64 வய­தான ஜமால் என்­பவர் கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளாகி நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி மர­ண­ம­டைந்தார்.

தனது தந்­தையின் இறுதிக் கிரி­யை­களை முஸ்­லிம்­களின் கலா­சா­ரத்­திற்கு அமை­வாக கெள­ர­வ­மான முறையில் மேற்­கொள்­ளப்­பட முடி­யாமற் போனமை தொடர்பில் அவ­ரது மகன் மொஹ­மட்­ கியாஸ் இன்றும் கவ­லைப்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறார்.

‘அதைக் கூறி வேலை­யில்லை சேர். எனது தந்­தைக்கு இறுதி அஞ்­சலி செய்ய முடி­யாமற் போனது. எங்­க­ளது சம­யத்­தின்­படி ஜனா­ஸாவில் மாற்­றங்­களைச் செய்­யவோ, எரிப்­ப­தற்கோ முடி­யாது. என்­றாலும் எனது தந்­தைக்கு அது நடந்­து­விட்­டது. எனது தந்தை மர­ணித்த பின்பு அவ­ரது உரிமை மறுக்­கப்­பட்டு விட்­டது. இப்­போது எவ்­வ­ளவு மன்­னிப்பு கோரி­னாலும் அதனால் பயன் உள்­ளதா? வேறு எந்­தவோர் நாட்­டிலும் செய்­யாத வேலையை இங்கு செய்து விட்­டார்கள். ஜனா­ஸாவை எரித்­து­விட்­டார்கள். இதன்­பின்பு இதைப்­பற்றி பேசி பலன் இல்லை’ என மொஹமட் கியாஸ் பிபிசி செய்திச் சேவைக்குத் தெரி­வித்­துள்ளார்.

முத­லா­வது கொவிட் அலையில் 17 முஸ்­லிம்­களும், அதன் பின்னர் 353 முஸ்­லிம்­களும் கொவிட் வைர­ஸினால் பாதிக்­கப்­பட்டு மர­ண­மா­னார்கள். அவர்­களை இஸ்­லா­மிய சமய கலா­சா­ரத்­துக்கு அமை­வாக அடக்கம் செய்ய முடி­யாமற் போன­தா­கவும் அவர்கள் பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­பட்­ட­தா­கவும் முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் தொடர்பில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் சமூக சேவை செயற்­பாட்­டா­ள­ரான மொஹமட் இஸ்மத் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து 2021ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி கொவிட் ஜனா­ஸாக்கள் ஓட்­ட­மா­வடி கொவிட் ஜனாஸா மைய­வா­டியில் அடக்கம் செய்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டது. அங்கு மைய­வா­டியில் சுமார் 2900 ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

கொவிட் தொற்றினால் மர­ணித்­தவர்களை அவர்­கள் வசித்த பகு­தியைச் சேர்ந்த மைய­வா­டியிலேயே 24 மணித்­தி­யா­லத்­துக்குள் அடக்கம் செய்­ய­வ­தற்கு 2022 மார்ச் 5ஆம் திகதி அனு­மதி வழங்­கப்­பட்­டது.

அடக்கம் செய்­வ­தற்­கான தடை
கொவிட் தொற்­றுக்­குள்­ளாகி மர­ணித்­த­வர்­களின் சட­லங்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­வதால் நிலத்­தடி நீரில் வைரஸ் கிரு­மிகள் பரவும் என அன்று பேரா­சி­ரியை மெத்­திகா விதா­னகே தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த நிபு­ணத்­துவ குழு சிபா­ரிசு செய்­தி­ருந்­தது. என்­றாலும் அவ்­வாறு நிலத்­தடி நீரில் கொவிட் வைரஸ் பர­வாது என பேரா­சி­ரியை நீலிகா மாளவிகே உட்­பட மற்றும் சிலர் வாதிட்டு வந்­தனர்.

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் (WHO) படி உல­கெங்­கு­முள்ள 190க்கும் மேற்­பட்ட நாடுகள் கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்கும், தகனம் செய்­வ­தற்கும் அனு­மதி வழங்­கி­யி­ருந்­தன. ஆனால் கொவிட் தொற்­றா­ளர்­களின் மர­ணித்த உட­ல்கள் கட்­டா­ய­மாக தகனம் செய்­யப்­பட வேண்­டு­மென்று இலங்கை மிகவும் உறு­தி­யான நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருந்­தது.

கொவிட் தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் உடல்கள் அடக்கம் செய்­யப்­பட்டால் நிலத்­தடி நீரில் வைரஸ் கிரு­மிகள் பரவி நோய் தொற்­றுகள் அதி­க­ரிக்கும் என நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த விஷேட நிபு­ணத்­துவ குழுவின் சிபா­ரி­சுக்­க­மைய அர­சாங்கம் தகனம் செய்­யப்­பட வேண்­டு­மென்ற உறு­தி­யான கொள்­கையை அமுல்­ப­டுத்­தி­யது.

பேரா­சி­ரியை மெத்­திகா விதா­ன­கேயின்
இன்­றைய நிலைப்­பாடு
கொவிட் தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் இறு­திக்­கி­ரி­யைகள் தொடர்­பாக சிபா­ரி­சுகள் செய்யும் விஷேட நிபு­ணர்கள் அடங்­கிய குழுவின் உறுப்­பி­ன­ரா­க­வி­ருந்த பேரா­சி­ரியை மெத்­திகா விதா­னகே இன்று இவ்­வி­வ­கா­ரத்­தி­லி­ருந்தும் தப்­பித்­துக்­கொள்ள முயற்­சிக்­கிறார்.

‘‘நிபு­ணத்­துவ குழுவில் வைத்­திய சட்ட அதி­கா­ரிகள் பெரும் எண்­ணிக்­கையில் இருந்­தார்கள். கொவிட் சட­லங்­களை அடக்கம் செய்தால் நிலத்­தடி நீர் மூலம் வைரஸ் கிரு­மிகள் பர­வு­வ­தற்கு வாய்ப்­புண்டு என்று அவர்கள் தான் கூறி­னார்கள். அவர்­களின் அதி­க­மா­னோரின் கருத்­து­க­ளுக்கு அமை­வாக நாம் கொவிட் சட­லங்கள் அடக்கம் செய்­யப்­படக் கூடாது, எரிக்­கப்­பட வேண்­டு­மென தீர்­மானம் எடுத்தோம். இது தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்க வேண்­டிய நிலைமை எனக்கே ஏற்­பட்­டது. அதனால் என்னை எல்­லோரும் ஏசி­னார்கள். இது எனது தேவைக்­காக நான் செய்த வேலை அல்ல’’ என்று பேரா­சி­ரியை மெத்­திகா விதா­னகே தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை கொவிட் தொற்று நோய் நீரினால் பரவும் நோயல்ல என வைரஸ் தொற்று தொடர்­பான விஷேட நிபுணர் பேரா­சி­ரியர் மலிக் பீரிஸ் 2020இல் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த போது குறிப்­பிட்­டி­ருந்­தமை கவ­னத்திற் கொள்­ளத்­தக்­க­தாகும்.

எங்­களை எரி­யூட்­டு­வது போன்ற
உணர்வு ஏற்­பட்­டது
‘‘முஸ்­லிம்­க­ளுக்­கென்று விஷே­ட­மான சமய, கலா­சார வழி­மு­றைகள் உள்­ளன. இதற்­க­மைய ஜனா­ஸாக்­க­ளுக்கு மிகவும் உச்ச கெள­ரவம் வழங்­கப்­ப­டு­கி­றது. ஜனா­ஸாக்கள் குளிப்­பாட்­டப்­பட்டு, சுத்தம் செய்­யப்­பட்டு மர­ணித்து 24 மணித்­தி­யா­லத்­துக்குள் நல்­ல­டக்கம் செய்­யப்­ப­டு­கி­றது. அன்று இருந்த அர­சாங்கம் எந்­தவோர் அடிப்­படை கார­ணங்­க­ளு­மின்றி இந்த அடக்கம் செய்யும் எங்­க­ளது சம்­பி­ர­தாய உரி­மையை இல்­லாமற் செய்­தது. எங்­க­ளது உற­வி­னர்­களின் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்ட போது நாங்கள் எரிக்­கப்­ப­டு­வது போன்ற உணர்வே எங்­க­ளுக்கு ஏற்­பட்­டது. அத்­த­கைய வேதனை எங்­க­ளுக்கு ஏற்­பட்­டது. அதனை விப­ரிக்க எங்­க­ளிடம் வார்த்­தைகள் இல்லை’’ என கருத்­தடை சிகிச்சை மேற்­கொண்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு பின்பு அனைத்து குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்தும் விடு­தலை செய்­யப்­பட்ட டாக்டர் சாபி சஹாப்தீன் தெரி­வித்­தார்.
அநே­க­மான சந்­தர்ப்­பங்­களில் பத­வியில் இருந்த அர­சாங்­கங்கள் முஸ்லிம் மக்­களை தங்­க­ளது அர­சியல் இலக்­கினை அடைந்து கொள்­வ­தற்­காக பயன்­ப­டுத்திக் கொண்­டன எனவும் அவர் தெரி­வித்தார்.

பத­வியில் இருந்த ஜனா­தி­பதி பெளத்த மக்­களை சந்­தோ­ஷப்­ப­டுத்­து­வ­தற்­காக முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­வதை தடை செய்தார். ஏனென்றால் பெளத்­தர்­களின் ஆத­ரவு அவ­ருக்குத் தேவைப்­பட்­டது.

இதே­வேளை இப்­போ­துள்ள ஜனா­தி­பதி சில­வேளை எதிர்­வரும் தேர்­தலில் முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை இலக்­கு­வைத்து மன்­னிப்பு கோரு­வ­தாக இருக்­கலாம். உண்­மையில் இப்­போது மன்­னிப்பு கோரு­வதால் பலன் இல்லை. உட­லுக்கு காயம் ஏற்­ப­டுத்­தினால் அந்தக் காயத்தை எப்­ப­டி­யா­வது சுக­மாக்கிக் கொள்­ளலாம். ஆனால் மன­துக்கு காயம் ஏற்­ப­டுத்­தினால் அதை இல­குவில் சுக­மாக்க முடி­யாது. இப்­போது கோத்­தா­பய ராஜ­பக்ஷ மாத்­தி­ரமே இல்லை. ஆனால் அந்த தீர்­மா­னத்தை எடுத்த பவித்ரா வன்­னி­ ஆ­ராச்சி அர­சாங்­கத்தில் இருக்­கிறார் என்றும் டாக்டர் சாபி கூறினார்.

அர­சியல் சுய­நலம் என்­கி­­றார்
கபீர் ஹாஷிம் எம்.பி.
எவ்­வித விஞ்­ஞான அடிப்­ப­டை­க­ளு­மின்றி முஸ்லிம் சமூ­கத்தின் சம்­பி­ர­தா­யத்தை சவா­லுக்­குட்­ப­டுத்­திய அர­சாங்கம் பல வரு­டங்­க­ளுக்குப் பிறகு திடீ­ரென மன்­னிப்பு கோரு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றமை சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­தாகும் என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கபீர் ஹாஷிம் தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் சமூ­கத்­துக்கு நடக்க வேண்­டிய துன்­பங்கள், துய­ரங்கள் நடந்து முடிந்து விட்­டது. நடத்­தப்­பட்டு விட்­டது. மன்­னிப்பு கோரு­வதில் சந்­தேகம் நில­வு­கி­றது. உண்­மை­யான மன்­னிப்பு கோர­லாக இது அமை­யாது என்ற கருத்து எம்­மி­டையே நில­வு­கி­றது என்றும் கூறினார்.

விதுர விக்­கி­ர­ம­நா­யக்­கவின் கருத்து
பல வரு­டங்­க­ளுக்கு முன்பு இழைக்­கப்­பட்ட குற்­றத்­துக்கு மன்­னிப்பு கோரு­வதால் அதனால் ஏற்­பட்ட பாதிப்­பு­களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய இவ்விவகாரம் தொடர்பிலான பதிலிலே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இப்போது இதற்காக செய்ய வேண்டிய ஒரே சிறந்த ஏற்பாடு இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் இடம்பெறாமலிருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகும்.

மன்னிப்பு கோருவதால் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள் இல்லாமற் போகும் என நினைக்க முடியாது. சிலவேளை மன்னிப்பு கோருவதன் மூலம் அரசாங்கம் மேலும் அதிருப்திக்கு உள்ளாகும் நிலைமை ஏற்­ப­டலாம். ஏனென்றால் எதிர்க்கட்சியினர் இந்நிலைமையை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போதுள்ள ஒரே வழி முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் இன்னல்களுக்கு உள்ளாகாத வகையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகும். அவ்வாறு செய்தால் அரசாங்கத்தின் மீது முஸ்லிம் சமூகத்துக்கு நம்பிக்கை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.