• கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் சுமார் 4 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன் தனது கண்களை மெல்லத் திறந்து பார்க்கிறான். மீட்புப் பணியாளர்கள் அவனுக்கு தண்ணீர் போத்தல் மூடியில் நிரப்பி சொட்டுச் சொட்டாக நீரைப் பருக்குகிறார்கள். “மகனே கண்ணைத் திறந்து பாருங்கள்…. எங்களைத் தெரிகிறதா?” என்ற கேள்விகளுக்கு அவன் ‘ஆம்’ என பதிலளிக்கிறான்….
நுவரெலியாவில் ஏழு உயிர்களைக் காவுகொண்ட கோர விபத்து இடம்பெற்று இரு வாரங்களாகியும் அந்தச் சோகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் மாறாது தொடர்ந்தும் குடி கொண்டிருக்கிறது. குடும்பத்தவர்கள் ஆறாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். அவர்களை ஆற்றுப்படுத்த முடியாதிருக்கிறது.