சூடு பிடிக்கப்போகும் தேர்தல்

0 44

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்டில் தேர்தல் களை கட்­டப்­போ­வது தெரி­கி­றது. நாட்டு மக்­களும், அர­சில்­வா­தி­களும் தேர்தல் பற்­றி பேச ஆரம்­பித்­துள்­ள­னர். இந்­நாட்டு அர­சி­யலில் இவ்­வ­ருடம் தீர்­மா­ன­மிக்­க­தாகும்.

அர­சி­ய­ல­மைப்­பின்­படி இவ்­வ­ருடம் தேசிய தேர்­த­லொன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது. ஜனா­தி­பதி தேர்­தலே முதலில் நடாத்­தப்­படும் என ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­யாகக் கூறி­யி­ருக்­கிறார். இவ்­வ­ருடம் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­பட்டால் 2025இல் பொதுத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்­பின்­படி ஒவ்­வொரு ஐந்து வரு­டத்­துக்கு ஒரு­முறை தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென்­பது நாட்டு மக்­களின் ஐன­நா­யக உரி­மையை உறுதி செய்­வ­தாக அமை­கி­றது. இதன்­மூ­லமே நாட்டு மக்­களின் கருத்­தினை விருப்­பத்தை வெளி­யிட முடி­கி­றது.

தேர்­தலை பிற்­போ­டு­வது ஒரு ஜன­நா­யக நாட்டில் எவ்­வ­கை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தேர்தல் கால எல்­லையை நீடிப்­பதும் ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரா­ன­தாகும். தேர்தல் நடாத்­தப்­ப­டு­வ­தற்­கான கால எல்லை 4 வரு­டங்கள், 5 வரு­டங்கள் அல்­லது ஆறு வரு­ட­ங்­க­ளாகும். 1978 ஆம் ஆண்டின் அர­சி­ய­ல­மைப்­பிலும் அதற்கு பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட 19, 20, 21 ஆம் திருத்­தங்­க­ளிலும் தேர்தல் நடாத்­தப்­பட வேண்­டிய கால­வ­ரை­யறை தொடர்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ பத­வி­யேற்ற திக­தி­யி­லி­ருந்து ஐந்து வருட காலம் 2024இல் பூர்த்­தி­யா­கின்­ற­மை­யினால் இவ்­வ­ருடம் ஜனா­தி­பதி தேர்தல் நடாத்­தப்­பட வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி பதவிப் பிர­மாணம் செய்து கொண்டார். ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகிப்­ப­வரின் பத­விக்­காலம் நிறை­வு­று­வ­தற்கு ஒரு மாத காலத்­துக்கு குறை­யா­மலும் இரண்டு மாத காலத்­துக்கு மேற்­ப­டா­த­து­மான கால எல்­லைக்குள் ஜனா­தி­பதி தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென்று அர­சி­ய­ல­மைப்பின் 31 ஆவது பிரிவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே அர­சி­ய­ல­மைப்பின் படி ஜனா­தி­பதி தேர்தல் செப்­டெம்பர் இறு­தியில் அல்­லது நவம்­பரில் நடத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது.

என்­றாலும் இவ்­வ­ருடம் ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­ப­டுமா என்ற சந்­தேகம் மக்கள் மத்­தியில் வலு­வ­டைந்து வரு­கி­றது. தேர்தல் விவ­கா­ரங்­களில் நாட்டு மக்கள் ஜனா­தி­ப­தியின் உறு­தி­மொ­ழி­யினை சந்­தே­கத்­து­டனே நோக்­கு­கி­றார்கள். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் விவ­கா­ரத்தில் ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கை­களே இதற்குக் கார­ண­மாகும். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் உரிய காலத்தில் நடத்­தப்­படும் என ஆரம்­பத்தில் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்த ஜனா­தி­பதி பின்னர் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லையே நடத்­த­வில்லை.

சில அர­சியல் கட்­சி­களைச் சேர்ந்­த­வர்­களின் கருத்­துகள் தேர்தல் தொடர்பில் மக்கள் மத்­தியில் சந்­தே­கத்தை வலுப்­ப­டுத்­தி­யுள்­ளது. இது ஜனா­தி­பதி தேர்­தலை நடாத்­து­வ­தற்கு உகந்த கால­மல்ல. தேர்­த­லுக்கு பாரிய நிதி­யினை செல­விட வேண்­டி­யுள்­ளது. அந்­நி­தி­யினை மக்­களின் நிவா­ர­ணங்­க­ளுக்கு செல­விட முடியும். அதனால் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­தாமல் ஜனா­தி­ப­தியை தொடர்ந்தும் பத­வியில் வைத்துக் கொள்­வதே நல்­லது என அமைச்சர் ஒருவர் கருத்து தெரி­வித்­துள்ளார். ஆனால் ஜனா­தி­பதி தேர்­தலை பிற்­போ­டு­வ­தாக ஜனா­தி­பதி இது­வரை கருத்து வெளி­யி­ட­வில்லை. அவ்­வா­றான அதி­காரம் அவ­ருக்கு அர­சி­ய­ல­மைப்பில் வழங்­கப்­பட்டும் இல்லை. அவ்­வாறு பிற்­போ­டு­வ­தென்றால் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இல்­லையேல் மக்கள் கருத்துக் கணிப்பு மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.

இதே­வேளை முதலில் ஜனா­தி­பதி தேர்­தலா? இன்றேல் பொதுத் தேர்­தலா? என்ற சர்ச்­சையும் மேலெ­ழுந்­துள்­ளது. குறிப்­பாக பொது­ஜன பெர­முன கட்சி முதலில் பொதுத்­தேர்­த­லையே வலி­யு­றுத்தி வரு­கி­றது. பொது­ஜன பெர­முன கட்­சியின் முன்னாள் அமைச்­சரும், முன்னாள் தேசிய அமைப்­பா­ள­ரு­மான பஷில் ராஜ­பக்ஷ பொதுத் தேர்­தலே முதலில் என மிகக் கடு­மை­யாக வலி­யு­றுத்தி வரு­கிறார்.

பாரா­ளு­மன்றத் தேர்­தலும் நடத்­தப்­பட வேண்டும். இதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை. 5 வருட கால நிறைவின் பின்பு பாரா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். அர­சி­ய­ல­மைப்பும் இத­னையே தெரி­விக்­கி­றது. பாரா­ளு­மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்­கு­ழு­வுக்கு ஜனா­தி­பதி அறி­விக்­கலாம். அதற்கு அவ­ருக்கு அதி­காரம் உள்­ளது. இத­னா­லேயே பாரா­ளு­மன்­றத்தில் உள்ள சிலரும், வெளியில் சில அர­சி­யல்­வா­தி­களும் முதலில் பொதுத்­தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென கோரி நிற்­கி­றார்கள்.

பொதுத்­தேர்தல் மூலமே உண்­மை­யான மக்கள் ஆணை வெளிப்­ப­டுத்­தப்­படும் என்று அவர்கள் விவா­திக்­கி­றார்கள். என்­றாலும் ஜனா­தி­பதி தேர்தல் மூலமும் மக்­களின் அர­சியல் நிலைப்­பாடு வெளிப்­ப­டுத்­தப்­படும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை. அர­சி­ய­ல­மைப்­பின்­படி ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­பட வேண்­டி­யுள்ள நிலை­யில் ஏன் பொதுத்­தேர்­தலை நடத்த வேண்டும்? என்­பதை சம்­பந்­தப்­பட்ட தரப்­புகள் சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.

இதே­வேளை புதி­தாக நிய­மனம் பெற்­றுள்ள பொது­ஜன பெர­மு­னவின் தேசிய அமைப்­பா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்பு பொதுத்­தேர்தல் நடத்­தப்­பட வேண்­டு­மென பொது­ஜன பெர­முன உறு­தி­யாக இருப்­ப­தாகத் தெரி­வித்­துள்ளார்.

நாட்டின் அர­சியல் ஸ்திரத்­தன்மை உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மாயின் முதலில் பொதுத்­தேர்­தலே நடத்­தப்­பட வேண்டும். பொது­ஜன பெர­மு­னவின் மக்­க­ளா­ணையில் இருந்­து­கொண்டு கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு எதி­ராக ஜனா­தி­ப­தி­யினால் செயற்­பட முடி­யாது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். இவ்­வி­டத்தில் ஜனா­தி­ப­திக்கும், பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் முறுகல் நிலை தோன்­றி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் பொதுத் தேர்­தலை நடத்­து­மாறு பொது­ஜன பொர­மு­னவின் ஸ்தாபகர் பஷில் ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யிடம் யோசனை முன்­வைத்­துள்ளார். ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பின்னர் பொதுத்­தேர்தல் இடம் பெற்றால் அர­சியல் ஸ்திரத்­தன்­மையில் முரண்­பா­டான தன்­மையே தோற்றம் பெறும். கடந்த காலங்­களில் இவ்­வா­றான நிலை­மையே காணப்­பட்­டது.

முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் மக்­க­ளா­ணைக்கு அமை­யவே தற்­போ­தைய ஜனா­தி­பதி பதவி வகிக்­கிறார். அதனால் எமது கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு முர­ணாக அவரால் செயற்­பட முடி­யாது என்றும் தெரி­வித்­துள்ளார்.

பொது­ஜன பெர­முன கட்­சியே முதலில் பொதுத்­தேர்­தலை வலி­யு­றுத்­து­கி­றது. இது அர­சியல் சுய­நலம் கரு­திய கோரிக்­கை­யா­கவே நோக்­கப்­ப­டு­கி­றது. ஜனா­தி­பதி தேர்­த­லுக்­காக பெரும்­பா­லான அர­சியல் கட்­சிகள் தயார் நிலையில் உள்­ளன. தங்­க­ளது ஜனா­தி­பதி அபேட்­சகர் விட­யத்­திலும் உறு­தி­யாக இருக்­கின்­றன. அபேட்­ச­கர்­களை தெரிவு செய்து கொண்­டுள்­ளன. ஆனால் ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பதி­லாக பொதுத்­தேர்­தலைக் கோரி நிற்கும் கட்­சிகள் தமது ஜனா­தி­பதி அபேட்­சகர் தொடர்பில் இது­வரை தீர்­மானம் மேற்­கொள்­ள­வில்லை.

பொது­ஜன பெர­மு­னவில் ஜனா­தி­பதி அபேட்­ச­க­ராக அர­சி­ய­ல­மைப்­பின்­படி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் கள­மி­றங்க முடி­யாது. நாமல் ராஜ­பக்ஷ அர­சியல் அனு­ப­வத்தில் குறைந்­தவர் என்­பதால் அவர் கள­மி­றக்­கப்­ப­ட­மாட்டார். பஷில் ராஜ­பக்ஷ கள­மி­றங்­கு­வ­தென்றால் அர­சி­ய­ல­மைப்பின் படி அவர் தேவை­யான தகை­மை­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். அத்­தோடு பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி அபேட்­ச­க­ராக ராஜ­பக்ஷ குடும்­பத்தைச் சேர்ந்த ஒரு­வரைத் தவிர வேறொ­ருவர் கள­மி­றக்­கப்­பட மாட்டார் என்­பது தெளி­வாகும். இத­னாலே பொதுத்­தேர்தல் ஒன்று நடத்­தப்­பட்டால் பொது­ஜன பெர­முன தனது வாக்கு வங்­கியை அதி­க­ரித்­துக்­கொள்ள முடியும் எனக் கரு­தியே பஷில் ராஜ­பக்ஷ முத­லில்­பொதுத் தேர்தல் என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருப்­ப­தாகத் தெரி­கி­றது.

நாட்டு மக்கள் தற்­போது அர­சியல் மாற்­ற­மொன்­றி­னையே எதிர்­பார்க்­கி­றார்கள். நாட்டில் நிலவும் பொரு­ளா­தார நிலை சீராக வேண்டும். வறுமை நிலை­யி­லி­ருந்து மீள வேண்டும் என்றே மக்கள் விரும்­பு­கி­றார்கள். பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு வழங்­கக்­கூ­டிய ஒரு­வரின் பின்னே அவர்கள் கைகோர்க்­க­வுள்­ளார்கள். ஜனா­தி­பதி முதலில் பொதுத்­தேர்தல் நடத்­தப்­ப­ட­மாட்­டாது என்றே கூறி­யி­ருக்­கிறார். இதே­வேளை தனது திட்­டங்­களை எவ்­வித தாம­தமும் இன்றி முன்­னெ­டுத்து வரு­கிறார். மக்­களும் பொதுத் தேர்­தலை வலி­யு­றுத்த வில்லை. அதனால் ஜனா­தி­பதித் தேர்­தலே முதலில் இடம்­பெறும் என எண்ணத் தோன்­று­கி­றது.

தேர்­தல்கள் ஆணை­யாளர்
‘ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்று அர­சியல் களத்தில் பேசப்­படும் விட­யங்கள் குறித்து விஷேட கவனம் செலுத்­தி­யுள்ளோம். பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத் தேர்­தலை நடத்தும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு உண்டு. ஜனா­தி­பதி தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­பா­ராயின் பொதுத்­தேர்தல் வாக்­கெ­டுப்­புக்­கான திக­தி­யையும் அவர் அறி­விக்க வேண்டும் என தேர்­தல்கள் ஆணை­யாளர் சமன் ஸ்ரீ ரத்­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் ‘ஜனா­தி­பதி தேர்தல் வாக்­கெ­டுப்பை நடத்தும் திக­தியை இது­வரை தீர்­மா­னிக்­க­வில்லை. எதிர்­வரும் ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் தேர்தல் குறித்து உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­விப்பை வெளி­யி­டுவோம்’ என்றும் அவர் கூறினார்.

ஜனா­தி­பதித் தேர்தல் எதிர்­வரும் அக்­டோபர் மாதம் 17ஆம் திகதி நடத்­தப்­படும் என்று அர­சியல் களத்தில் குறிப்­பி­டப்­படும் விடயம் தொடர்பில் கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

பொதுத் தேர்தல் குறித்து தீர்­மானம் எடுக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே அவர் எடுக்கும் தீர்­மா­னங்­க­ளுக்கு நாங்கள் ஒத்­து­ழைப்பு வழங்­குவோம். அர­சி­ய­லமைப்பின் பிர­காரம் எதிர்­வரும் செப்­டெம்பர் 17 அல்­லது அக்­டோபர் 17 ஆம் திகதி ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­படும். தேர்­த­லுக்­கான வாக்­கெ­டுப்பு திக­தியை ஆணைக்­குழு இது­வரை தீர்­மா­னிக்­க­வில்லை. அனைத்து கார­ணி­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு திகதி தீர்­மா­னிக்­கப்­படும் என்றும் தேர்­தல்கள் ஆணை­யாளர் சமன் ஸ்ரீ ரத்­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­ப­தியின் அறி­விப்பு
முதலில் ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கு­மாறு ஜனா­தி­பதி தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்கள் வழங்­கி­யுள்ளார். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்பு பொதுத் தேர்தல் இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்பதையும் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை அழைத்து கடந்தவாரம் தேர்தல்கள் குறித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரகாரம் உரிய நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி இவ்விவகாரத்தை கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் தெளிவுபடுத்தியுள்ளார். நாட்டை பொருளாதார ரீதியில் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான தேசிய பொருளாதார மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் தற்போது சிறந்த முறையில் நகர்த்தப்படுகின்றன. ஆகவே இவற்றுக்கே முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டும். இப்பணிகள் எதிர்வரும் ஜூலை மாதம் இறுதிவரை தொடரும் . அதனால் இதற்கு முன்னர் நாட்டில் தேர்தலொன்றுக்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டிய கால கட்டம் சர்வதேச நாணய நிதியத்துடனான பணிகளுக்கு இடையூறாக அமையாது. அதனால் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடாத்தப்பட வேண்டும் என உறுதியான தனது நிலைப்பாட்டினை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

மே தின பேர­ணி­களைத் தொடர்ந்து அர­சியல் களம் சூடு­பி­டிக்கும் என எதிர்­பார்க்­கலாம். இம்­முறை தேர்­த­லுக்­காக என்­ன­வி­த­மான தகி­டு­தத்­தங்­களை அரங்­கேற்றப் போகி­றார்­களோ தெரி­ய­வி­ல்லை. பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.