நாட்டில் புதிதாக பள்ளிவாசல்கள் உட்பட ஏனைய மதஸ்தலங்கள் நிறுவப்படுவதற்கு புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு புதிய சில விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.
நாட்டில் ஜனாதிபதி பதவியிலிருந்த கோத்தாபய ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமூகம் மாத்திரமல்ல தமிழ் சமூகமும் பல்வேறு நெருக்குவாரங்களுக்குள்ளாகின. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஒடுக்கும் செயற்திட்டங்களிலேயே அவர் கவனம் செலுத்தினார். அவரது ஆட்சிக்காலத்தில் எமது சமூகம் பீதியுடனே காலத்தை கடத்தியது.
இவ்வருடத்துக்கான ஹஜ் முகவர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தின் ஹஜ் வழிகாட்டல்கள் அரச ஹஜ் குழுவினாலும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினாலும் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உயர் நீதிமன்றில் வழக்கொன்று எதிர்வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.