புத்தளம் குப்பை விவகாரம்; மக்கள் மீது பொலிஸார் தடியடிப் பிரயோகம்
கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி,கடந்த வெள்ளிக்கிழமை (22) புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுத்த பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
"நாட்டுக்காக ஒன்றிணைவோம்" புத்தளம் மாவட்டத்துக்கான செயற்றிட்டத்தின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை புத்தளம் சேர்விஸ் வீதியிலுள்ள சக்தி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, குறித்த…