மன்னார் மனித புதை­குழி: 3 மாதங்­க­ளுக்கு அகழ்வு பணிகள் இடை­நி­றுத்தம்

மன்னார் நீதிவான் தலை­மையில் நடந்த கூட்­டத்தில் தீர்­மானம்

0 529

மன்னார் மனித புதை­கு­ழியின் மேல­திக அகழ்வுப் பணிகள் அனைத்தும்  அடுத்­து­வரும் மூன்று மாதங்­க­ளுக்கு இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளன. நேற்று முன்­தினம் இரவு  மன்னார் நீதி­வானின் தலை­மையில் நடை­பெற்ற இப்­பு­தை­குழி தொடர்­பி­லான கூட்­டத்தில் எட்­டப்­பட்ட இணக்­கப்­பாட்­டுக்­க­மைய இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி இந்த மூன்று மாதத்­துக்குள் தொல்­பொருள் பேரா­சி­ரியர் ராஜ் சோம­தேவ தலை­மை­யி­லான குழு­வி­னரின் தொல்­பொருள் அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

மனித புதை­கு­ழியை மேலும் அகழ்­வ­தா­வெனத் தீர்­மா­ன­மெ­டுக்க இடம்­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில், அகழ்வுப் பணி­க­ளுக்குப் பொறுப்­பா­க­வி­ருக்கும் சட்­ட­வைத்­திய நிபுணர் சமிந்த ராஜபக் ஷவும் அவ­ரது குழு­வி­னரும் கலந்­து­கொண்­ட­துடன் அவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக இப்­பு­தை­குழி தொடர்­பி­லான அகழ்­வு­களில் பங்­கேற்­றுள்ள தொல்­பொருள் பேராசி­ரியர் ராஜ்  சோம­தே­வவின் குழு­வி­னரும் பங்­கேற்­றனர்.

இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், காணா­ம­லாக்­கப்பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் சிலர், பொலிஸார், பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் என சம்­பந்­தப்பட்ட தரப்­பினர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது இது­வரை இடம்­பெற்ற அகழ்­வு­களை மையப்­ப­டுத்தி தொல்­பொருள் அறிக்­கையை மூன்று மாதங்­க­ளுக்குள் முன்­வைக்க பேரா­சி­ரியர்  ராஜ் சோம­தேவ குழு­வினர் இணக்கம் தெரி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து அவ்­வ­றிக்கை கிடைத்­ததும் மீளக் கலந்­து­ரை­யாடி புதை­கு­ழியை தொடர்ந்து அகழ்­வதா இல்­லையா என முடி­வெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்­நி­லையில் இப்­பு­தை­குழி தொடர்­பி­லான மேலும் பல விசேட நிபு­ணர்­களின் அறிக்­கை­களும் கிடைக்­க­வுள்­ளதால் அவை கிடைக்­கும்­வரை புதை­கு­ழி­யுள்ள பிர­தே­சத்தின் பாது­காப்பை பலப்­ப­டுத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் தற்­போதும் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள மீட்­கப்­ப­டாத எலும்­புக்­கூ­டுகள் அவ்­வாறே கைவி­டப்­பட்டால் அவை பழு­த­டை­யலாம் எனும் சந்­தே­கத்தில் அவற்றை மண்­கொன்டு மீள மூடவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக மன்னார் மனிதப் புதை­கு­ழியில் மீட்­கப்­பட்ட மனித எலும்­புக்­கூட்டு மாதி­ரிகள் கி.பி.1400 முதல் கி.பி. 1650 ஆம் ஆண்டு காலப்­ப­கு­திக்கு உரி­யவை என தெரி­ய­வந்­தி­ருந்­தது.

அமெ­ரிக்­காவின் ப்ளோரி­டாவைத் தள­மாகக் கொண்ட பீட்டா அன­லெடிக் நிறு­வனம் மேற்­கொண்ட கார்பன் பரி­சோ­தனை அறிக்­கையின் மூலம்  இந்த விடயம் தெரி­ய­வந்­தது.

கடந்த 2018 மார்ச் மாதம் ஏ–14 வீதி­யான  மத­வாச்சி – தலை­மன்னார் பிர­தான வீதி­ய­ருகே அமைந்­துள்ள மன்னார் ச.தொ.ச. காட்­சி­ய­றையை விருத்­தி­செய்ய அபி­வி­ருத்திப் பணிகள் ஆரம்­பிக்­கப்பட்­டி­ருந்­தன. இதன்­போது அந்த நிறு­வ­னத்­துக்கு அரு­கி­லுள்ள பகுதி பெக்கோ இயந்­திரம் கொண்டு தோண்­டப்­பட்­டது.

இந்­ந­ட­வ­டிக்­கை­களின் போது அங்கு தோண்­டப்­பட்ட மண், தனி நபர்­க­ளுக்கு விற்­கப்­பட்­டன. அவ்­வாறு தோண்­டப்­பட்ட மண்ணை எடுத்துச் சென்ற மன்னார்  எமில் நகர் வர்த்­தகர் ஒருவர் அதில்  எலும்புக் கூடொன்று இருப்­பதை அவ­தா­னித்து மன்னார் பொலிஸ் நிலை­யத்தில் முறை­யிட்­டி­ருந்தார்.

கடந்த 2018 மார்ச் 26 ஆம் திகதி இந்த முறைப்­பாடு பொலி­சா­ருக்கு கொடுக்­கப்­பட்ட நிலையில், நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் மன்னார் சட்­ட­வைத்­திய அதி­காரி சமிந்த ராஜபக் ஷ ஸ்தலத்தை பார்­வை­யிட்டு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கினார்.

இந்­நி­லையில் நீதி­மன்றில் பெற்­றுக்­கொள்­ளப்பட்ட அனு­ம­திக்­க­மைய சட்ட வைத்­திய நிபுணர் சமிந்த ராஜபக் ஷவின் கீழ்  கடந்த 2018 மே 28 ஆம் திகதி முதல் அந்தப் பகு­தியில் விஷேட அகழ்வுப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. 2019 மார்ச் 7 ஆம் திக­தி­வ­ரையில் 155 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்­பெற்­றி­ருந்த நிலையில் அதன்­போது 325 மனித எலும்புக் கூடுகள் கண்­டு­பி­டிக்­கப்பட்­டுள்­ளன. அதில் 318 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 29 எலும்புக் கூடுகள் சிறுவர்களினுடையதாக இருக்குமென சந்தேகிக்கப்படுகின்றது. கடந்த  மார்ச் 8 ஆம் திகதி முதல் அங்கு அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க நீதிமன்றம் தடை விதித்தது. அதன்படியே நேற்று முன்தினம்  அது தொடர்பில் தீர்மானிக்க  கூட்டம் இடம்பெற்றது. அதிலேயே மூன்று மாதங்களுக்கு அகழ்வுப் பனிகளை நிறுத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.