மார்ச் மாதம் 15 ஆம் திகதியை இஸ்லாமிய பீதிக்கு எதிரான ஒற்றுமை தினமாக பிரகடனப்படுத்துக

இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பு ஐ.நா. விடம் வேண்டுகோள்

0 520

நியூ­சி­லாந்தில் பயங்­க­ர­வாதத் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட மார்ச் மாதம் 15 ஆம் திக­தியை இஸ்­லா­மிய பீதிக்கு எதி­ரான ஒற்­றுமை தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டு­மென ஐக்­கிய நாடுகள் சபை, ஏனைய சர்­வ­தேச மற்றும் பிராந்­திய அமைப்­புக்­களை இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­பிற்­கான அமைப்பு கோரு­வ­தென்ற தீர்­மானம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி இஸ்­தான்­பூலில் நடை­பெற்ற இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­பிற்­கான அமைப்பின் அவ­சர கூட்­டத்தில் வாசிக்­கப்­பட்ட இணைந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியூ­சி­லாந்தின் கிரைஸ்­சேர்ச்சில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட கொடூரத் தாக்­குதல் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­பிற்­கான அமைப்பின் நிறை­வேற்­றுக்­குழு அவ­சர கூட்­ட­மொன்றை நடத்­தி­யது. வெள்­ளிக்­கி­ழமை தொழு­கை­யின்­போது பயங்­க­ர­வா­தி­யொ­ரு­வனால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலில் 51 பேர் கொல்­லப்­பட்­டனர்.

இஸ்லாம் தொடர்­பான பீதி­யினை இன­வா­தத்தின் ஒரு வடி­வ­மெனப்  பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் பொதுச்­ச­பையின் விசேட கூட்­ட­மொன்றை கூட்ட வேண்டும் எனவும் இஸ்லாம் தொடர்­பான பீதி­யினைத் தடுப்­ப­தற்கும் கண்­கா­ணிப்­ப­தற்­கு­மாக விசேட அறிக்­கை­யாளர் ஒரு­வரை நிய­மிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்ள இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­பிற்­கான அமைப்பு, உலகில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராகத் துரித நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென ஐக்­கிய நாடுகள் சபையின் பொதுச் செய­லா­ளரைக் கேட்­டுள்­ளது.

சமூக வலைத்­த­ளங்கள் தொடர்­பிலும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் எனவும் அவ்­வ­றிக்­கையில் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான எதிர்ப்­பு­ணர்வு மற்றும் வன்­மு­றை­களைத் தூண்­டக்­கூ­டிய ஏதேனும் உள்­ள­டக்­கங்­களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்­ட­கிராம் போன்ற சமூக வலைத்­த­ளங்­களின் முகா­மைத்­து­வங்­க­ளுடன் இணைந்து கட்டுப்படுத்தித் தடுக்க நிறுவன ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.