புத்­தளம் குப்பை விவ­காரம்; மக்கள் மீது பொலிஸார் தடி­யடிப் பிர­யோகம்

0 1,034

கொழும்பு குப்­பை­களை புத்­த­ளத்தில் கொட்டும் விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்கு வாய்ப்­ப­ளிக்­கு­மாறு கோரி,கடந்த வெள்­ளிக்­கி­ழமை (22) புத்­த­ளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்­னெ­டுத்த பொது­மக்கள் மீது பொலிஸார் தடி­யடிப் பிர­யோகம் மேற்­கொண்­டனர்.

“நாட்­டுக்­காக ஒன்­றி­ணைவோம்” புத்­தளம் மாவட்­டத்­துக்­கான செயற்­றிட்­டத்தின் நிறைவு விழா வெள்­ளிக்­கி­ழமை புத்­தளம் சேர்விஸ் வீதி­யி­லுள்ள சக்தி விளை­யாட்டு மைதா­னத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இடம்­பெற்­றது.

இதன்­போது, குறித்த கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்ட பொது­மக்கள், ஜனா­தி­பதி கலந்­து­கொண்ட சக்தி விளை­யாட்டு மைதா­னத்­திற்கு முன்­பாக செல்ல முற்­பட்­ட­போதே ஆண்கள், பெண்கள் மீது பொலிஸார் தடி­யடிப் பிர­யோகம் மேற்­கொண்­டனர்.

“நாட்­டுக்­காக ஒன்­றி­ணைவோம்” புத்­தளம் மாவட்­டத்­துக்­கான செயற்­திட்­டதின் நிறைவு விழா மற்றும் புத்­த­ளத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள விளை­யாட்டு மைதானம் மற்றும் கேட்போர் கூடம் என்­ப­வற்றை திறந்து வைக்கும் நிகழ்­வு­களில் கலந்து கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, வெள்­ளிக்­கி­ழமை புத்­தளம் நக­ருக்கு விஜயம் செய்தார்.

கொழும்பு குப்­பை­களை புத்­த­ளத்தில் கொட்டும் அர­சாங்­கத்தின் திட்­டத்தை உட­ன­டி­யாக கைவிட வேண்­டு­மெனக் கோரி புத்­த­ளத்தில் நீண்ட கால­மாக மக்கள் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இந்த விட­யத்தில் ஜனா­தி­ப­தியை நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு சர்­வ­ம­த­குழு மற்றும் ‘க்ளீன் புத்­தளம்’ அமைப்­பி­ன­ருக்கு சந்­தர்ப்பம் பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு தொடர்ச்­சி­யாக வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனினும், அந்தக் கோரிக்கை இது­வரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்­பதை கண்­டித்தும், புத்­த­ளத்­திற்கு விஜயம் செய்யும் ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்கு சர்­வ­மத குழு உள்­ளிட்­டோ­ருக்கு சந்­தர்ப்­பத்தை பெற்றுக் கொடுக்­கு­மாறும் கோரியே இந்த கறுப்புக் கொடி கவ­ன­யீர்ப்பு போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இந்தக் கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் மக்கள் பிர­தி­நி­திகள் மற்றும் ஆண்கள், பெண்கள்,  இளை­ஞர்கள் என பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் கலந்­து­கொண்­டனர்.

புத்­தளம் தபால் நிலை­யத்­தி­லி­ருந்து பேர­ணி­யாக சென்று, புத்­தளம் பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில், காலை 8.30 மணிக்கு ஒன்­று­கூ­டிய மக்கள், குப்­பைக்கு எதி­ரான பல வாச­கங்கள் எழு­தப்­பட்ட சுலோ­கங்­க­ளையும் ஏந்­தி­ய­வாறு, குப்­பைக்கு எதி­ரான கோஷங்­களை எழுப்­பி­ய­வாறு கவ­ன­யீர்ப்பில் ஈடு­பட்­டனர்.

இதன்­போது, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்­திட்­டத்தை புத்­தளம் பிர­தேச செய­ல­கத்தில் ஆரம்­பித்து வைப்­ப­தற்­காக ஜனா­தி­பதி வருகை தர­வி­ருந்த பிர­தேச செய­ல­கத்தை நோக்கி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் செல்ல முற்­பட்ட போது, அதனை பொலிஸார் தடுத்து நிறுத்­தினர்.

இதனால் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கும், பொலி­ஸா­ருக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­ட­துடன், அங்கு பதற்­ற­நிலை காணப்­பட்­டது. விஷேட அதி­ர­டிப்­படை, கலகம் தடுக்கும் பொலி­ஸாரும், நீர்த் தாரை பீச்சும் கவச வாக­னமும் தயார் நிலையில் இருந்­தன.  அத்­துடன், ஜனா­தி­பதி கலந்­து­கொள்­ள­வி­ருந்த  அனைத்துப் பிர­தே­சங்­க­ளிலும் பலத்த பாது­காப்பு போடப்­பட்­டி­ருந்­தது.

புத்­தளம் பொலிஸார், இந்தப் போராட்­டக்­கா­ரர்­களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­காக, புத்­தளம் நீதி­மன்­றத்­தினால் பெற்­றுக்­கொண்ட தடை­யுத்­த­ரவை பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளிடம் வாசித்துக் காட்­டினர். எனினும், குறித்த போராட்டம் அமை­தி­யான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இதே­வேளை, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் புத்­தளம் பிர­தேச செய­ல­கத்­திற்கு செல்­வதை பொலிஸார் தடுத்து நிறுத்­திய போது, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் அங்­கி­ருந்து கலைந்­து­சென்று புத்­தளம் பஸ் நிலை­யத்­திற்கு முன்­பாக திறந்து வைக்­கப்­ப­ட­வி­ருந்த விளை­யாட்டு மைதானம் வரை நடந்து சென்­றனர்.

புத்­தளம் நகர விளை­யாட்டு மைதா­னத்­திற்கு அருகில் ஒன்று கூடிய ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் அங்கும் குப்­பைக்கு எதி­ரான சுலோ­கங்­களை ஏந்­தி­ய­வாறு, கோஷங்­க­ளையும் எழுப்பிக் கொண்டு கவ­ன­யீர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர்.

இதன்­போது அங்கும் அமை­தி­யின்மை ஏற்­பட்­டது. இதனால், குறித்த விளை­யாட்டு மைதா­னத்தை திறந்து வைப்­ப­தற்­காக ஜனா­தி­பதி கலந்­து­கொள்ளவிருந்த போதிலும் அங்கு ஏற்­பட்ட அமை­தி­யின்­மையால், புத்­தளம் நகரில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட கேட்போர் கூடத்தை திறந்து வைத்த ஜனா­தி­பதி, பிர­தான நிகழ்வு இடம்­பெற்ற சக்தி விளை­யாட்டு மைதா­னத்­திற்கு சென்றார்.

விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் ஹரின் பெர்­னாண்டோ, புத்­தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் உள்­ளிட்டோர் குறித்த விளை­யாட்டு மைதா­னத்தை திறந்­து­வைத்­தனர்.

இதன்­போது,  குப்பை பிரச்­சினை தொடர்பில் சமயத் தலை­வர்கள் உள்­ளிட்ட ஐந்து பேர் அடங்­கிய குழு­வொன்­றுக்கு சக்தி விளை­யாட்டு மைதா­னத்தில் வைத்து ஐந்து நிமி­டங்கள் ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்­காக அனு­மதி பெற்றுத் தரு­வ­தாக ஜனா­தி­பதி செய­லக அதி­கா­ரி­யொ­ருவர் வாக்­கு­று­தி­ய­ளித்து, அந்த ஐவ­ரையும் சக்தி விளை­யாட்டு மைதா­னத்­திற்கு அழைத்துச் சென்ற போதிலும் இறுதி நேரத்தில் அந்த சந்­திப்பு இடம்­பெ­ற­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, ‘நாட்­டுக்­காக ஒன்­றி­ணைவோம்’  புத்­தளம் மாவட்­டத்­துக்­கான செயற்­றிட்­டதின் பிர­தான நிகழ்வு புத்­தளம் சக்தி விளை­யாட்டு மைதா­னத்தில் இடம்­பெற்­றது.

குறித்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்­து­கொண்­டுள்ளார் என்­பதை அறிந்­து­கொண்ட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள், கறுப்புக் கொடி­களை ஏந்­திக்­கொண்டு புத்­தளம் பஸ் நிலை­யத்­தி­லி­ருந்து சக்தி விளை­யாட்டு மைதா­னத்­திற்கு முன்­பாக செல்ல முற்­பட்­டனர்.

சக்தி விளை­யாட்டு மைதா­னத்தைச் சுற்றி பலத்த பொலிஸ், விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் பாது­காப்­புக்­காக நிறுத்­தப்­பட்­டி­ருந்­த­துடன், அந்த மைதா­னத்­திற்கு செல்லும் சேர்விஸ் வீதி­யிலும் பெரு­ம­ளவு பொலிஸார் குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இதன்­போது, சக்தி விளை­யாட்டு மைதா­னத்­திற்கு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் செல்ல முற்­பட்ட போது, அவர்­களை அங்கு செல்ல விடாது, பொலி­ஸாரும், கலகம் தடுக்கும் பொலி­ஸாரும் தடுத்து நிறுத்­தினர். இதன்­போது, அங்கும் அமை­தி­யின்மை ஏற்­பட்­டது.

ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட ஆண்கள், பெண்கள் மீது பொலிஸார் தடி­யடி பிர­யோகம் மேற்­கொண்­டனர். இந்த தடி­யடிப் பிர­யோ­கத்­தினால் ஆண்கள், பெண்கள் காய­ம­டைந்­துள்­ளனர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, நீதி­மன்­றத்தின் உத்­த­ரவை மீறி போராட்­டத்தில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டின் கீழ் வெள்­ளிக்­கி­ழமை (22) இரண்டு இளை­ஞர்­களும் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட இரு­வரும், சனிக்­கி­ழமை (23) புத்­தளம் மாவட்ட நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது, அவ்­வி­ரு­வரும் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

அத்­துடன், குறித்த போராட்­டத்­துடன் தொடர்­பு­டைய மேலும் சில­ரையும் கைது செய்­வ­தற்கும் புத்­தளம் பொலிஸார் நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்­டுள்­ளனர்.

இதன் அடிப்­ப­டையில், சனிக்­கி­ழமை (23) காலை குறித்த சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்ட ‘க்ளீன் புத்­தளம்’ அமைப்பின் உறுப்­பினர் ஒருவர் விசா­ர­ணையின் பின்னர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இதே­வேளை, புத்­த­ளத்­திற்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி, இந்த குப்பை விவ­காரம் தொடர்பில் பேசா­தது, சர்­வ­மத குழு மற்றும் க்ளீன் புத்­தளம் அமைப்­பி­னரை சந்­திப்­ப­தற்கு அனு­மதி வழங்­கா­தமை, ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்­காக போராட்டம் நடத்­தி­ய­வர்கள் மீது பொலிஸார் அடி­தடிப் பிர­யோகம் மேற்­கொண்­ட­மையை சமயத் தலை­வர்­களும், சமூக ஆர்­வ­லர்­களும் கண்­டித்­துள்­ளனர்.

எதிர்­கால சந்­த­தி­யி­னரை பாது­காக்கும் இந்த சரித்­திர போராட்­டத்தில் ஈடு­ப­டு­வோரை தடி­யடிப் பிர­யோகம் மேற்­கொண்­டாலும், கைது செய்து சிறையில் அடைத்­தாலும் இந்தப் போராட்­டத்­தி­லி­ருந்து மக்கள் பின்­வாங்கப் போவ­தில்லை எனவும் புத்­தளம் மக்­களின் இந்தப் போராட்­டத்­திற்கு புத்­தளம் மாவட்ட சர்­வ­மத குழுவின் ஆத­ரவு எப்­போதும் உண்டு என புத்­தளம் மாவட்ட சர்­வ­மத குழுவின் பொரு­ளாளர் ஸ்ரீலஸ்ரீ வெங்­கட சுந்­தரராம குருக்கள் தெரி­வித்தார்.

கடந்த 200 நாட்­க­ளுக்கு மேல் இந்த மக்கள் புத்­த­ளத்தில் குப்­பைக்கு எதி­ரான போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். கடந்த 19 ஆம் திகதி கொழும்பு காலி முகத்­தி­ட­லிலும் கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அப்­போது, ஜனா­தி­பதி செய­லகம் மற்றும் பிர­தமர் அலு­வ­லகம் என்­ப­வற்­றுக்குச் சென்று அதி­கா­ரி­களை சந்­தித்து இந்த குப்பைத் திட்டம் தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை சர்­வ­மத குழு நேரில் சந்­திக்க வேண்டும் எனவும் அதற்கு ஏற்­பாடு செய்து தரு­மாறும் கேட்­டுக்­கொண்டோம்.

அதற்கு விரைவில் அதற்­கான சந்­தர்ப்­பங்­களை பெற்றுத் தரு­வ­தாக ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் அலு­வ­லக அதி­கா­ரிகள் வாக்­கு­றுதி­ய­ளித்­தனர்.

இந்த நிலையில், கடந்த வெள்­ளிக்­கி­ழமை சில நிகழ்­வு­களில் கலந்­து­கொள்­வ­தற்­காக வருகை தந்த ஜனா­தி­ப­தியை ஒரு பத்து நிமி­டங்கள் சந்­திப்­ப­தற்கு சர்­வ­மத குழு மற்றும் க்ளீன் புத்­தளம் அமைப்­பி­ன­ருக்கு சந்­தர்ப்­பத்தை பெற்றுத் தரு­மாறும் சு.க. அமைப்­பா­ளர்­க­ளான விக்டர் அன்­டனி மற்றும் என்.டி.எம்.தாஹிர் ஆகி­யோரைக் கேட்­டுக்­கொண்டோம்.

ஜனா­தி­ப­தி­யுடன் சந்­திப்­ப­தற்கு சந்­தர்ப்பம் பெற்றுத் தரு­வ­தாக வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டதே தவிர, உறு­தி­யாக நேரம் பெற்றுத் தர­வில்லை. இத­னை­ய­டுத்து, புத்­தளம் மக்கள் ஜனா­தி­ப­தியின் கவ­னத்தை ஈர்க்கும் நோக்கில் அமை­தி­யான முறையில் கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்­து­வ­தென தீர்­மா­னித்து, ஜனா­தி­பதி வரு­கையை அடுத்து மக்கள் மிகவும் அமை­தி­யான முறை­யில்தான் போராட்டம் நடத்­தி­னார்கள்.

மக்கள் தெரிவு செய்த ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்கும், பிரச்­சி­னை­களை சொல்­வ­தற்கும் அந்த மக்­க­ளுக்கு உரி­மைகள் இருக்­கின்­றன.  அதை யாராலும் தடுக்க முடி­யாது.

எனவே,  இவ்­வாறு போராட்டம் நடத்­தி­ய­வர்கள் மீது பொலிஸார் நடந்­து­கொண்ட விதமும்,  இது­பற்றி ஜனா­தி­பதி கவனம் செலுத்­தாமல் இருப்­பதும் வேத­னையை ஏற்­ப­டுத்­து­கி­றது.எனவே, அர­சாங்கம் இன்­னமும் கடும் போக்­குடன் நடந்­து­கொள்­ளாமல், வெளி­நாட்டு ஆலோ­ச­னை­களைப் பெற்று, கொழும்பு குப்­பை­களை வேறு பகு­திக்கு எடுத்துச் சென்று மீள்­சு­ழற்­சிக்கு உட்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்டும்.

எந்தப் பாதிப்­புக்­களும் வரா­தென்று வாக்­குறு வழங்கி அமைக்­கப்­பட்ட அனல் மின்­சாரம்,  சீமெந்து தொழிற்­சாலை என்­ப­வற்றால் மக்கள். இன்றும் அவ­திப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை மீண்டும் இந்த அர­சாங்­கத்­திற்கு ஞாப­கப்­ப­டுத்­து­கிறோம்.

இதே­வேளை, குப்பை விவ­காரம் தொடர்பில் புத்­தளம் மக்கள் பொறு­மை­யாக செயற்­ப­டு­வ­துடன், அதி­க­மாக துஆ பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­டு­மாறும் புத்­தளம் பெரி­ய­பள்­ளி­வாசல் பொது­மக்­களை கேட்­டுள்­ளது.

இத்­தொ­டரில் புத்­தளம் பெரி­ய­பள்­ளி­வாசல் விடுத்­துள்ள அறிக்­கையில்,புத்­தளம் நகருக்கு வருகைதந்த ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி வழங்க கோரி அமைதியான போராட்டத்தை நடத்திய மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகள் வேதனையை அளிக்கிறது.

இன, மத வேறுபாடுகளின்றி, தியாகங்களுக்கு மத்தியில் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் இந்த சரித்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான புத்தளம் மக்களின் உணர்வுகளை அரசாங்கமும், அரசியல்வாதிகளும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதே சிவில் தலைமைகளின் எதிர்பார்ப்பாகும்.

அத்துடன்,  இத்தகைய அசம்பாவிதங்கள் மற்றும் சமூகத்தை அழிக்கக் கூடிய திட்டங்களிலிருந்து எமது ஊரையும், எமது சமூகத்தையும் பாதுகாக்க இறையச்சத்துடனும், உளத்தூய்மையுடனும் இறைவனிடம் துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்.அத்தோடு, வெள்ளிக்கிழமை அசம்பாவிதங்களில் காயப்பட்ட, வேதனைப்பட்ட, சட்ட சிக்கல்களுக்கு உட்பட்டுள்ளவர்களுக்கு இறைவன் உடல், உள சுகத்தை தர நாம் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.இதேவேளை, சமூகங்கள் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்க நினைக்கும் சில தீயசக்திகளின் முயற்சியில் மாட்டிக்கொள்ளாத வகையில் பொதுமக்கள் சமயோசிதமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.