குற்றம் நிரூபிக்கப்படா விட்டால் குற்றம் சுமத்தியவர்களுக்கு தண்டனை வேண்டும்
இலங்கையின் அரசியல் வரலாறு மாற்றம் கண்டுவிட்டது. முஸ்லிம் அமைச்சர்களின் பங்களிப்பில்லாத ஓர் அரசாங்கம் இன்று பதவி வகிக்கிறது. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகளில் சிலர் இனவாதக் கொள்கையிலேயே ஊறிப்போயிருக்கிறார்கள். அதன் விளைவுகளையே முஸ்லிம் சமூகம் இன்று எதிர்கொண்டுள்ளது.
நான்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதியமைச்சர் என 9 முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்து…