தெரி­வுக்­கு­ழு­வுக்கு ஆணை­யிட  ஜனா­தி­ப­திக்கு அதி­கா­ர­மில்லை

ஆளும் தரப்பு சுட்டிக்காட்டு 

0 632

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணை­களை மூடி­ம­றைக்க பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணை­களை இடை­நி­றுத்த முடி­யாது.  சாட்­சி­ய­ம­ளிக்க  முன்­வ­ரு­ப­வர்­களை தடுத்து நிறுத்தும்  அதி­காரம்  எவ­ருக்கும் கிடை­யாது . மீறி அழுத்­தங்கள் பிர­யோ­கிக்கும் பட்­சத்தில் உயர்­நீ­தி­மன்றில் ஆணையை பெற்­றுக்­கொள்ள முடியும்.  

பாது­காப்பு அதி­கா­ரி­களை  ஜனா­தி­பதி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு விசா­ர­ணைக்­க­ளுக்கு  அனு­ம­திக்­கா­விட்டால் அவ­ருக்கு  எதி­ராக உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்கு தொட­ர­மு­டியும்  என்று ஆளும் தரப்பின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்தார். ஏப்ரல் 21 பல்­வேறு இடங்­களில் இடம்­பெற்ற  தொடர் குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ரணை செய்­ய­வென நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற  தெரி­வுக்­குழு முன்­னி­லையில்  யாரும் வந்து சாட்சி வழங்க முடியும்.  நியா­ய­மான தீர்­வு­க­ளையும் உண்­மையை மக்­க­ளுக்கு வெளிக்­காட்­டு­வ­தற்­கா­கவே  இந்த தெரி­வுக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. சாட்­சி­ய­ம­ளிக்க முன்­வ­ரு­ப­வர்­க­ளுக்கு கட்­டா­ய­மாக இட­ம­ளிக்க வேண்டும். சாட்­சி­ய­ம­ளிக்க முன்­வ­ரு­ப­வர்­க­ளுக்கு  எவ­ராலும் தடை­வி­திக்க முடி­யாது என்றும் குறிப்­பிட்டார்.

தேசிய பாது­காப்­புக்கு பிரச்­சினை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான சாட்­சிகள் விசா­ரணை குழு­வுக்கு வழங்­கப்­ப­டு­மாக இருந்தால் தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணை­களின் போது அந்த சாட்­சி­களை, ஊட­கங்­களின் முன்­னி­லையில் இல்­லாமல்  தனி­யாகப் பெற்­றுக்­கொள்ளும் அதி­காரம் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வுக்கு உள்­ளது. அதே­போன்று  தேசிய பாது­காப்­புக்கு  பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக இந்த தெரி­வுக்­குழு நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அத­னையும் மீறி தெரி­வுக்­குழு விசா­ர­ணைகள் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான சாட்­சிகள் வழங்­கப்­ப­டு­மாக இருந்தால் அதற்குத்  தேவை­யான விசா­ரணை நுட்­பங்­களை உப­யோ­கிப்­ப­தற்­கான அதி­காரம்  தெரி­வுக்­கு­ழு­வுக்கு உள்­ளது.

தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டு­மாக இருந்தால்  அது மற்­ற­வர்­களின் குறை­பா­டு­களை மூடி மறைப்­ப­தா­கி­விடும். குறை­பா­டு­களை மூடி­ம­றைப்­ப­தற்­காக  விசா­ர­ணை­களை இடை­நி­றுத்த முடி­யாது என்றும் பாரா­ளு­மன்ற வட்­டாரம் தெரி­விக்­கின்­றது. அவ்­வாறு விசா­ர­ணை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­படும் பட்­சத்தில்  உயர் நீதி­மன்­றத்தில் முறைப்­பாடு செய்யும் அதி­கா­ரமும் தெரி­வுக்­கு­ழு­வுக்கு உண்டு.

இந்­நி­லையில்  தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணை­க­ளுக்கு பாது­காப்­புத்­துறை அதி­கா­ரி­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனு­ம­திப்­ப­தில்லை என்ற முடிவில் இருப்­பா­ராக இருந்தால்  தெரி­வுக்­கு­ழுவால் பாரா­ளு­மன்­றத்­துக்கு முறைப்­பாடு செய்ய முடியும்.

விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடங்கலை ஏற்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது. எதிர்வரும் டிசம்பர் மாதம் வரைக்குமே அவருக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆட்சியை விட்டு  வெளியேறிய பின்னரும்  தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு  இடையூறு ஏற்படுத்தினார் என்பதன் அடிப்படையில் அவர் மீது  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.