சிலர் இனவாதத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முயற்சி
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி சிலர் இனவாதத்தை – மதவாதத்தை தூண்டி அதனை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த முயற்சிப்பதாகவும், இவ்வாறான செயற்பாடுகளை சகல இன மக்களும் இணைந்து தோற்கடிக்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
‘ரன் மாவத்’ வேலைத்திட்டத்தின் கீழ் மாவனெல்லை, உயன்வத்த – வெலேகட வீதி அபிவிருத்தி பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் நெடுஞ்சாலைகள், வீதி…