முஸ்லிம் பெண்கள் வாக்களிப்பு நிலையத்திற்குள் மாத்திரம் முகத்தை திறந்துகொண்டால் போதும்

தேர்தல் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு வரு­கை­தரும் முஸ்லிம் பெண்கள் முகம் மூடும் வழமை உள்­ள­வர்­க­ளாக இருந்தால் முகத்தை மூடி வரலாம். ஆனால், வாக்­க­ளிப்பு நிலை­யத்­தி­லுள்ள அதி­கா­ரி­க­ளுக்கு முகத்தை திறந்து அடை­யா­ளப்­ப­டுத்­தினால் போது­மா­ன­தென்று தேர்தல் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் ரட்­ன­ஜீவன் ஹூல் தெரி­வித்தார்.

முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடக்கும் என நான் கூறவில்லை

குறிப்­பிட்­ட­தொரு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளிக்கும் தீவி­ர­வாத சக்­திகள் நவம்பர் 16 ஆம் திகதி தேர்­த­லுக்குப் பின்பு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை மீள ஆரம்­பிக்கக் கூடு­மென தான் தெரி­வித்­த­தாக ஊட­கங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­திகள் அப்­பட்­ட­மான பொய் எனவும் அவ்­வா­றான கருத்­தினை தான் ஒரு­போதும் வெளி­யி­ட­வில்லை எனவும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான முன்னாள் இரா­ணுவத் தள­பதி மகேஷ் சேன­நா­யக்க விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

ரூ. 500 மில்லியன் நஷ்டஈடு கோரி அலி சப்ரிக்கு எதிராக வழக்கு

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி­சப்­ரிக்கு எதி­ராக 500 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் ஹரின் பெர்­னாண்டோ தெரி­வித்தார். ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அலி சப்ரி, ஹரின் பெர்­னாண்­டோவும் அவ­ரது தந்­தையும் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான தக­வல்­களை மறைத்து பொது­மக்கள் 300 பேர் உயி­ரி­ழக்க கார­ண­மா­கினர் என குற்றம் சுமத்­தி­யி­ருந்த நிலையில், இதற்கு எதி­ரா­கவே அவர் இவ்­வாறு வழக்கு தாக்கல்…

தேர்தல் வன்முறைகள்:

ஜனா­தி­பதித் தேர்­த­லுடன் தொடர்­பு­டைய 3519 முறைப்­பா­டுகள் இது­வரை தேர்தல் ஆணைக்­கு­ழுவில் ப­திவா­கி­யுள்­ள­தாக தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. கடந்த ஒக்­டோபர் மாதம் 8 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தி­யி­லேயே இம்­மு­றைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ளன. தேர்தல் விதி­மீ­றல்கள் தொடர்பில் 3387 முறைப்­பா­டு­களும், வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் 26 முறைப்­பா­டு­களும் மற்றும் 106 வேறு முறைப்­பா­டு­களும் கிடைக்கப் பெற்­றுள்­ளன.