குடியுரிமை குறித்த ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழு கோருவதில்லை
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவினது அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணங்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்ட ஆலோசகர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தாலும் அவ்வாறான எந்த ஆவணமும் பெற்றுக் கொள்ளப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.