இனவாத சக்திகளிடம் ஆட்சியை ஒப்படைத்தால் முஸ்லிம்கள் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
கடந்த கால இனவாத வன்செயல்களின் பின்னணியில் இருந்து இயக்கியவர்களிடத்தில் ஆட்சியை ஒப்படைத்தால் எவ்வாறான பாரதூரமான விளைவுகளுக்கு சமூகம் முகங்கொடுக்க நேரிடும் என்பதைப் பற்றி சிந்தித்து, அவற்றிலிருந்து விடுபடுவதற்காக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.