சபை குழப்­பங்கள் குறித்த விசா­ரணை: பிரதி சபா­நா­யகர் தலை­மையில் அறுவர் அடங்­கிய குழு நிய­மனம்

கடந்த பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் சபையில் இடம்­பெற்ற குழப்­ப­மான சம்­ப­வங்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்கு பிரதி சபா­நா­யகர் தலை­மையில்  ஆறுபேர் அடங்­கிய குழுவை நிய­மித்­தி­ருப்­ப­தாக சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அறி­வித்தார். பாரா­ளு­மன்றம் நேற்று வியா­ழக்­கி­ழமை  காலை 10.30 மணிக்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய  தலை­மையில் கூடி­ய­போது சபா­நா­யகர் அறி­விப்பு வேளையில் அவர்  இந்த அறி­விப்பை விடுத்தார். நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திக­தி­களில் சபைக்குள் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் குறித்து பொலிஸார் விசா­ர­ணைகளை ஏற்­க­னவே…

கனு­கெட்­டி­யவில் முஸ்லிம் வர்த்­த­கரின் கடை தீக்­கிரை

புத்­தளம்- குரு­நாகல் பிர­தான வீதியில் அமைந்­துள்ள கனு­கெட்­டிய நகரில் முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலையம் ஒன்று நேற்று முன்­தினம் இரவு தீக்­கி­ரை­யா­கி­யுள்­ளது. கட்­டிடப் பொருட்கள் விற்­பனை செய்யும் வர்த்­தக நிலையம் ஒன்றே இவ்­வாறு தீயில் எரிந்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இத் தீ விபத்­துக்­கான காரணம் இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு, பாணந்­துறை நகரில் இவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான நான்கு வர்த்­தக நிலையங்கள் தீயில் எரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.…

ஐக்கிய தேசிய முன்னணியை ஆத­ரிக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மானம்

ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினை அமைப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தமது முழு­மை­யான ஆத­ரவை வழங்கத் தீர்­மா­னித்­துள்­ளது. ஆகவே ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யினால் நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றத்தின் பெருன்­பான்­மை­யினை பெறக்­கூ­டி­யவர் என  கருதும் நபரை பிர­த­ம­ராக  நிய­மிக்க வேண்­டு­மென தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­திக்கு கடிதம் மூலம் தெரி­வித்­துள்­ளது. ஜனா­தி­ப­திக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் இந்தக் கார­ணி­களை அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். அதில்…

நெருக்­கடிக்கு தீர்வு காண ஜனா­தி­பதி இணக்கம்

நாட்டில் தொடரும் அர­சியல் நெருக்­க­டிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனா­தி­ப­திக்கும் சபா­நா­யக­ருக்குமிடையில் நேற்று இடம்­பெற்ற சந்­திப்பில் இணக்­கப்பாடு எட்டப்பட்டுள்­ள­தாக சபா­நா­யகர் அலு­வ­லகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் இன்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரையும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் சந்­தித்துப் பேச்சுவார்த்தை நடத்­த­வுள்­ள­தா­கவும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில்…