யெமனுக்கான ஐ.நா விசேட தூதுவர் போராளிகளின் பகுதிக்கு விஜயம்

சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் ஹெளதி போராளிகளுக்கும் இடையே இம் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் யெமனுக்கான பிரதிநிதி மார்டின் கிரிபித்ஸ் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை விஜயம் செய்தார். சவூதி அரேபியா உள்ளிட்ட அரேபிய கூட்டுப் படைகளின் பின்னணியைக் கொண்ட யெமனின் இராணுவ நடவடிக்கைகள் இலக்காகக் கொண்டுள்ள இறக்குமதி மற்றும் உதவிகளுக்கான உயிர்நாடியாகக் காணப்படுகின்ற ஹெளதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஹுதைதா துறைமுகத்தைச் சூழவுள்ள…

வடக்கு கிழக்கு யுத்த பாதிப்பு: முஸ்லிம்கள் நஷ்டஈடு கோரி போதுமானளவு விண்ணப்பிக்கவில்லை

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்களில் பெரும்­பா­லானோர் நஷ்­ட­ஈடு கோரி விண்­ணப்­பிக்­காமை அறி­யப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் பகு­தி­களைச் சேர்ந்த அநேகர் அறி­யாமை கார­ண­மாக விண்­ணப்­பிக்கத் தவ­றி­யுள்­ளனர். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட அசையும், அசை­யாத சொத்­து­க­ளுக்கும் மத நிலை­யங்­க­ளுக்­கு­மான நஷ்­ட­ஈ­டு­க­ளுக்கு  விண­்ணப்­பிக்­கா­த­வர்கள் உட­ன­டி­யாக விண்­ணப்­பிக்­கும்­படி வடக்கு அபி­வி­ருத்தி, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு பிர­தி­ய­மைச்சர் காதர் மஸ்தான் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.…

எகிப்தில் அல் ஜெஸீரா ஊடகவியலாளரின் தடுப்புக் காவல் மேலும் 45 நாட்களுக்கு நீடிப்பு

அல் ஜெஸீரா ஊடகவியலாளரான மஹ்மூட் ஹுஸைன் விசாரணைகள் எதுவுமின்றி 713 நாட்களை சிறையில் கழித்துள்ள நிலையில் அவரது தடுப்புக் காவல் எகிப்திய அதிகாரிகளால் மேலும் 45 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 19 ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் பின்னரே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் அவரது சட்டத்தரணிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையே அறிவிக்கப்பட்டது. கட்டாரைப் பிறப்பிடமாகக் கொண்ட செய்தித் தயாரிப்பாளரான மஹ்மூட் ஹுஸைன் பொய்யான செய்திகளை பரப்புவதாகவும், அரசாங்க நிறுவனங்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு…

நீதிமன்ற தடை உத்தரவுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும்

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ  மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை கெளரவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்ட பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது…