நெருக்­கடிக்கு தீர்வு காண ஜனா­தி­பதி இணக்கம்

சந்­திப்பு வெற்­றி­ய­ளித்­த­தாக சபா­நா­யகர் அறிக்கை

0 708

நாட்டில் தொடரும் அர­சியல் நெருக்­க­டிக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனா­தி­ப­திக்கும் சபா­நா­யக­ருக்குமிடையில் நேற்று இடம்­பெற்ற சந்­திப்பில் இணக்­கப்பாடு எட்டப்பட்டுள்­ள­தாக சபா­நா­யகர் அலு­வ­லகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் இன்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரையும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் சந்­தித்துப் பேச்சுவார்த்தை நடத்­த­வுள்­ள­தா­கவும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் சபா­நா­யகர் அலு­வ­லகம் விடுத்துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது;

நாட்­டுக்குள் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­மான அர­சியல் நிலை­வரம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். பல்­வேறு கட்சித் தலை­வர்கள் விடுத்த கோரிக்­கைக்கு அமை­வா­கவே சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இவ்­வாறு ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

இந்­நி­லையில் இந்தப் பிரச்­சி­னையை விரை­வாக தீர்க்கும் நோக்கில் இன்று 30ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்தன் மற்றும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கூட்­டுக்­கட்சித் தலை­வர்­க­ளுடன் தனித்­த­னி­யாக சந்­திப்­புக்­களை நடத்தி பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்­வு­காண்­ப­தற்கும் இதன்­போது இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலைவர் என்ற அடிப்­ப­டையில் ஐ.தே.க.வின் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன், ஜாதிக ஹெலஉறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஆகியோரை இன்றைய தினம் சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது. எனினும் ரணில் விக்கிரமசிங்க இந்த சந்திப்பில் கலந்துகொள்வாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.