உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: ஏப்ரல் 21 க்கு முன் அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தை தேர்தல் காலத்தில் வாக்கு வங்கிக்காக பயன்படுத்திக்கொள்வது முறையற்றது. அசாத் மௌலானா 21ஆம் திகதிக்கு முன்னர் நாட்டுக்கு வருவாரா, ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி வெளிப்படுத்தும் உண்மையை நாங்களும் எதிர்பார்த்துள்ளோம் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.