20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்தோரை நீக்கினால் ஹக்கீமுடன் இணைந்து பயணிக்க தயார் என்கிறார் ரிஷாத் பதியுதீன்
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து சமூகத்தை காட்டிக் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காது அவர்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு வந்தால், மு.கா. மற்றும் அதன் தலைவர் ஹக்கீமுடன் ஒன்றிணைந்து பயணிக்கத் தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அறிவித்துள்ளார்.